இராணுவ உறவுகளைப் பலப்படுத்துவதற்கு சீனாவும் இலங்கையும் இணங்கியுள்ளன. இலங்கை பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய தலைமையிலான தூதுக்குழுவினருக்கும் சீனாவின் மக்கள் விடுதலை இராணுவத்தின் (பி.எல்.ஏ) பிரதம பொது அதிகாரிகளின் தளபதி சென்பிங்டேவுக்கும் இடையிலான சந்திப்பின்போது இது குறித்து கலந்துரையாடப்பட்டது.
சீன-இலங்கை இராணுவ உறவுகள் அண்மைக்கால வருடங்களில் தொடர்ச்சியான ஐக்கியமும் அபிவிருத்தியும் காணப்பட்டதாக சென் பிங்டே கூறினார்.தாய்வான், திபெத் விவகாரங்களில் சீனாவுக்கு இலங்கை ஆதரவு தெரிவிப்பது குறித்து அவர் நன்றி தெரிவித்தார். இரு நாடுகளின் ஆயுதப் படைகளுக்கிடையிலான பரஸ்பர நட்புணர்வு பரிமாற்றங்களையும் ஒத்துழைப்புக்களையும் அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு சீனா விருப்பம் தெரிவித்துள்ளது.
இப்புதிய உலக ஒழுங்கில் எமக்கான இலக்கை அடையும்வரை எமக்கென்று எதிரிகள் யாரும் இல்லை - கவர்ந்து கொள்வோம் இல்லையேல் கவிழ்த்து விடுவோம்!.... சூழ்ச்சியை சூழ்ச்சியால் வெல்வோம் - எந்த அஸ்திரத்தால் நாம் வீழ்ந்தோமோ அதே அஸ்திரத்தை எமைக்காக்கும் எதிரியை தாக்கும் ஆயுதமாய் ஏந்துவோம் - எழுந்து நிற்போம். காலம் இட்ட கட்டளைப்படி - அதிஉச்ச இராஜ தந்திரம் ஒன்றே லட்சியத்தை வென்றெடுப் பதற்கான ஒற்றைத் தெரிவு - வரலாறு காட்டியுள்ள பாதையும் அதுவே அப்பாதையில் தொடர்ந்தும் பயணிப்போம் - இலட்சியத்தை வென்றெடுப்போம்!....
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக