புதன், 30 ஜூன், 2010

ஆட்டுவித்தால் ஆடுவாரா மகிந்த ?-இதயச்சந்திரன்

வடக்கை இராணுவமயமாக்கும் தீவிரப் பணியில், சிங்களம் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளது. சர்வதேச தன்னார்வுத் தொண்டு நிறுவனங்களை அனுமதிக்காது, தாமே மீள்குடி யேற்ற நடவடிக்கைகளை மேற்கொள்வதாகக் கூறும் சிங்கள அரசு, இறுதிப்போரின் இன அழிப்புச் சான்றுகளை அழித்துவருகிறது. முல்லைத்தீவில்

ஐ.நா.வின் நிபுணர் குழுவுக்கு ஒத்துழைப்பு வழங்க தயார்...

ஐக்கிய நாடுகளின் செயலாளர் பான் கீ மூனினால், அமைக்கப்பட்டுள்ள நிபுணர் குழுவிற்கு தாம் ஒத்துழைப்பு வழங்க தயார் என தமிழீழ விடுதலைப்புலிகள் அறிவித்துள்ளனர்.

லெப்டினன்ட் கேணல் ஜீவன்(பிள்ளையான் சந்திரமோகன் கதிரவெளி, மட்டக்களப்பு. மட்டு - அம்பாறை மாவட்ட துணைத் தளபதி )

கையெட்டும் தூரமே கண்ணுக்குத் துலங்காத மைசொட்டும் இரவு. உடலெங்கும் உரிமையோடு கை போட்டிருக்கும் முள் செடிகள். கொழும்பு ரோட் (மட்டு. - கொழும்பு நெடுஞ்சாலை) அண்மித்து விட்டதால் காலணிகள் கைக்கு ஏறுகின்றன. ரைபிள் சிலிங்குகள் சலசலக்காது இறுக்கிப் பிடிக்கப்படுகின்றன. ஆபத்தைத் தவிர்க்கும் அளவிற்கு அவசியமான இடைவெளி விட்டு முன்னே செல்பவரின் சிறு அரவத்தைக் கொண்டு திசையறிந்து செல்வதே ஒரு கலை. தென் ஈழக் காடுகளிலே இந்தக் காலைதான் அவசியமான அரிச்சுவடி.

தமிழீழக் கோரிக்கையை அழிக்க முடியாது!

தமிழீழக் கோரிக்கையை தமிழ் மக்களின் மனங்களில் இருந்து அழிக்க முடியாது எனவும், அது என்றும் உயிர்வாழ்ந்து கொண்டு இருப்பதால், தமிழ் மக்களின் பிரச்சினைக்கு உரிய தீர்வு காணப்பட வேண்டியது அவசியம் எனவும், டுபாயில் இருந்து வெளியாகும் கல்ப் நியூஸ் (Gulf News) பத்திரிகை இன்றைய தனது தனது அபிப்பிராயப் பத்தியில் தெரிவித்துள்ளது.

வன்னியில் பேரழிவு யுத்தம் நடந்த காலப்பகுதியில் ..................?

தொடர்ச்சியா ஈழ விசயத்தில் மற்றவர்களை விட்டுவிட்டு கருணாநிதியை கடுமையாக திட்டுவதற்க்கு கருணாநிதியின் மீதான எந்த காழ்ப்புணர்ச்சியோ சொந்த இதர எரிச்சல்களோ இல்லை, ஈழ விசயத்தில் கருணாநிதியால் ஏதாவது செய்திருக்க இயலும் என்ற ஒரே காரணம், அதை பதவிக்காகவும் ஊழல் பணத்துக்காகவும் தன் குடும்பத்துக்காகவும் ஈழக்குருதியை குடித்து விட்டார் என்பதே அத்தனை கோபங்களுக்கும் முதல் காரணம்...

தமிழ்நாடு நடிகர்கள் .............

பற்றி எரிந்துகொண்டிருக்கிறது ஈழம், ஆனால் இங்குள்ள தமிழ் எழுத்தாளர்கள், கவிஞர்கள் எல்லாம் அதில் குளிர்காய்கிறார்கள். இணையத்தில் நாம் எழுதாவிட்டால் இதைப்பற்றி யாரும் மூச்சுவிட மாட்டார்கள். தமிழ் வார இதழ்களில் விகடன்,குமுதம் மற்றும் நக்கீரனை தவிர வேறு யாரும் எழதவில்லை நாளிதழ்களில் தந்தி, மாலைமலர் தவிர வேறு எதுவும் எழுதவில்லை.

