கடந்த சில மாதங்களாக பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வரும் சமூக வலைத்தளங்களில் ஒன்றான பேஸ்புக் அதனை பயன்படுத்துபவர்கள் இருக்கும் இடத்தை அறிந்து கொள்ளும் படியான ஒரு புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.
இப்புதிய உலக ஒழுங்கில் எமக்கான இலக்கை அடையும்வரை எமக்கென்று எதிரிகள் யாரும் இல்லை - கவர்ந்து கொள்வோம் இல்லையேல் கவிழ்த்து விடுவோம்!.... சூழ்ச்சியை சூழ்ச்சியால் வெல்வோம் - எந்த அஸ்திரத்தால் நாம் வீழ்ந்தோமோ அதே அஸ்திரத்தை எமைக்காக்கும் எதிரியை தாக்கும் ஆயுதமாய் ஏந்துவோம் - எழுந்து நிற்போம். காலம் இட்ட கட்டளைப்படி - அதிஉச்ச இராஜ தந்திரம் ஒன்றே லட்சியத்தை வென்றெடுப் பதற்கான ஒற்றைத் தெரிவு - வரலாறு காட்டியுள்ள பாதையும் அதுவே அப்பாதையில் தொடர்ந்தும் பயணிப்போம் - இலட்சியத்தை வென்றெடுப்போம்!....
திங்கள், 23 ஆகஸ்ட், 2010
கொழும்பில் தமிழ் வர்த்தகர் கடத்தல்
கொழும்பில் உள்ள புறக்கோட்டை பகுதியில் ஒலிவர் பெனர்னான்டோ என்ற தமிழ் வர்த்தகர் ஒருவர் இனம்தெரியாத ஆயுததாரிகளால் காலை கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக கொழும்பு தகவல்கள் தெரிவித்துள்ளன
சிறீலங்காவில் போர் நிறைவுபெற்றுவிட்டதாக சிறீலங்கா அரசு தெரிவித்து 15 மாதங்கள் கடந்துள்ள நிலையிலும் சிறீலங்காவில் தமிழ் மக்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்வது இங்கு குறிப்பிடத்தக்கது.
சிறீலங்காவில் போர் நிறைவுபெற்றுவிட்டதாக சிறீலங்கா அரசு தெரிவித்து 15 மாதங்கள் கடந்துள்ள நிலையிலும் சிறீலங்காவில் தமிழ் மக்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்வது இங்கு குறிப்பிடத்தக்கது.
இந்திய படையினரை நினைவுகூரும் முகமாக நினைவு மண்டபம்
சிறீலங்காவின் வடக்கு – கிழக்கு பகுதியில் இரண்டு தசாப்தங்களுக்கு முன்னர் நடைபெற்ற போரில் கொல்லப்பட்ட இந்திய படையினரை நினைவுகூரும் முகமாக நினைவு மண்டபம் ஒன்றை சிறீலங்கா அரசு கொழும்பில் அமைத்துள்ளது.
வெளிநாட்டு கடவுச்சீட்டு வைத்திருப்போர் தரைவழியாக யாழ் செல்ல அனுமதியில்லை
சுற்றுலாப் பயணிகள், ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட வெளிநாட்டு கடவுச்சீட்டு வைத்திருப்போர் வடபகுதிக்கு நெடுஞ்சாலை வழியாக பயணம் செய்வதற்கான தடை தொடர்ந்தும் நடைமுறையில் இருப்பதாக சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
தமிழரிற்கு இழைத்த கொடுமையை அனுபவிக்கும்.........பொன்சேகா
கடந்த ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவை எதிர்த்துப் போட்டியிட்டதற்காக அரசாங்கம் தன்னைப் பழிவாங்கப் பார்க்கிறதுஇலங்கையின் நீதித்துறை மீது தனக்கு நம்பிக்கையில்லையென்றாலும், தன் மீது விதிக்கப்பட்டுள்ள தீர்ப்பை எதிர்த்து தான் மேல்முறையீடுகள் செய்யப்போவதாக அவர் தெரிவித்தார்.
"எங்கு போய் முறையிட்டாலும் எனக்கு நீதி கிடைக்கப்போவதில்லை என்பது எனக்கு நூறு சதவீதம் தெரியும். அது பற்றி எங்களுக்கு கவலையில்லை. எது வந்தாலும் எதிர்கொள்ள நான் தயாராக இருக்கிறேன்", என்றார் அவர்
"எங்கு போய் முறையிட்டாலும் எனக்கு நீதி கிடைக்கப்போவதில்லை என்பது எனக்கு நூறு சதவீதம் தெரியும். அது பற்றி எங்களுக்கு கவலையில்லை. எது வந்தாலும் எதிர்கொள்ள நான் தயாராக இருக்கிறேன்", என்றார் அவர்
யாழ். மருத்துவ பீட மாணவன் சுன்னாகத்தில் சடலமாக மீட்பு!
யாழ். மருத்துவபீடத்தின் 3ஆம் ஆண்டு மாணவனான சாரங்கன் சுன்னாகத்தில் கயிற்றில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.இவர் பயிற்சிக்காக யாழ். போதனா வைத்தியசாலையின் 7ஆம் இலக்க நோயாளர் விடுதியில் கடமையாற்றி வருகின்றார்.
குறித்த மாணவன் தாயாருடன் வாழ்ந்து வந்ததாகவும் தாயார் கடந்த சில நாள்களுக்கு முன்னர் வெளிநாட்டில் கல்வி கற்ற மற்றுமொரு சகோதரனின் பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றுள்ள நிலையில் இவர் தனித்து வீட்டில் தங்கியிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த மாணவன் தாயாருடன் வாழ்ந்து வந்ததாகவும் தாயார் கடந்த சில நாள்களுக்கு முன்னர் வெளிநாட்டில் கல்வி கற்ற மற்றுமொரு சகோதரனின் பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றுள்ள நிலையில் இவர் தனித்து வீட்டில் தங்கியிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)