வெள்ளி, 17 செப்டம்பர், 2010

கோண்டாவிலில் ஆயுதங்கள் மீட்பு

கோண்டாவில் குமரகோட்டம் வைரவர் ஆலய வெளிவீதியில் நேற்று முன்தினம் இரவு படையினரால் ஆயுதங்கள் சில மீட்கப்பட்டுள்ளன. அப்பகுதியில்  மாலை விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் துப்பாக்கி ஒன்றைக் கண்டதாகவும் அது தொடர்பில் ஊரெழு இராணுவமுகாமிலுள்ள படையினருக்கு அறிவிக்கப்பட்ட நிலையில் அங்கு சென்ற படையினரால் ஆயுதங்கள் மீட்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

சரத் பொன் சேகாவுக்கு 3 வருட கடுங்காவல் சிறைத்தண்டனை

நாடாளுமன்ற உறுப்பினரும் முன் னாள் இராணுவத் தளபதியுமான சரத் பொன் சேகாவுக்கு இரண்டாவது இராணுவ நீதி மன்றம் 3 வருட கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்துள்ளது. இந்தத் தீர்ப்பு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஒப்புதலின் பின்னரே அமுலுக்கு வரவுள்ளது.
சரத் பொன்சேகா இராணுவத் தளபதியாகப் பதவி வகித்தபோது மேற்கொள்ளப்பட்ட ஆயுதக் கொள்வனவில் இடம் பெற்றதாகத் தெரிவிக்கப்பட்ட முறைகேடுகள் தொடர்பாக இரண்டாவது இராணுவ நீதிமன்ற விசாரணை நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.அந்நீதிமன்றம்  தண்டனையை விதித்துத் தீர்ப்பளித்தது
.

திலீபனுடன் நான்காம் நாள் 18-09-1987


கடந்த மூன்று நாட்களாக மேடையில் திலீபனுடன் சேர்ந்து ஒரு சொட்டு நீர் கூட அருந்தாது இருந்தேன். மானசீகமாகத் திலீபனின் நட்புக்கு உயரிய மதிப்பளிப்பவன் நான். அதனால் தான் என்னால் எதுவும் அருந்த முடியவில்லை. திலீபன் ஒன்றும் அருந்தவில்லையே, உண்ணவில்லையே, என்ற வேதனைதான் என்வாய்க்கு பூட்டுப்போட்டதே தவிர வேறு ஓன்றுமே இல்லை. கடந்த மூன்று நாள்களாக ஒன்றுமே நான் உண்ணாமல் அருந்தாமால் இருந்தது சிறிது களைப்பை ஏற்படுத்தி இருந்தாலும் திட மனத்துடன் அதைச்சமாளித்துக் கொண்டேன். நான்காம நாளான இன்றுதான் எனக்குச் சற்று நாவறர்ச்சியாக இருந்தது. ஆனாலும் அதைப்பொருட்படுத்தாமல் யாரிடமும் என் விரதத்தைப்பற்றிக் கூறாமல் இருந்தேன். இரண்டு மூன்று முறை ராஜனும் - நவீனும் என்னைச் சாப்பிட அழைத்த போது நான் பிடிவாதமாக மறுத்து விட்டேன். என்னை மேடைக்குப் பின்புறமிருந்த வீட்டிற்கு அழைத்துப் திலீபன் இருக்கும் நிலையைப் பார்க்கும் போது என்னால் எதுவும் அருந்த முடியவில்லை என்று மாத்தயாவிடம் கூறிய போது என்னால் தாங்க முடியவில்லை. விம்மி விம்மி அழத்தொடங்கி விட்டேன்.

பதுங்கிய புலிகளின் தாக்குதலா?, சதியா?, விபத்தா?