இ‌ஸ்லா‌மிய நாடுக‌ளி‌ல் அமை‌தி ‌நிலவ வே‌ண்டு‌ம்!

பால‌ஸ்‌‌தீன‌ம், இ‌ஸ்ரே‌ல் இடையே ‌நீடி‌த்து வரு‌ம் மோதலு‌‌க்கு ‌நிர‌ந்தர ‌தீ‌ர்வு கா‌ண்பத‌ற்கு அமெ‌ரி‌க்கா, சவு‌தி அரே‌பியா இணை‌ந்து முய‌ற்‌‌சிகளை தொடர உ‌ள்ளதாக அ‌திப‌ர் ஒபாமா தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர். ஜி 20 உறு‌ப்பு நாடுக‌‌ள் கூ‌ட்ட‌த்த‌ி‌ல் ப‌ங்கே‌ற்க வா‌‌ஷி‌ங்ட‌ன் செ‌ன்று‌ள்ள சவு‌தி அரே‌பியா ம‌ன்ன‌ர் அ‌ப்து‌ல்லா, அமெ‌ரி‌க்க அ‌திப‌ர் ஒபாமாவை ச‌ந்‌தி‌த்து பே‌ச்சுவா‌ர்‌த்தை நட‌த்‌‌‌‌தினா‌ர்.

இணக்கப்பட்டின் பிரகாரமே நிபுணர்கள் குழு அமைக்கப்பட்டது !

யுத்தம் முடிவடைந்திருந்த நிலையில் இலங்கை வந்திருந்த ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூனுக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்குமிடையேயான இணக்கப்பாட்டினடிப்படையிலேயே ஐ.நா செயலாளர் நாயகத்திற்கான ஆலோசனைக் குழு நியமிக்கப்பட்டுள்ளதாக முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

சோழியன் குடும்பி சும்மாவா ஆடும் ...

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா எதிர்வரும் வட மாகாண சபைத் தேர்தலில் முதலமைச்சர் பதவிக்காக போட்டியிடவுள்ளதாக தெரிவித்துள்ளார். தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து கொள்வதற்கு பகீரத முயற்சிகளை மேற்கொண்டுவரும் டக்ளஸ் தேவானந்தா எந்தக்கட்சியில் போட்டியிடவுள்ளார் என்பதனை இதுவரை வெளியிடவில்லை

இந்த தத்துவம் கூறியவர் .........திரு.கமலக்கண்ணன்

கேபி என்றழைக்கப்படுகின்ற குமரன் பத்மநாதன் நினைத்தால் கூட விடுதலை புலிகளின் நிதியினை இலங்கைக்குள் கொண்டு வரமுடியாது. எனவே சர்வதேச புலம்பெயர் தமிழர்கள் நேரடியாகவேனும் வன்னி மக்களுக்கு உதவ முன் வரவேண்டும். இதற்கான ஏற்பாடுகளை இலங்கை அரசு ஒழுங்கு படுத்திக்கொடுக்கும் என்று மீளக்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.

செவ்வாய், 29 ஜூன், 2010

இந்த நாட்டில் கடைசி தேசப்பற்றாளன் இருக்கும் வரையில் பான் கீ மூனின் குழுவினர் இங்கு கால்பதிக்க இடமளிக்க போவதில்லை-ஹெல உறுமய

உயிரைக் கொடுத்தேனும் பான் கீ மூனின் மூவர் கொண்ட குழுவை நாட்டுக்குள் காலடி வைக்க விடமாட்டோம். இந்த நாட்டின் கடைசி தேசப் பற்றாளன் இருக்கும் வரை பான் கீ மூனின் எண்ணம் ஈடேறாது.


