புதன், 30 ஜூன், 2010

இணக்கப்பட்டின் பிரகாரமே நிபுணர்கள் குழு அமைக்கப்பட்டது !

யுத்தம் முடிவடைந்திருந்த நிலையில் இலங்கை வந்திருந்த ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூனுக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்குமிடையேயான இணக்கப்பாட்டினடிப்படையிலேயே ஐ.நா செயலாளர் நாயகத்திற்கான ஆலோசனைக் குழு நியமிக்கப்பட்டுள்ளதாக முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் பொன்சேகா தெரிவித்துள்ளார்.



லண்டன் பிபிசி சிங்கள சேவைக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு கூறியுள்ள அவர் மேலும் கூறுகைiயில் , ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளர் பான் கீ மூனினால் நியமிக்கப்பட்டுள்ள நிபுணர்கள் குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்தத்வும் இறுதிக் கட்ட யுத்தம் தொடர்பான தகவல்களை பரிமாறிக் கொள்ளவும் தாம் தயார் எனக் கூறியுள்ளார்.


ஓர் நாட்டின் நடவடிக்கைகள் தொடர்பில் சர்வதேச ரீதியில் சந்தேகம் காணப்பட்டால் அவற்றை களைவதற்கு குறித்த நாடு நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமானதென அவர் சுட்டிக்காட்டியுள்ள அவர் ஐக்கிய நாடுகள் சபையுடன் முறுகல்களை ஏற்படுத்திக் கொள்ள முயற்சிக்கக் கூடாது எனவும் அறிறுத்துகின்றார்.


இலங்கைப் பிரஜை என்ற ரீதியில் இவ்வாறான விசாரணைகளுக்கு தாம் முழு ஆதரவளிக்க உள்ளதாகவும், விசாரணைகளுக்கு ஆதரவளிக்க தாம் தயங்கப் போவதில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


ஜீ.எஸ்.பி. பிளஸ் சலுகைத் திட்டம் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் விதித்துள்ள நிபந்தனைகள் நியாயமானது எனக் கூறியுள்ள பொன்சேகா அரசியல் கைதிகள் விடுவிக்கப்படவேண்டும் என்ற ஒன்றியத்தின் நிபந்தனையினுள் தானும் அடங்குவதாக தெரிவித்துள்ளதுடன் இவ் நிபந்தனையினை உள்விவகாரத் தலையீடாக கருத முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


இதேவேளை, இலங்கையின் உள்விவகாரங்களில் தலையீடு செய்ய எவருக்கும் இடமளிக்கப்பட மாட்டாது எனவும், நிபுணர்கள் குழுவிற்கு இலங்கை விஜயம் செய்ய அனுமதிக்கப்பட மாட்டாது எனவும் அரசாங்கம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக