சுற்றுலாப் பயணிகள், ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட வெளிநாட்டு கடவுச்சீட்டு வைத்திருப்போர் வடபகுதிக்கு நெடுஞ்சாலை வழியாக பயணம் செய்வதற்கான தடை தொடர்ந்தும் நடைமுறையில் இருப்பதாக சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
வெளிநாட்டவர்கள் அனைவரும் விமானம் மூலமே யாழ்ப்பாணம் செல்வதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாக சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் இராணுவ இணைப்பதிகாரி மேஜர் ஜெனரல் பாலித பெர்னாண்டோ தெரிவித்தார்.
பாதுகாப்பு அமைச்சின் முன் அனுமதி பெறாமல் வெளிநாட்டவர்கள் தரைவழியாக பயணம் செய்வதற்கு அனுமதி வழங்கப்படவில்லை. ஏ-9 வீதி வழியாக பொதுமக்கள் மட்டுமே பயணம் செய்வதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வெளிநாட்டில் வசிக்கும் குடியுரிமை பெற்ற இலங்கையைச் சேர்ந்தவர்களும் பாதுகாப்பு அமைச்சிடம் முன் அனுமதி பெற வேண்டும்.
இப்புதிய உலக ஒழுங்கில் எமக்கான இலக்கை அடையும்வரை எமக்கென்று எதிரிகள் யாரும் இல்லை - கவர்ந்து கொள்வோம் இல்லையேல் கவிழ்த்து விடுவோம்!.... சூழ்ச்சியை சூழ்ச்சியால் வெல்வோம் - எந்த அஸ்திரத்தால் நாம் வீழ்ந்தோமோ அதே அஸ்திரத்தை எமைக்காக்கும் எதிரியை தாக்கும் ஆயுதமாய் ஏந்துவோம் - எழுந்து நிற்போம். காலம் இட்ட கட்டளைப்படி - அதிஉச்ச இராஜ தந்திரம் ஒன்றே லட்சியத்தை வென்றெடுப் பதற்கான ஒற்றைத் தெரிவு - வரலாறு காட்டியுள்ள பாதையும் அதுவே அப்பாதையில் தொடர்ந்தும் பயணிப்போம் - இலட்சியத்தை வென்றெடுப்போம்!....
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக