அறத்துடன் மறம் கலந்து
அண்டமே திண்டாட ஆட்சி செய்த
அன்புத்தமிழே,அறத்தமிழே,என்தாயே
மறம் காத்த மண்ணிலே
திறம் காத்த உன்னோர்கள்
மதிமயங்கி எங்கேனும்
மடிந்து போனாலும்
என் கண்கள் தூங்காது
உனைப் பாடத் தயங்காது
விண்வெளியில் உன் பெயரில்
வீடமைக்க வேண்டும்-அதில்
என் தமிழை உலகமெலாம்
என்நாவால் பரப்பிடுவேன்
உன் பிள்ளை உனக்காக
பா உரைக்க வேண்டும்
கண்பார்க்கும் தூரமெல்லாம்
நீ நீயாக வேண்டும்
எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என
தமிழையே தாய்மொழியாக
புலத்துத் தமிழரெல்லாம்
பேச்சில் பரப்ப வேண்டும்
மறத்தமிழ் என்றுமே மறையாது
எம் வீரம் என்றுமே மண்ணிலே
அழியாது
வாழ்கதமிழ்,வளர்க தமிழ்மொழி
இப்புதிய உலக ஒழுங்கில் எமக்கான இலக்கை அடையும்வரை எமக்கென்று எதிரிகள் யாரும் இல்லை - கவர்ந்து கொள்வோம் இல்லையேல் கவிழ்த்து விடுவோம்!.... சூழ்ச்சியை சூழ்ச்சியால் வெல்வோம் - எந்த அஸ்திரத்தால் நாம் வீழ்ந்தோமோ அதே அஸ்திரத்தை எமைக்காக்கும் எதிரியை தாக்கும் ஆயுதமாய் ஏந்துவோம் - எழுந்து நிற்போம். காலம் இட்ட கட்டளைப்படி - அதிஉச்ச இராஜ தந்திரம் ஒன்றே லட்சியத்தை வென்றெடுப் பதற்கான ஒற்றைத் தெரிவு - வரலாறு காட்டியுள்ள பாதையும் அதுவே அப்பாதையில் தொடர்ந்தும் பயணிப்போம் - இலட்சியத்தை வென்றெடுப்போம்!....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக