திங்கள், 12 ஏப்ரல், 2010

அந்த சித்திரவதைகளை பகிர எங்களிடம் வார்த்தைகளில்லை!

அந்த சித்திரவதைகளை பகிர எங்களிடம் வார்த்தைகளில்லை என்று குறிப்பிடுகிறர்கள் முன்னாள் பெண் பேராளிகள். நாடாளமன்றத் தேர்தல் நெருங்கும் பொழுது வாக்குகளை பிரதியீடாக கோருவதற்காக எப்படியும் முன்னாள் போராளிகளில் குறிப்பிட்ட எண்ணிக்கையினரை விடுவிக்கப்படலாம் என்று பரவலாக எதிர்பார்க்கப்பட்டது. அவர்கள் விடுவிக்கப்படும் சூழல் நெருங்கிக் கொண்டிருக்கும் பொழுது அவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஒரு முகாமின் வாசலுக்கு சென்று சில நிமிடங்கள் அவர்களுடன் உரையாட முடிந்தது. அவர்கள் புன்னகைக்க விரும்புகிறார்கள். காயங்களுடனும் ஆறாத குருதிகளுடனும் புன்னகைக்கிறார்கள். நாங்கள் எதையும் பகிர விரும்பவில்லை என்று உதயா என்ற முன்னாள் பெண்போராளி குறிப்பிடுகிறாள். நெருக்கடியான சூழ்நிலை காரணமாக அவள் போராளியாக மாறியிருந்தாள். மிக மென்மை கொண்ட உதயாவால் எப்படி அந்த களங்களை எதிர் கொள்ள முடியும் என்றுதான் வியப்பாக இருந்தது. மிக மெல்லிதாகவே அவள் பேசுகிறாள். உதயா இப்பொழுது புன்னகைத்தபடியிருக்கிறாள். இரண்டு ஊன்றுகோல்களை ஊன்றியபடி கனி என்ற மற்றொரு பெண் வருகிறாள். வெட்டப்பட்ட அவளது தலைமுடி கொஞ்சம் வளர்ந்திருக்கிறது. அதை இழுத்துக் கட்டியபடி கனி வருகிறாள். வன்னியில் புளியங்குளத்தை சேர்ந்த கனி இறுதி நாட்களில் தன் அண்ணாவின் தொடர்பையும் இழந்து விட்டாள். இராணுவப் பகுதிக்குள் போகும்படி அவளையும் அவளின் தாயையும் அவளது அண்ணன் கூறியிருந்த பொழுதும் அதற்கு இடையில் அவளும் சூழ்நிலைக்காக போராளியானாள். செல்வி தனது ஒற்றைக் கையை இழந்தபடி வருகிறாள். செல்வி துடிதுபடிப்பானவள். ஷெல்லில் தன் ஒற்றைக் கையை இழந்த அவரை பார்த்து எப்படி இப்படியானது என்று கேட்கும் தைரியமும் மனநிலையும் யாருக்கும் வராது. செல்வியைத் தொடர்ந்து, ஒற்றைக் கையில் காயமற்று இயங்காது தூங்கும் கையை ஏந்தியபடி அருளினி என்ற இன்னொரு பெண் வருகிறாள். அருளனி தனக்குரிய கடமைகளை நிறைவேற்ற மிகுந்த சிரமங்களை அனுபவிப்பதாக கனி சொல்லிக் கொண்டிருக்கிறாள். இயங்காத அந்தக் கை தன்பாட்டில் தூங்கிக் கொண்டிருக்கிறது. எழுதும் வலது கையை இழந்ததினால் அவள் பல நாட்கள் தொடர்ந்து அழுது கொண்டிருந்தாள் எனவும் உதயா சொல்லுகிறாள். ஒரு திடமான பெண்ணாக நம்பிக்கையளித்தபடி அருளினி இருக்கிறாள். எனக்கு என் நண்பிகள் எல்லா உதவிகளையும் செய்வார்கள் என தன் பாதிக்கப்பட்ட ஒற்றைக் கையை மடியில் தூக்கி வைத்தபடி குறிப்பிடும் அருளினி ஒரு குழந்தையை மாதிரிதான் புன்னகைக்கிறார். இப்பொழுது நம்பிக்கை கொண்டபடி தன்னைக் கட்டியெழுப்புவதைப்போல அவரது புன்னகை இருக்கிறது. இது எப்படியான சித்திரவதைச்சாலை என்பதை சொல்லுவது மிகச் சிரமமானது என்று குறிப்பிடும் கனி அங்கு யாரும் எங்களை தடிகளால் தாக்கவில்லை. ஆனால் தண்ணீருக்காக