வெள்ளி, 17 செப்டம்பர், 2010

பதுங்கிய புலிகளின் தாக்குதலா?, சதியா?, விபத்தா?

தமது இலக்கு நிறைவேறும்  வரை நீண்டகாலம் காத்திருந்து தமது இலக்குகளை அழித்தொழித்த பல தற்கொடையாளர் பலர். இந்த வகையில் மட்டு. கரடியனாறு பொலிஸ் நிலையத்தில் வெடிப்பு சம்பவம்.குண்டு வெடிப்பு நிகழ்வதற்கு சற்று சில நிமிடங்களிற்கு முன் அமைச்சர் முரளிதரன் பன்குடாவெளி நரிப்புத்தோட்டத்தில் மின்சாரம் வழங்கும் நிகழ்வில் பங்குகொள்ளும் நோக்குடன் தனது காவலர்களுடன் மேற்படி பொலிஸ் நிலையத்தில் தங்கி நின்று சென்றுள்ளார். குண்டுவெடிப்பு அமைச்சருக்கு குறிவைக்க பட்டதா? அண்மைய நாள்களில் பல விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள்,,ஆதரவாளர்கள் கிழக்கில் கைது செய்ய பட்டதாக சிங்கள ஊடகங்கள் பல செய்தி வெளியிட்டமை உற்று நோக்கதக்கது.  புலிகள் அமைப்பின் கடந்த கால தாக்குதல்கள் பல தம் தளபதிகளின் நினைவு நாள்களிலேயே நடைபெற்றுள்ளது ..அந்த வகையில் தியாக தீபம் திலீபன் அவர்களுடைய 03ம் நாளிலேயே சம்பவம் நடந்தேறியுள்ளது
இலங்கையில் சீனாவின் அபிவிருத்தி திட்டங்கள் பல இடம்பெற்று வருகின்றது யாவரும் அறிந்ததே. சீனாவின் அபிவிருத்தி

திட்டத்திற்காக கல் உடைப்பதற்கு பல டைனமைட் வெடிபெருட்கள் ஒரு பாரிய கொள்கலனில் கொண்டுவரப்பட்டு, அது கரடியனாறு
பொலிஸ் நிலையத்துக்கு முன்பாக வைத்து வேறு ஒரு பாரஊர்திக்கு மாற்றப்பட்டுக்கொண்டு இருந்தவேளையே இக் குண்டுவெடிப்பு
நிகழ்ந்துள்ளது. 2 சீனர்கள் உட்பட சுமார் 60 பொலிசார் இறந்துள்ளதாக,மேலும் 60 பொதுமக்கள் காயமடைந்துள்ளதாக  செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த டைனமைட் குண்டுகள் சி 4 வகை அல்ல அது இலகுவில் வெடிக்க. அவை பற்றவைத்தாலே வெடிக்கும். இந்நிலையில் இக் குண்டுவெடிப்புக்கும் இந்தியாவின் உளவுத்துறைக்கும் சம்பந்தம்
இருக்கலாம் என அறியப்படுகிறது. இலங்கையில் சீனாவின் அபிவிருத்தித் திட்டங்கள் மிக ஆபத்தானவை எனக் காட்டவே இவ்வாறு
ஒரு நிகழ்வு நடைபெற்றுள்ளது. அத்தோடு சில தினங்களுக்கு முன்னர் 2 இந்திய ரோ அதிகாரிகளை இலங்கை நாடு
கடத்தியுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.சீனாவின் ஆதிக்கம் இலங்கையில் பெருகிவரும் நிலையில், சீனாவினால் முன்னெடுக்கப்படும் திட்டங்களை தவிடுபொடியாக்கவும், அதன் ஆதிக்கத்தை இலங்கையில் குறைக்கவும், மற்றும் போர் ஓய்ந்துள்ள நிலையில் சுமார் 60 பொலிசார் மரணமடைந்திருப்பதும் பெரும் நெருக்கடியைத் தோற்றுவிக்கும். சிங்கள மக்கள் சீனாமேல் அதிருப்தியடைந்துள்ளனர்.
பெருந்தெருக்கள் வேலைக்கான கல்லுடைத்தல், பாறையகழ்தல் வேலைகளிற்கான மேற்படி டைனமற் நிரப்பப்பட்ட இரண்டு

கொள்கலன்களும் பாதுகாப்புக் காரணங்களிற்காக பொலிஸ் நிலைய வளவிற்குள்ளேயே நிரந்தரமாக வைக்கப்பட்டிருந்தன என்றும்
மேற்படி சீன நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் தினமும் தங்களிற்கு தேவையான அளவு வெடிமருந்தை மேற்படி கொள்கலன்களிலிருந்து
பெறுவார்கள் என்றும்,அதே போன்று இன்று தமக்கு தேவையான டைனமற்றை எடுத்துக் கொண்டு கல்குவாரிக்குச் செல்வதற்காக வருகை தந்த மேற்படி
சீன நிறுவனத்தினர் டைனமற்றை தங்களின் வாகனத்திற்கு மாற்றிக் கொண்டிருந்த போதே இவ் விபத்து ஏற்பட்டதாகவும், தொடர்ந்து
அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மூன்று கொள்கலன்களும் வெடித்துச் சிதறியதாகவும் தெரியவருகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக