விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த வன்னியைப் படையினர் கைப்பற்றிய பின்னர், அங்கு பல மாற்றங்களைச் செய்வதில்; அரசாங்கமும் படைத்தரப்பும் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. விடுதலைப் புலகளின் ; எச்சங்கள், அடையாளங்கள் என்று எதுவுமே இல்லாத வகையில் துடைத்தழிப்பு நடவடிக்கைகள் முதற்கட்டமாக மேற்கொள்ளப்பட்டன.

இப்புதிய உலக ஒழுங்கில் எமக்கான இலக்கை அடையும்வரை எமக்கென்று எதிரிகள் யாரும் இல்லை - கவர்ந்து கொள்வோம் இல்லையேல் கவிழ்த்து விடுவோம்!.... சூழ்ச்சியை சூழ்ச்சியால் வெல்வோம் - எந்த அஸ்திரத்தால் நாம் வீழ்ந்தோமோ அதே அஸ்திரத்தை எமைக்காக்கும் எதிரியை தாக்கும் ஆயுதமாய் ஏந்துவோம் - எழுந்து நிற்போம். காலம் இட்ட கட்டளைப்படி - அதிஉச்ச இராஜ தந்திரம் ஒன்றே லட்சியத்தை வென்றெடுப் பதற்கான ஒற்றைத் தெரிவு - வரலாறு காட்டியுள்ள பாதையும் அதுவே அப்பாதையில் தொடர்ந்தும் பயணிப்போம் - இலட்சியத்தை வென்றெடுப்போம்!....
புதன், 1 செப்டம்பர், 2010
கண்டியிலே கோயில் கொண்ட புத்ததேவா உன்னை கைதொழுவார் கைகளிலே எங்கள் சாவா ?
பிக்குகளின் உடம்பினிலே மஞ்சள் துண்டா உன்னை பின்பற்றுவார் கைகளிலே வெடிகுண்டா ?
ரத்தம் மரணம் ஏன் சாமி உன்கோயில் வாசலிலே தீபமெரித்தார் எங்கள் ஊரில் வந்து பாரவரே வீட்டை எரித்தார்
உன்மலர் கால்மீதில் பூச்செண்டுகள் போட்டார் நாங்கள் உயிர்த்துடிக்க எங்கள் மண்ணில் குண்டுகள் போட்டார்
பிக்குகளின் உடம்பினிலே மஞ்சள் துண்டா உன்னை பின்பற்றுவார் கைகளிலே வெடிகுண்டா ?
ரத்தம் மரணம் ஏன் சாமி உன்கோயில் வாசலிலே தீபமெரித்தார் எங்கள் ஊரில் வந்து பாரவரே வீட்டை எரித்தார்
உன்மலர் கால்மீதில் பூச்செண்டுகள் போட்டார் நாங்கள் உயிர்த்துடிக்க எங்கள் மண்ணில் குண்டுகள் போட்டார்
கப்டன் மயூரன்
1988 காலப்பகுதிகளில் காடுகளில் வாழும் தமிழ் போராளிகளை அழிக்கும் நோக்கில் ஈழப்பகுதியில் காலடி வைத்திருந்த இந்திய இராணுவத்தினரின் தந்திரமான காடு வளைப்புத் தாக்குதல்களில் பெரும்பாலும் மயூரன் பங்குபற்றி இருந்தான். ஒரு தடவை இராணுவத்தினரின் முரட்டுத்தனமான தாக்குதல்களிலிருந்து மீளும் பொருட்டு, போராளிகள் பின்வாங்கும் படி அறிவுறுத்தப்பட்ட பின்பும், மயூரன் தனியாக நின்று 70க்கு மேற்பட்ட இந்திய இராணுவத்தினரை அழித்தும் காயப்படுத்தியும் இருப்பிடம் திரும்பிய கதைகள் சக போராளிகளால் சிலாகித்துப் பேசப்பட்ட சேதிகளாக ஒலித்துக் கொண்டிருந்தன.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)