நாங்கள்தான் அடிபட்டுக் கொண்டிருப்போம். ஒரு வாழி தண்ணீரில் தோய வேண்டும். அந்த ஒரு வாழி தண்ணீரும் வடிய எவ்ளவு நேரம் ஆகும்? அந்த கொஞ்ச நீருக்காக வரிசையில் நிற்கத் தொடங்கினால், காலை மாலை என்று வரிசை கட்டி எங்களை எண்ணுவார்கள் நாங்கள் ஓடிவிடலாம் என்பதற்காக அவர்கள் எண்ணிக் கொண்டிருப்பார்கள். வீட்டுக்கார் பார்ப்பதாக சந்திப்பதாக இருந்தால் 15 நாட்களுக்கு ஒரு முறைதான் வர முடியும். அதுவும் கிராம சேவையாளரின் அனுமதி ஒவ்வொரு முறையும் எடுக்க வேண்டும். அப்படி வரும் பொழுது கொண்டு வரும் பொருட்களை தந்து விட்டு திரும்பிச் செல்லுவதற்குத்தான் அவர்களது நேரம் சரியாகி விடும். பிறகு விசில் சத்தம்தான் எங்கள் காதை கிழிக்கும். நாங்களே சமைத்து சாப்பிடுவோம். ஊத்தையும் புழுதியுமாக எமது நாட்கள் நிறைக்கப்பட்டிருந்தன என்று கனி சொல்லிக் கொண்டிருக்கிறாள். இவர்களுக்கிடையில் தனது இரண்டு வயது மகனை வைத்துக் கொண்டு மற்றொரு பெண் எனது பார்வைக்கு தெரிகிறாள். மிக நீண்ட காலமாக அவரும் அவரின் கணவரும் விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்ததின் காரணமாக கணவர் மற்றொரு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார். நிறைய பெண்போராளிகள் தங்கள் கணவர்மார் எங்கு எப்படி இருக்கிறார்கள், உயிருடன் இருக்கிறார்களா என்றே தெரியாதபடி இருக்கிறார்கள். இப்படி அவர்கள் சொல்லியது பின்னர் பசில் ராஜபக்ஷ பெயரில்லாதவர்கள் இறந்து விட்டார்கள் என்றே அர்த்தப்படும் என்பதுடன் பொருந்துகிறபோது அதிர வைக்கிறது. அண்ணாவை இறுதியாக இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வரும் பொழுது சந்தித்தேன். அவன் நெருப்பாய் எரியும் களத்தில் நின்று சண்டை பிடித்துக் கொண்டிருந்தான். எங்களைப்போய் சரணடையுங்கள் என்று சொல்லியவன் இப்பொழுது எங்கே இருக்கிறான் என்று தெரியவில்லை என்று கனி முகத்தை கோணலாக்கியபடி குறிப்பிடுகிறாள். ஓற்றைக்காலை இழந்தபடி கால்சிதைவுகளால் ஊன்றுகோல்களுடன் நடந்தபடி உடல் காயங்களுடன் என்று ஒவ்வொருதரும் வெளியில் வந்து செல்லுகிறார்கள். இன்னும் உயிர் இருக்கிறது எனபதை புரிய வைத்தபடி ஏக்கங்களும் பிரிவுகளும் காத்திருப்புகளும் ஆறாத உள் காயங்களும் என்று வலிகளை தங்களுக்குள் வைத்திருக்கும் இந்த முன்னாள் பெண்போராளிகளை ஒரு யுத்தத்தின் பின்னர் சிறைப்பிடிக்கப்பட்ட கைதிகளாக்யிருக்கிறது காலம். இவர்களில் கொஞ்சப் பேர் மட்டும் விடுவிக்கப்படுகிறார்கள் என்பது அவர்களக்கு அறிவிக்கப்பட்டிருந்தது. ஏனைய பெண்கள் தொடர்ந்தும் வாழ முடியாதபடி காலத்திற்கும் சூழலுக்கும் பொருந்தாபடி சித்திரவதைகளை விரிக்கும் அந்த முகாங்களில் தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களை விரைவில் விடுதலை செய்து புன்னகைகளையும் அவர்களது உள்ளங்களையும் காப்பாற்றும் அவசியம் அனைவரிடமும் இருக்கிறது.