தமது இலக்கு நிறைவேறும்  வரை நீண்டகாலம் காத்திருந்து தமது இலக்குகளை அழித்தொழித்த பல தற்கொடையாளர் பலர். இந்த வகையில் மட்டு. கரடியனாறு பொலிஸ் நிலையத்தில் வெடிப்பு சம்பவம்.குண்டு வெடிப்பு நிகழ்வதற்கு சற்று சில நிமிடங்களிற்கு முன் அமைச்சர் முரளிதரன் பன்குடாவெளி நரிப்புத்தோட்டத்தில் மின்சாரம் வழங்கும் நிகழ்வில் பங்குகொள்ளும் நோக்குடன் தனது காவலர்களுடன் மேற்படி பொலிஸ் நிலையத்தில் தங்கி நின்று சென்றுள்ளார். குண்டுவெடிப்பு அமைச்சருக்கு குறிவைக்க பட்டதா? அண்மைய நாள்களில் பல விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள்,,ஆதரவாளர்கள் கிழக்கில் கைது செய்ய பட்டதாக சிங்கள ஊடகங்கள் பல செய்தி வெளியிட்டமை உற்று நோக்கதக்கது.  புலிகள் அமைப்பின் கடந்த கால தாக்குதல்கள் பல தம் தளபதிகளின் நினைவு நாள்களிலேயே நடைபெற்றுள்ளது ..அந்த வகையில் தியாக தீபம் திலீபன் அவர்களுடைய 03ம் நாளிலேயே சம்பவம் நடந்தேறியுள்ளது
இலங்கையில் சீனாவின் அபிவிருத்தி திட்டங்கள் பல இடம்பெற்று வருகின்றது யாவரும் அறிந்ததே. சீனாவின் அபிவிருத்தி

திட்டத்திற்காக கல் உடைப்பதற்கு பல டைனமைட் வெடிபெருட்கள் ஒரு பாரிய கொள்கலனில் கொண்டுவரப்பட்டு, அது கரடியனாறு
பொலிஸ் நிலையத்துக்கு முன்பாக வைத்து வேறு ஒரு பாரஊர்திக்கு மாற்றப்பட்டுக்கொண்டு இருந்தவேளையே இக் குண்டுவெடிப்பு
நிகழ்ந்துள்ளது. 2 சீனர்கள் உட்பட சுமார் 60 பொலிசார் இறந்துள்ளதாக,மேலும் 60 பொதுமக்கள் காயமடைந்துள்ளதாக  செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த டைனமைட் குண்டுகள் சி 4 வகை அல்ல அது இலகுவில் வெடிக்க. அவை பற்றவைத்தாலே வெடிக்கும். இந்நிலையில் இக் குண்டுவெடிப்புக்கும் இந்தியாவின் உளவுத்துறைக்கும் சம்பந்தம்
இருக்கலாம் என அறியப்படுகிறது. இலங்கையில் சீனாவின் அபிவிருத்தித் திட்டங்கள் மிக ஆபத்தானவை எனக் காட்டவே இவ்வாறு
ஒரு நிகழ்வு நடைபெற்றுள்ளது. அத்தோடு சில தினங்களுக்கு முன்னர் 2 இந்திய ரோ அதிகாரிகளை இலங்கை நாடு
கடத்தியுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.சீனாவின் ஆதிக்கம் இலங்கையில் பெருகிவரும் நிலையில், சீனாவினால் முன்னெடுக்கப்படும் திட்டங்களை தவிடுபொடியாக்கவும், அதன் ஆதிக்கத்தை இலங்கையில் குறைக்கவும், மற்றும் போர் ஓய்ந்துள்ள நிலையில் சுமார் 60 பொலிசார் மரணமடைந்திருப்பதும் பெரும் நெருக்கடியைத் தோற்றுவிக்கும். சிங்கள மக்கள் சீனாமேல் அதிருப்தியடைந்துள்ளனர்.
பெருந்தெருக்கள் வேலைக்கான கல்லுடைத்தல், பாறையகழ்தல் வேலைகளிற்கான மேற்படி டைனமற் நிரப்பப்பட்ட இரண்டு

கொள்கலன்களும் பாதுகாப்புக் காரணங்களிற்காக பொலிஸ் நிலைய வளவிற்குள்ளேயே நிரந்தரமாக வைக்கப்பட்டிருந்தன என்றும்
மேற்படி சீன நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் தினமும் தங்களிற்கு தேவையான அளவு வெடிமருந்தை மேற்படி கொள்கலன்களிலிருந்து
பெறுவார்கள் என்றும்,அதே போன்று இன்று தமக்கு தேவையான டைனமற்றை எடுத்துக் கொண்டு கல்குவாரிக்குச் செல்வதற்காக வருகை தந்த மேற்படி
சீன நிறுவனத்தினர் டைனமற்றை தங்களின் வாகனத்திற்கு மாற்றிக் கொண்டிருந்த போதே இவ் விபத்து ஏற்பட்டதாகவும், தொடர்ந்து
அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மூன்று கொள்கலன்களும் வெடித்துச் சிதறியதாகவும் தெரியவருகிறது.