இவ்வாறு ஜாதிக ஹெல உறுமயவின் சட்ட ஆலோசகர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். கொழும்பிலுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான தலைமையகத்திற்கு முன்பாக நேற்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேஜர் மாறன்(சின்னத்துரை சுகுமாரன் - வவுனிக்குளம் )

பிரிட்டிஸ் ஏகாதிபத்தியத்தை இறுதிவரை எதிர்த்து நின்று போராடி வீர வரலாறுபடைத்த தமிழ் மன்னன் பண்டாரவன்னியனால் பெருமைப்படுத்தப்பட்ட மண் வன்னிப் பெருநிலப்பரப்பு. காடுகளும், குளங்களும், விளைநிலங்களும், காட்டு விலங்குகளும், மந்தைகளும் இம்மண்ணின் செல்வங்கள். இத்தகையதொரு விவசாயக் கிராமமான வவுனிக்குளம்தான் சுகுமாரன் என்ற இயற்பெயரோடு மேஜர் மாறன் பிறந்த ஊர்.

களத்திலும் புலத்திலும் ஒருமித்த அரசியல் பாதையூடாக செயலூக்கம் பெறவேண்டும்: கேணல் ஹரிஹரன்

“ஈழத்தமிழர்களின் உரிமைப் பிரச்சினையை இலங்கையிலும் மற்றும் சர்வதேச அளவிலும் அரசியல் பாதையில் முன்வைக்க வேண்டும். அதற்கு ஒருங்கிணைந்த செயல்பாட்டில் ஈழத்தமிழர்கள் பங்குபெற வழி செய்ய வேண்டும். நடைமுறையில் இயங்கக்கூடிய அடிப்படை செயல்பாட்டை. உருவாக்கி அதை ஒரு குரலுடன் எடுத்து முன்வைக்க தமிழ் தலைவர்கள் தயாராகவேண்டும். புலம்பெயர்ந்த தமிழர்கள் கடந்த காலத்தில் தாங்கள் நடந்து கொண்ட வழிமுறைகளை மனக்கண்ணாடியில் பார்த்து புதிய செயலாக்கங்களை உருவாக்க வேண்டும். பழையன கழித்துப் புதியன புகுத்தும் நேரம் வந்துவிட்டது.”

53 வது படைப்பிரிவின் கட்டளையிடும் தளபதி- புதிய இராணுவ பேச்சாளர்

இதுவரை இராணுவப் பேச்சாளராக பதவி வகித்த மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க இராணுவத்தின் பிரதான தொலைத் தொடர்பு அதிகாரியாகவும், சமிக்ஞை அதிகாரியாகவும், இராணுவ மருத்துவ பிரிவின் பொறுப்பாளராகவும் தொடர்ந்து சேவையாற்றுவார்.

சந்திப்பு?!

தமிழ் மக்களின் அரசியல் தீர்வு மற்றும் அவசிய, அவசரப் பிரச்சினைகள் குறித்து தமிழ்க் கட்சிகள் ஒருமித்துக் குரல் கொடுக்க வேண்டும் என்ற நோக்குடன் தமிழ்க்கட் சிகளின் கூட்டம் ஒன்று நாளை மறுதினம் முதலாம் திகதி நடைபெறவுள்ளது.

புலம்பெயர் மக்களை தம்மிடம் மண்டியிட வைப்பதே சிறீலங்கா அரசின் நோக்கம் -மருத்துவர் வேலாயுதபிள்ளை அருட்குமார்

செல்வராசா பத்மநாதனை சிறீலங்காவின் படைப் புலனாய்வாளர்களே இயக்கி வருவதாகவும், அவரூடாக புலம்பெயர் மக்களை தம்மிடம் மண்டியிட வைப்பதே சிறீலங்கா அரசின் நோக்கம் என, அண்மையில் கே.பியுடன் சிறீலங்காவின் பாதுகாப்பு அமைச்சின் செயலர் கொட்டாபய ராஜபக்சவைச் சந்தித்து, பிரித்தானியா திரும்பியுள்ள மருத்துவர் வேலாயுதபிள்ளை அருட்குமார் அம்பலப்படுத்தியுள்ளார்.

இந்தியா எங்களோடு இருந்தால் போதும்.....!

தமிழர்கள் எதிராக நடந்த போர்க் குற்றங்கள் குறித்து உலக நாடுகளும், ஐ.நா.வுன் என்ன கூறுகின்றன என்பது குறித்து தனக்கு கவலையேதும் இல்லை என்று கூறியுள்ள சிறிலங்க அதிபர் மகிந்த ராஜபக்ச, இந்தியாவும், அண்டை நாடுகளும் தங்களோடு இருந்தால் போதுமானது என்று கூறியுள்ளார்.

அமெரிக்காவில் 10 ரஷ்ய உளவாளிகள் கைது!