ஈழத்துச்சூரியனே...

வேங்கையாக வந்தவரே! அக்கினி குஞ்சாய் வந்து தூங்கிய தமிழரை எழுப்பிய அயனே. குருதி சொட்ட கூனிக் குறுகி ஓடிய தமிழனை பாயும் புலியாக்க நீர்வந்து நின்றீர் அச்சத்தில் அடங்கி அழுது கிடந்த தமிழன் வீரத்தினை தட்டி எழுப்பி தமிழனாய் வாழ சொல்லிகொடுத்தீர். நெஞ்சில் உரமிட்டு வீரராய் வளர்த்தீர். வாழ்வதும் வீழ்வதும் இனி விதி எனச் சொல்லி விதியே கதியென வீழ்ந்து கிடந்தவனை ஆயுதம் கொடுத்து களத்தினில் விட்டீர். புலியாக புறப்பட்ட தமிழனை உலகறிய வைத்ததீர். கார்திகைப்பூவேடு கூடவே பிறந்தீர் காட்டிலும் மேட்டிலும் தமிழருக்காய் நடந்தீர். தெற்கிற்கும் ஆமிக்கும் அஞ்சிய எங்களை களமாட விட்டு கண்ட ரசித்தீர். அறைக்குள் அடங்கிய தமிழிச்சி வீரத்தை கரும்புலியாக்கியே உலகறிய வைத்தீர். அகப்பையோடு அலைந்த அவளை ஆட்லறியோடிங்கு விளையாடச்செய்தீர் அடுப்பு விறகில் தீயிட்ட பெண்னை எதிரி குகையிலும் தீமூட்ட செய்தீர். அன்ன நடை நடந்த எம் பெண்கள் நீரிலும் வானிலும் தரையிலும் மிடுக்குடன் நடப்பது உம்மால்.. தர்மயுத்தமாய் இராமாயணம் பாரதம் எல்லாம்வெறும் புராணமாய் நாம்அறிந்தோம் ஈழத்தின் தர்ம யுத்தத்தை நடாத்திட தலைவனாய் நீங்கள் வந்த பின்னர்தான் அவை நியம் என நாம் உயர்ந்தோம். காகிதக்கப்பலை மழை வெள்ளத்தில் விட்டுத்தான் இதுவரை நாம் இரசித்தோம் இனிவரும் நாட்களில் தமிழ் ஈழத்தின் கப்பலை ஓட்டிடும் கனவுடன் பலர் உங்களின் படை தொடர்வோம். காற்றினில் பட்டத்தை ஏற்றித்தான் இதுவரை நாம் வான் தொட்டோம் தமிழீழ வான்படை கண்டதன் பின்னர் தான் எம் பலம் நாம் உணர்ந்தோம்.. வால்பிடித்து கால்பிடித்து இனம் விற்ற எழியவர்கள் தலைகுனிந்தார் அமைதியாய் உறங்கிய வீரத்தமிழர்கள் உம் செயல் கண்டு உமைத் தொடர்ந்தான் இறுதிவரை உமைத் தொடர்வார். மலையென எதிரி எம் குகை புகுந்தாலும் இறப்பொன்று நாளை நம் இருபிடம் வந்தாலும் உம்முன்னே நாம் நடப்போம் வீர இனத்தின் பிறப்பென்னும் புகழுடன் உங்களின் வழி தொடர்ந்திருப்போம்...

