செவ்வாய், 11 மே, 2010

முள்ளிவாய்க்கால் முடிவல்ல..

1. சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம் என்று சொன்ன மகாகவியே எப்படி? கற்களினாலா? கபால ஓடுகளாலா? 2. டாங்கிகள் கிளறிப் போட்ட சேற்றில் கண்களைத் திறந்தபடி செத்துக் கிடந்த குழந்தையின் விழியில் நீலவானம் சிறுத்துச் சிறுத்து போர் விமானமாய்... இரத்தம் உறைந்த உதடுகளின் நெளிவில்

தலைவன் இருக்கிறான் புலம்ப வேண்டாம்!!!

யுகங்களை கடந்து நீ உயிர் வாழ்கிறாய், மொழியாய். மண் துகள்களில் உன் ஜீவன் மரணிக்காமல் இருக்கிறது, இனமாய். காற்று, நிலத்தை இட மாற்றம் செய்ய முடியுமா? நம் இனத்தின் முடிவை அடக்குமுறை முடிவு செய்யாது. முடிவு என்று ஒன்றுமே இல்லை. ஒவ்வொரு முடிவும் தொடக்கம். ஒவ்வொரு இறுதியும் வேறொன்றின் ஆரம்பம். அழிவு ஆற்றலை வெளிப்படுத்தும். அணு சிதறும் போதுதான் ஆற்றலாகிறது. நாம் சிதறும் போதுதான் அணுவானோம். இது புலம்பும் காலமல்ல. புறப்படும் காலம். இது முடிவு காலமல்ல. தொடக்கக் காலம். நம்மை நாம் அடையாளம் பார்த்தநாள். நம்மை நாம் தெரிந்து கொண்ட நாள். நம்மையே நாம் தேர்வு செய்த நாள். புலம்ப வேண்டாம். புறப்படுவோம். வெற்றி நம் பக்கத்தில். நம் தலைவன் இருக்கிறார். கலங்க வேண்டாம். நமக்கான நாடு நிச்சயிக்கப்பட்டு ஆண்டுகள் பல கடந்துவிட்டது. அதை ஆளும்காலம்தான் தீர்மானிக்கப்பட வேண்டும். அதை காலம் தீர்மானித்து விட்டது. நாம் தான் கையில் எடுக்க வேண்டும்.

இலங்கை குடியரசு ஒரு பார்வை


உள்ளுர், சர்வதேச அரசியலுக்குள் சிக்கியுள்ள இலங்கை இராணுவம்


உள்ளுர், சர்வதேச அரசியலுக்குள் சிக்கியுள்ள இலங்கை இராணுவ போர்க்குற்ற விசாரணை. இறுதிக்கட்ட யுத்த நடவடிக்கைகளின்போது நிராயுதபாணிகளாகச் சரணடைய முற்பட்ட போராளிகளையும், பல்லாயிரக்கணக்கான அப்பாவிப் பொதுமக்களையும் சுட்டுக்கொன்ற போர்க்குற்றக் குற்றச்சாட்டினை இதுவரை முற்றாக மறுதலித்துவந்த இலங்கை அரசு இது தொடர்பின் விசாரணைகளை மேற்கொள்ள படிப்பினை, நல்லிணக்க ஆணைக்குழு என்ற ஒன்றை அமைக்க முன்வந்திருப்பதன் பின்னணியில்

வழிப்படுத்த வாரீர்!:

கடந்த வருடம் மேமாதம் தாயகத்தில் நிகழ்தேறிய பேரழிவின் பின்னர் புலத்துவாழ் தமிழ் மக்களின் அரசியல் கட்டமைப்புக்கள் புதியதோர் பரிணாமத்தில் பிரவேசிக்கவேண்டிய நிலைமை ஏற்பட்டது. அவ்வாறான மாற்றமானது தமிழீழ தேசிய தலைமையின் விருப்புகளுக்கு அமைய – அவரின் வழிகாட்டலுக்கு அமையவே – நிகழ்த்தப்பட்டது. அதன்படி புலத்து வாழ் தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் சனநாயக கட்டமைப்புக்களை உருவாக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அதன் ஒரு படிமுறையாக,

தமிழீழத்திலிருந்து தொடங்கும்!!!


எந்த ஒரு இனத்திற்கும் இந்த ஒரு அவலம் நிகழ்ந்ததில்லை. யூதர்கள் ஒன்றிணைந்து அரேபியர்களை ஒடுக்கும்போதுகூட உலகத்தின் குரல் அதற்கு எதிராக எழுந்து நின்றது. பல்வேறு ஆப்ரிக்க நாடுகளில் நடைப்பெற்றுக் கொண்டிருக்கும் தேசிய ஒடுக்குமுறைகளை உலகமே பல்வேறு வழிமுறைகளில் கண்டிக்கிறது.

சவால்கள் பலவற்றை எதிர்கொண்டவாறு களம் புகும் நாடுகடந்த தமிழீழ அரசு


கூட்டுச் சதிகள் - நம்பிக்கைத் துரோகங்கள் - அவதூறுகள் - வன்மப் பிரச்சாரங்கள் - அச்சுறுத்தல்கள் - கொலை மிரட்டல்கள் என சவால்கள் பலவற்றை எதிர்கொண்டவாறு சுதந்திர தமிழீழத்துக்கான இலக்கு நோக்கிய பயணத்தில் களம் புகும் நாடுகடந்த தமிழீழ அரசு. ஆக்கபூர்வமான விமர்சனத்தை நாம் வரவேற்கவே செய்கின்றோம்.கருத்துப் பரிமாற்றங்கள், விவாதங்கள், ஆய்வுகள், ஆக்கபூர்வமாக அமையும் பட்சத்தில் புரட்சிகரமான சித்தாந்தப் பார்வை கூர்மையடையும், அரசியல் விழிப்புணர்ச்சி விசாலமடையும். ஆனால் பொய்களைப் புனைந்து உண்மைகளைத் திரித்துக் காட்டி விதண்டாவாத விமர்சனங்கள் செய்து ஒரு புனிதமான செயற்பாட்டு அமைப்பின் மீது சேற்றை வாரி வீசுவது நேர்மையான அரசியற் செயற்பாடு அல்ல. இது மிகவும் கீழ்த்தரமான நாசகார மக்கள் விரோத அரசியல் சந்தர்ப்பவாதமாகும். எதையும் தாங்கும் இதயத்துடனும் இரும்பையொத்த இலட்சிய உறுதியுடனும் அஞ்சாத வீரத்துடனும் எமது உயிருள்ளவரை எத்தனை துயர் வரினும் எத்தனை இடர் வரினும் நாம் எமது விடுதலைப் பாதையிலே தொடர்ந்து போராடுவோம். தனிவழிப் பயணம்தான்... தயங்கோம் எது வந்து எதிர்த்தாலும்... மயங்கோம் வாழ்வை நிமிர்த்தும்.. வழியில் செல்ல... மறுக்கோம் மாவீரர்களே, உங்கள் கல்லறை மீது சபதம் எடுக்கின்றோம்: மொழியாகி எங்கள் மூச்சாகி நாளை முடிசூடும் தமிழ்மீது உறுதி! வழிகாட்டி எம்மை உருவாக்கும் தலைவன் வரலாறு மீதிலும் உறுதி! விழிமூடி இங்கே துயில்கின்ற வேங்கை வீரர்கள் மீதிலும் உறுதி! இழிவாக வாழோம்! தமிழீழப்போரில் இனிமேலும் ஓயோம் உறுதி!

பன்னிரண்டு மாதங்களோ போதவில்லை - தமிழன் தரணியாண்டு மடிந்த கதை கொஞ்சமில்லை - ஈழ முள்ளிவாய்க்கால் விழுந்தது காண் இந்த மாதத்தில் - நாம் தள்ளி நின்றே பார்த்திருந்தோம் கடந்த வருடத்தில்! துளி நீருக்கே என் குலமோ தவமிருந்தது - ஒரு பிடி சோற்றுக்கே என் குழந்தை பழியிருந்தது; விழி நீர் வழியே உயிர் வழியக் காத்திருந்தது - பெரு இன அழிப்பின் உச்சத்திற்கு சாட்சியானது! முள் வேலிக்குள் ஒரு ராச்சியமே சிறையானது - சிறு கூட்டுக்குள் என் தேசம் சிக்கிச் சிதைந்தது! - சிங்கள வல்லூறுகள் குலக் குஞ்சுகளைத் தின்று தீர்க்க் - தன் மகளை இந்தியத் தந்தை கூட்டிக் கொடுத்தான்! பாரதத்தின் கண்களதை கறுப்புத் துணி மறைத்தது - உலக சரித்திரத்தில் தன்னினமே தன்னை அழித்தது; எட்டப்பக் கூட்டங்களின் இடையினில் சிக்கி - ஆறு கோடிகளோ ஆட்டு மந்தைகளாய் மாறி நின்றது! தன்னாட்டைக் காக்கவொண்ணா இந்திய தேசம் - எட்டி சிங்களத்தின் சிறு பரப்பில் காவலிருந்தது; தொப்புள் கொடி இரத்தமது காய முன்னமே - எம் கருவறுத்து உருச்சிதைத்து கெக்கலித்தது! ஆதித் திராவிடர்கள் ஆண்டிருந்த மண்ணில் வீடில்லை, வீதியிலே நிற்குதம்மா பிள்ளை! செங்கோலின் ஒளியதிலே திளைத்திருந்த ஆட்சி மண் வீழ்ந்து மறமழிந்து போனதம்மா இனியில்லை! துரோகங்கள் மீள் பதிவை இட்டுச் சென்றதம்மா - எம் குரோதங்களின் மேல் தணலைக் கொட்டிச் சென்றதம்மா! பாரதத்தின் துரோகம் நீள நாமும் வீழ்ந்திட்டோம்; - அவன் சோரம் போனதால் எங்கள் நாடிழந்திட்டோம்! சிங்களத்தின் வாளில் தலை மாட்டிய போதும் - நாம் செங்களத்தில் வீரமதை இழக்கவேயில்லை! வெங்களமாய் எரியுதம்மா எங்களின் உள்ளம் - அதில் செங்குளமாய்க் கொதிக்குதம்மா எங்களின் இரத்தம்! எங்கள் வீரம் அழியாது அது கூடப் பிறந்தது - மறத் தமிழன் கனவு கலையாது அது உயிரில் கலந்தது; நாலு சுவர் தடுக்காது எங்களின் படையை - தமிழ் ஈழ மண் ஏற்காது சிங்களப் பேயை! வென்றெடுப்போம் எங்கள் தேசம் அது தூரமில்லை; வேரறுப்போம் எதிரியின் குலம் அது கனவுமில்லை! பொங்கியெழும் எந்தன் இனம் பெற்றெடுக்கும் ஈழம்! - அங்கு முழங்கிஎழும் சங்கின் நாதம் மாவீரர் பெயர் சொல்லும்

வலி சுமந்த மாதமும் மாறாத ரணங்களும்-இதயச்சந்திரன்.


கடந்த ஆண்டு நிகழ்ந்த இனப் படுகொலையின் கோர நினைவுகளை, ஆறாத வடுக்களை சுமந்து வருகிறது.துரத்தியடிக்கப்பட்ட வன்னி மக்கள், இன்னமும் முகாம்களுக்குள் முடங்கிக் கிடக்கின்றனர். இந்த ஓராண்டுக்குள் கொக்கிளாய் பறவைகள் சரணாலயம் அழிக்கப்பட்டதால், அப் பறவைகள் எங்கு அடைக்கலம் தேடிச் சென்றனவோ புரியவில்லை.