அமெரிக்காவில் சாதாரண மக்களைப் போல தங்கி உளவு பார்த்து வந்த 10 ரஷ்யர்களை அமெரிக்க அதிகாரிகள் கைது செய்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த பத்து பேரும் கடந்த சில ஆண்டுகளாகஅமெரிக்காவில், சாதாரணர்கள் போல வசித்து வந்துள்ளனர்.

திங்கள், 28 ஜூன், 2010

பொருளாதார வளர்ச்சியை எட்ட சமநிலையான அணுகுமுறை.. -G20

நிதி பற்றாக்குறையை குறைக்கவும், பொருளாதார வளர்ச்சியை எட்டவும் சமநிலையான அணுகுமுறையை கடைபிடிக்க வேண்டும் என்று ஜி 20 நாடுகள் அறைகூவல் விடுத்துள்ளன.

வீரவேங்கை பகீன்(அன்னலிங்கம் பகீரதன் மண்டைதீவு)

வீரவேங்கை பகீனுக்கு எப்போதும் சந்தேகம் இந்த சயனைட் வேலை செய்யுமாவென்று. தமது சந்தேகத்தைத் தீர்த்துக் கொள்ள அடிக்கடி தனக்கு மேலுள்ள பொறுப்பாளரிடம் கேட்பார் "அண்ணை இது வேலை செய்யுமோ?" என்று
"அது வேலை செய்யும் போடா" என்று அந்தப் பொறுப்பாளரும் அவரை அனுப்பி வைப்பார். எத்தனை தரம் அந்தப் பொறுப்பாளர் பகீனிடம் கூறினாலும் அதில் அவருக்குத் திருப்தி யில்லை.

சிறிலங்காவில் சிறு சிறு வன்முறைகளே இடம்பெற்றுள்ளனவாம்!

30 வருடங்கள் இடம்பெற்ற நீண்டகால யுத்தத்தில் ஓரிரு சிறு சம்பவங்களே இடம்பெற்றன. அவற்றைப் பெரிதுபடுத்தவேண்டிய அவசியமில்லை என்று பிரதமர் டி.எம். ஜயரத்ன தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் 15 ஆவது வருட ஒன்றுகூடலின்போது பிரதம அதிதியாகக் கலந்து உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.

உளவியல் போர்!!உளவியல் போர்!!உளவியல் போர்!!

உலகெங்கும் வாழும் தமிழ் உறவுகள் போருக்கு தம்மை தயார்படுத்திக் கொள்ள வேண்டிய தருணத்திற்கு வந்திருக்கிறார்கள். இந்த போரிலே வெடிமருந்து கிடையாது. துப்பாக்கி கிடையாது. பீரங்கி கிடையாது. இதில் யார் அதிகம் பொய் பேசி வெற்றி பெறுவது என்பதுதான். பொய்யினால் மனதை நிலைகுலைய செய்து, அடுத்தக்கட்டத்திற்கு நம்மை நகரவிடாமல் தடுக்கும் உளவியல் போர்.

மகிந்த இந்திய ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வி!

சிறிலங்கா தொடர்பில் இந்தியாவும் எமது அயல்நாடுகளுமே எனக்கு முக்கியம். ஏனைய நாடுகள் பற்றி எனக்க கவலை இல்லை. நாட்டில் தற்போதுதான் போர் முடிவடைந்திருக்கிறது. படிப்படியாகத்தான் சகலதையும் செய்யலாம். தீர்வுத்திட்டம் என்பது.....

ஜி.எஸ்.பி. வரி சலுகை ஆகஸ்ட் மாதம் முற்றாக நிறுத்தம்...

ஜி.எஸ்.பி. பிளஸ்' வரிச் சலு கையை ஓகஸ்ட் 15ஆம் திகதி முதல் நிறுத்துவது என ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானித்துள்ளது என கொழும்பிலுள்ள அதன் தூதுவர் தெரிவித்துள்ளார்.

கே.பி க்கு பொதுமன்னிப்பு வழங்குவது தொடர்பாக கூறமுடியாது.....

புலிகள் அமைப்பிற்கான ஆயுதக்கொளவனவாளரும் பிரபாகரனின் மரணத்தின் பின்னர் அவ்வியக்கத்தின் தலைவர் என தன்னை உலகிற்கு அறிமுகப்படுத்தி கொண்டவருமான கே.பி க்கு பொது மன்னிப்பு வழங்குவது தொடர்பாக தற்போதைக்கு எதுவும் திடமாக கூறமுடியாது என ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வல தெரிவித்துள்ளார்.

செய்தித் துளிகள்

வடக்கின் புனர்வாழ்வுத் திட்டங்களுக்கு நிதி திரட்டும் நடவடிக்கையில் கே.பி.!

ஞாயிறு, 27 ஜூன், 2010

ரத்தத்தை கழுவுகிறான் நரிச்சிரிப்புடன்

வெறுப்பாய் இருக்குது தமிழே!
நெருப்பாய் இல்லாத தமிழனால்!
உன் மீதே
வெறுப்பாய் இருக்குது தமிழே!


ஆரிய அடக்குமுறைக்கு எதிரான
ஆயுதமாய் இருந்தாயே! தமிழே


சமத்துவம், சமதர்மம் என கொள்கைகளை
பறக்கவிட்ட சமணமுனிகளின் சாம்ராஜ்யத்தை
சரித்த ஆயுதமாய் இருந்தாயே! தமிழே

குடிவரவினை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் பிரித்தானியா!

குடிவரவினை கட்டுப்படுத்த விசேட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பிரித்தானியாவின் புதிய அரசாங்கம் அறிவித்துள்ளது.
பிரித்தானியாவிற்குள் குடியேறுவோரின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்படுகிறது.

கடற்கரும்புலி லெப்டினன்ட் கேணல் அமுதசுரபி - அல்பா சின்னப்பு நந்தினி யாழ்பாணம்

தாயகத்தைக் காப்பதற்காய் கனத்த மடிகளாய் கரையைத் தேட முயலும் படகுகள் இயந்திரப் பிழைகளால் வேகம் குறைய, தொடரணியாய் எம் கடற்பரப்பில் நகரும் எதிரிகளோடு மாட்டுப்பட வேண்டிவரும் பொழுதுகளில், அல்பாவின் குரல் உயர் அலை வரிசைச் சாதனத்தில் ஒலிக்க நம்புவோம் நாங்கள், எங்கள் கரை தூரத்தில் இல்லை என்று.

உமக்கென தலையெழுத்தோ,
யாருக்கும் இலா உணர்ச்சி
உமக்கு ஏன்?எங்கே உம் உடமைகள்?
எங்கே உம் இருப்பிடம்?
எங்கே உம் உறவுகள்?
எங்கே உம் செல்வங்கள்?
முற்றும் துறந்தவனே மேல்..
உண்ண, உறங்க மடமுண்டு...
உமக்கோ?யாருக்காக?.
அடுத்திங்கு மண்ணில் பிறக்கும்
ஒவ்வொரு சிசுவிலும் உமதுணர்ச்சி
குருதியோடு கலந்திட வேண்டும்..
வாழ்க தமிழ், வாழ்க தமிழினம்,
வாழ்க தமிழினத் தலைவன் நீர்

சர்வதேச ரீதியில் வலிமைமிக்க இரண்டு தரப்புகளுடன் இலங்கை அரசாங்கம் பகிரங்க மோதலில் இறங்கியுள்ளது!

சர்வதேச ரீதியில் வலிமைமிக்க இரண்டு தரப்புகளுடன் இலங்கை அரசாங்கம் பகிரங்க மோதலில் இறங்கியுள்ளது. முதலாவது -தரப்பு ஐ.நாவும் அதன் பொதுச்செயலர் பான் கீ மூனும். இரண்டாவது -தரப்பு ஐரோப்பிய ஒன்றியம்.
இந்த இரண்டு தரப்புகளுடன் இலங்கை அரசு அண்மைக்காலமாக முரண்பட்டு வந்தது. ஆனால் இப்போது அது பெரும் பூகம்பமாக வெடித்துள்ளது.

சனி, 26 ஜூன், 2010

அரசாங்கத்தின் சாட்சியாக தற்பொழுது கே.பி!!!!??


வன்னிப் போரின் இறுதிக்கட்டத்தின் பொழுது தமிழீழ விடுதலைப் புலிகளின் வெளியுறவுத் தொடர்பாளராக நியமிக்கப்பட்ட கே.பி என்றழைக்கப்படும் செல்வராசா பத்மநாதன், சிங்கள அரசுடன் இணைந்து இயங்கி வருவது தொடர்பான தகவல்கள்

எதிரியை வீழ்த்துவோம் ........

எமது கருத்துக்கெதிராக முரண்களம் அமைப்பதாக கருதி இனவிரோதிகளாக சிலர் கருத்து தெரிவிக்கத் தொடங்கி இருக்கிறார்கள். பழமை பேசாதீர்கள், குழந்தைகளை வன்முறையாளர்களாக்காதீர்கள் என்றெல்லாம் பேசுவதின்மூலம் இவர்களில் பலர் புத்தனின் வாரிசுகளாக இல்லையெனில் அமைதியின் குழந்தைகளாக தம்மை பாவித்துக் கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறார்களோ என்று தோன்றுகிறது.

மேஜர் நேரியன்

ஓ அந்த நாள் எங்கள் இதயத்தை இடி வந்து தாக்கிய நாள் எம்முயிர்த் தோழன் விதையாகிப் போன செய்தியது. எம் செவிப்பறையை அதிரவைத்த நாள். எம் வாழ்வுக் காலமதில் காலக்கடல் கரைத்துச் சென்ற நாட்களில் சோகத்தின் எல்லையைத் தொட்ட நாள். நீளும் எங்கள் இவன் கனவினை வாழ்வில் சுமப்போம். என்பதை எங்கள் எழுத்தால் மட்டுமல்ல எம் உள்ளத்தாலும்.....

கபட நோக்கம் கொண்ட சிறிலங்கா அரசின் முயற்சிகள் தொடர்பில் புலம்பெயர் மக்கள் மிக விழிப்புடனும் கூட்டுப்பொறுப்புணர்வுடனும் செயற்படவேண்டும்.

சிறிலங்கா அரசு முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பின்னர் சர்வதேசத்தின் நெருக்கடிகளை எதிர்கொண்டுவருகின்ற அதே வேளை தமிழர் உரிமைக்கான போராட்டத்தினை நசுக்க தொடர்ந்தும் திட சங்கற்பம் பூண்டுள்ளது.


தமிழ் மக்களின் உரிமைக்கான போராட்டம் என்பது சர்வதேச ரீதியாக பல வழிகளில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. தமிழீழ விடுதலைப்புலிகளை அழிப்பதன் மூலம் தமிழர்களின் போராட்டத்தின் இலட்சியத்தை அழித்துவிடலாம் என்ற............

சிறீலங்கா ஐ.நா முறுகல்!

இலங்கையின் பதிலளிக்கும் கடப்பாடுகள் தொடர்பாக ஆராய்ந்து தனக்கு ஆலோசனை வழங்க ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் நியமித்திருக்கும் விசேட நிபுணர் குழு இலங்கை வர அனுமதி வழங்கப்பட மாட்டாதென அரசாங்கம் நேற்று வியாழக்கிழமை திட்டவட்டமாகத் தெரிவித்திருக்கிறது.இந்த விசேட நிபுணர் குழு இலங்கை வருவதற்கான விசா அனுமதி வழங்கப்பட மாட்டாதென

வரலாறு உங்கள் கைகளில்! தந்துள்ள காலங்களையும், சந்தப்பத்தையும் பயன்படுத்துங்கள்....

விடுதலைப் புலிகளின் தலைமைகளின் அழிவுடன் அதன் தகமைகளும் அழிவடைந்துவிட்டதை யாராலும் மறுக்க முடியாத கட்டாய கால கட்டத்திற்குள் உள்ளோம் என்பதை சகல தரப்பாரும் ஏற்றுக் கொள்ள வேண்டும். இங்கு தகமை இழந்தது வெறும் விடுதலைப் புலிகள் மட்டுமல்ல தமிழர்களும் தான். இக் கருத்தை ஏற்பதில் கடினமாக இருக்கலாம், ஆனால் அதுவே உண்மை.

சட்டத்தரணியான சந்திம அனில் வித்தானராச்சி என்பவரை லண்டனில் கைது செய்ய கொழும்பு நீதிமன்று உத்தரவு

இலங்கை அரசாங்கத்திற்கு எதிரான பொய்யான செய்திகளை வெளியிட்டுவரும் லங்கா நியூஸ் வெப் இணையத்தளத்தை பிரித்தானியாவிலிருந்து நிர்வகித்துவரும் இலங்கை சட்டத்தரணியான சந்திம அனில் வித்தானராச்சி என்பவரைக் கைதுசெய்வதற்காக கொழும்பு மேல் நீதிமன்றம் பகிரங்க பிடிவிராந்து ஒன்றை பிறப்பித்துள்ளதாகத் தெரியவந்துள்ளது. போலி ஆவணங்களைத் தயார் படுத்தியமை தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையின் அடிப்படையில் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இவருக்கு எதிராக தாக்கல் செய்துள்ள வழக்கு விசாரணை எதிர்வரும் செப்டம்பர் 16ம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

மீள் குடியேற்ற அமைச்சர் மில்ரோய் பெர்ணாண்டோ கைதட்டபைலாவிற்கு ஆடுகின்றார் அம்மான்! கருணா சுழன்று சுழன்று

புலிகளின் மட்டு – அம்பாறை முன்னாள் இராணுவத் தளபதியும் , ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பிரதித் தலைவரும் மீள் குடியேற்ற பிரதி அமைச்சருமாகிய கருணா அம்மான் என அழைக்கப்படும் வினாயக்கமூர்த்தி முரளிதரன் மாலம்ப பிரதேசத்தில் இடம்பெற்ற திருமண வைபவம் ஒன்றில் பைலா பாடல் ஒன்றிற்கு ஆடுவதை படத்தில் காண்கின்றீர்கள்.

சரணடைவது தொடர்பாக அரசுடனும், கே.பி யுடனும் நோர்வே தொடர்பு !

இலங்கை விவகாரம் தொடர்பில் ஆலோசனை பெறுவதற்கு ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் நியமித்துள்ள நிபுணர் குழுவுக்கு நோர்வே ஆதரவு வழங்குவதாக நோர்வேயின் சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் எரிக்சொல்ஹேய்ம் தெரிவித்தார்.

வெள்ளி, 25 ஜூன், 2010

புலம்பெயர் தமிழ் மக்கள் மிகவும் விழிப்பாக இருக்க வேண்டும்!

புலம் பெயர் தமிழ் மக்களின் விடுதலை உணர்வை மழுங்கடித்து அவர்களை திசைதிருப்பும் வகையிலும் சிறிலங்கா மீதான சர்வதேச சக்திகளின் அழுத்தத்தைக் குறைப்பதற்கும் புலம் பெயர் நாடுகளிலுள்ள சிலர் சிறிலங்கா அரசுடன் நெருக்கமான தொடர்புகளை ஏற்படுத்தி வருவதால் புலம் பெயர் தமிழ் மக்கள் மிகவும் விழிப்பாக இருக்க வேண்டுமென முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜெயானந்தமூர்த்தி தெரிவித்துளளார்.


அவர் மேலும் தெரிவிக்கையில்:

உளவு பார்த்த புலி உறுப்பினர் மாத்தறையில் கைது!

மாத்தறையில், யாசகர் வேடத்தில் உளவுப் பணியில் ஈடுபட்டிருந்த தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
முக்கிய அரசியல்வாதிகள் தொடர்பில் உளவு பார்க்கும் நோக்கில் குறித்த விடுதலைப் புலி உறுப்பினர் மாத்தறை நகரிற்கு சென்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

லெப்டினன்ட் சீலன்(லூக்காஸ் சாள்ஸ் அன்ரனி-திருமலை)

ஒரு கெரில்லாப் போராளியின் வீரம் அவனது இயந்திரத் துப்பாக்கியில் இல்லை. அவனது மனதில் தான் இருக்கிறது. இது தமிழீழத்தின் போராட்ட வரலாற்றில் முதன்மை வாய்ந்த கெரில்லா வீரன் லெப். சீலனின் அனுபவ மொழியாகும். லூக்காஸ் சாள்ஸ் அன்ரனி என்ற சொந்தப் பெயரைக் கொண்ட சீலன் திருமலையின் வீரமண்ணில் விளைந்த நன்முத்து. சிங்கள இனவெறி ஆட்சியாளர்களின் நேரடியான ஒடுக்கு முறைக்குள் சிக்குண்டு கிடந்த திருகோணமலையின் நடைமுறை அனுபவங்களைக் கண்கூடாகக் கண்டவர்.

யாரடா பயங்கரவாதி?

தமிழீழ மக்கள்மீது கடந்த 60 ஆண்டுகளாக நிகழ்த்தப்பட்டுவந்த இன அழிப்பு நடவடிக்கையின் உச்சக்கட்ட நடவடிக்கையாக கடந்த 2009 மே திங்களில் ஒரே நாளில் லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களை கொன்றொழித்த பெரும் கொடுமைக்காரன் இட்லரின் அவதாரமாக முசோலினியின் மூளையாக செயல்பட்ட ராசபக்சே என்ற கொலை வெறியனின் செயல்கள் இன்று அம்பலப்பட தொடங்கிஇருக்கின்றன.

பெண்களின் அழுகை நின்றபாடில்லை!!!!

போரின் காரணமாக தமது கணவன்மாரை இழந்து பல ஆயிரம் பெண்கள் யாழ்ப்பாணத்தில் வாழ்கின்றனர். தமிழ் சமூகத்தில் இந்தப் பெண்கள் தமது சமூக வழக்கங்களுக்கு எதிராகவும் அதேவேளை ஆதரவளிக்காத அரசாங்கத்துடனும் போட்டியிட்டு வாழவேண்டியுள்ளது.


தனியார் நிறுவனங்கள் உதவிகளை வழங்கினாலே இவர்கள் தமது சுய கௌரவத்தை மீண்டும் நிலைநாட்ட முடியும். போரின் பின்னான நிலமைகள் தொடர்பாக ஏசியாநியூஸ் செய்தியாளர் வழங்கிய அறிக்கை வருமாறு:

செம்மொழியான தமிழ் மொழியாம்ம்ம்ம்ம்

இறப்பொக்கும் எல்லா உயிரும்
இறந்த பின்னர்




ஏது ஊரே.ஏ...ஏ...ஏ
யாவரும் சவங்கள்

இலங்கைக்கு விதித்த நிபந்தனைகள் ....!

 இலங்கைக்கான ஏற்றுமதி வரிச்சலுகைளை இடைநிறுத்தி வைத்துள்ள ஐரோப்பிய ஒன்றியம் அச்சலுகையினை 6 மாத காலங்களுக்கு நீடிப்பதாயின் தனது நிபந்தனைகளை ஏற்கவேண்டும் என 15 நிபந்தனைகளை விதித்துள்ளது. ஆவ் நிபந்தனைகள் வருமாறு.

நீதிபதிகள் இடமாற்றப்படுவது நீதித்துறைக்கு உகந்ததல்ல!

யாழ்ப்பாணத்தில் அண்மைக்காலமாக கொலை, கொள்ளை, கற்பழிப்பு, கலாசார சீரழிவு என்பன நடைபெற்றுவருகின்றன. எமது சொந்த தமிழ் உறவுகளும் இப்படிப்பட்ட சமூக சீரழிவு நடவடிக்கைகளில் நேரடியாகவும் மறைகமாகவும் ஈடுபட்டிருக்கின்றன என்று கேள்விப்படும்போது மனதுக்கு வேதனையாகவுள்ளது என முன்னாள் உயர்நீதிமன்ற நீதியரசர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

வியாழன், 24 ஜூன், 2010

தமிழுக்கு மாநாடு, தமிழனுக்கு சிறையா? -கண்மணி

எத்தனைக் கோடி என்று தெரியவில்லை. ஆனால் கோடிகளைக் கொட்டி செம்மொழி வளர்க்க மாநாடு துவங்க இருக்கிறது. வீதியெங்கும் தமிழ் காணோம். அங்காடிகளில் தமிழ் பெயர்கள் வலியுறுத்தி சட்டங்கள் போட்டு கண்டித்தப் பிறகும்கூட அதைக் கண்டுகொள்ளாத அங்காடிகள் இருக்கின்றன.

தமிழே நீ வாழ்க..!!

அறத்துடன் மறம் கலந்து


அண்டமே திண்டாட ஆட்சி செய்த

வீரவேங்கை நிதி

மன்னார் மாவட்டத்தில் வீரமரணம் அடைந்த முதல் புலி. இராணுவச் சுற்றிவளைப்பின் போது இறுதி வரை போராடி எதிரியின் கையில் தான் பிடிபடக்கூடாது என நினைத்து தன் கைத் துப்பாக்கியாலே தன்னைத் தானே சுட்டு எமது இயக்க மரபுக்கு இணங்க வீர மரணத்தை அடைந்தவன் நிதி.