மார்பில் வெடிகுண்டு!

விமான நிலைய ஸ்கேனிங்கிலிருந்து தப்பிக்க பெண்களின் மார்பில் திரவ வெடி பொருள் பொருத்தி வெடிக்கச் செய்யும் முறையை அல் குவைதா தொடங்கி உள்ளது. அல் குவைதாவின் பெண் தற்கொலை படையினர் இந்த புதிய முயற்சியில் இறங்கி உள்ளனர். பெண்களின் மார்பில் அறுவை சிகிச்சை மூலம் இந்த வெடிக்கும் திறன் கொண்ட திரவப் பையைப் பொருத்துகின்றனர். பெண்களின் மார்பகப் பகுதியில் இயல்பாக திரவம் இருப்பதால் ஸ்கேனிங்கில் இதைக் கண்டுபிடிப்பது இயலாத காரியம். இதுபோல் ஆண்களின் பின்புறத்திலும் ( அமரும் பகுதி) இதே திரவப் பொருளை நிரப்பி வெடிக்கும் முயற்சியும் நடைபெற்று வருவதாக பிரிட்டிஷ் உளவு நிறுவனம் தெரிவித்துள்ளது. சமீபத்தில் அமெரிக்காவில் ஒரு விமானத்தைத் தகர்க்கும் முயற்சியில் ஈடுபட்ட நைஜீரிய நாட்டு இளைஞரைப் பிடித்து விசாரித்‌த போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. பிரிட்டனில் மருத்துவம் படிக்கும் அல் கொய்தா ஆதரவாளர்கள் இது போன்ற பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை முறையை பயின்று, பின் தங்கள் நாட்டுக்குத் திரும்பிய பிறகு அல் குவைதா இயக்கத்திற்காக இந்த அறுவை சிகிச்சையை செய்து வருகின்றனர் எனத் தெரிய வந்துள்ளது.

அம்பாறையில் இனியபாரதி குழுவினரின் அட்டகாசம் ...

அம்பாறை மாவட்டத்தின் அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆலையடிவேம்பு பிரதேசத்தில் ஆயுதம் தாங்கிய கருணாகுழு(இனியபாரதி குழு)வினரால் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவாளர்கள் ஏழு பேரின் வீடுகள் உடைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று சனிக்கிழமை இரவு 7.00மணியளவில் அக்கரைப்பற்று 7ஆம் குறிச்சிப்பகுதியில் கமலகம் வீதியில் உள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவாளர்களின் வீடுகளே உடைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளைவானில் வந்த ஆயுதம் தாங்கிய இனியபாரதி குழுவினர் வாசல்கதவுகளை வெட்டி வீட்டுக்குள் புகுந்து வீடுகளை உடைத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் சில தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவாளர்களும் இனியபாரதி குழுவினரின் கடும் தாக்குதலுக்குள்ளனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளபோதிலும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று திருக்கோவில் பிரதேசத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு சந்திரகாந்தன் ஆதரவாளர்களும் இனியபாரதி குழுவினரின் தாக்குதலுக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டத்தில் நடந்து முடிந்த தேர்தலில் தமிழ் மக்கள் இனியபாரதி குழுவினரை நிராகரித்துள்ள இந்த வேளையில் அவர்களின் அடாவடித்தனங்கள் அதிகரித்துவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கில் ஆயுதக்குழுக்களின் ஆயுதங்கள் களையப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளபோதிலும் அம்பாறை மாவட்டத்தின் இனியபாரதி குழுவினர் ஆயுதங்களுடன் அராஜகத்தில் ஈடுபட்டுவருகின்றமை தொடர்பில் கடும் கவலைவெளியிடப்பட்டுள்ளது. அத்துடன் கிழக்கில் இனியபாரதி குழுவினர் சிறுவர்களை தமது ஆயுதப்படையில் சேர்ப்பதாக ஐக்கிய நாடுகள் சபை அண்மையில் குற்றஞ்சாட்டியிருந்த நிலையில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ அதனை மறுத்திருந்ததும் குறிப்பிடத்தக்கது