வியாழன், 24 ஜூன், 2010

வீரவேங்கை நிதி

மன்னார் மாவட்டத்தில் வீரமரணம் அடைந்த முதல் புலி. இராணுவச் சுற்றிவளைப்பின் போது இறுதி வரை போராடி எதிரியின் கையில் தான் பிடிபடக்கூடாது என நினைத்து தன் கைத் துப்பாக்கியாலே தன்னைத் தானே சுட்டு எமது இயக்க மரபுக்கு இணங்க வீர மரணத்தை அடைந்தவன் நிதி.



அன்று நாங்கள் நிதியைப் பற்றி அறிந்திருந்தோமே தவிர விடுதலையைப் பற்றிப் புரியவில்லை. நிதியின் இறுதி நிகழ்வு பெரிதாக ஊர்வலமாக நடத்தப்படவில்லை. அன்றைய காலகட்டம் மிகப்பயஙகரமாக இருந்ததால், ஒவ்வொருவர் வாயிலும் மெதுவாகப் பேசப்படுகிறது.


புலிப்படை நிதி இறந்து விட்டான் என்றே கூறப்படுகிறது. அன்றைய நேரத்தில் மரண நிகழ்வு என்பது எவராலும் தாங்கிக்கொள்ள முடியாத மனநிலையில்தான் இருந்தது.இளம்வயது, வாழ வேண்டிய காலம். இப்படி மரணித்துப் போவதா? என்று மக்கள் கலக்கத்தோடு கண்கலங்கித் திரிகின்றார்கள். ஞாயிற்றுக்கிழமைகளில் நாம் தேவாலயத்துக்குப் போகும்போது ஒரு பையோடு சந்தியில் நிற்கும் நிதி.


அப்போது புலிப்படையைப் பார்க்க ஆவல். நாம் நேரத்திற்கு கோயிலுக்குப் போவதாகக் கூறிவிட்டு சந்தியில் நிற்கும் புலிப்படையினரைத் தள்ளி நின்றே பார்ப்போம். சிலர் நெருங்கி நின்று கதைப்பார்கள். நாமும் மெதுவாகக் கிட்டச் சென்று நிற்போம்.


சில நாட்கள் போனபின் சந்தியில் சிரித்து நின்ற நிதியின் வீரமரணம் பற்றி போஸ்ரர் ஒட்டப்பட்டிருந்ததைப் பார்க்கும்போது எங்கள் மனம் எதையோவெல்லாம் யோசித்து கலங்கிக் கொண்டே இருந்தது.


ஏன் இறந்தான் நிதி ? பிரபாகரனால் ஏன் இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது ? மரணம் என்பது என்ன ? நாம் ஏன் வாழ்கின்றோம் ? எப்படியான நிலையில் தமிழினம் இருக்கிறது ? தமிழனுக்கு என்ன நடக்கிறது ? எமக்கு யார் விடுதலை பெற்றுத் தற்தவர்கள் ? விடுதலையில் நாம் வாழ்கின்றோமா ? சிறீலங்கா அரசின் கொடுமைபற்றி புரியாத நிலையில் கிடந்த மக்களுக்கு நிதியின் வீரமரணத்தின் பின்தான் தமிழனின் நிலை எப்படியுள்ளது என்று தெரியவந்தது. எமக்கும் அன்று தெரியவந்தது.


ஒரு புலி வீரமரணம் அடையும் போது மேலும் பல புலிகள் பாசறையை நோக்கி வருவார்கள் என மேஜர் அசோக் அண்ணன் அன்று எங்களுக்கு அடிக்கடி கூறுவார். அது உண்மை. நிதி அண்ணனின் வீரமரணத்தின் பின் என் மண் எவ்வளவோ துரித வளர்ச்சி பெற்று வருகிறது. போராட்டத்தில் இன்று அத்தனைக்கும் காரணம் அண்ணன் காட்டிய வழியில் நின்று போராடி வீர மரணத்தைத் தழுவிய மாவீரர்கள். களத்தில் நின்று போராடும் போராளிகளே.


மன்னார் மண் முதல் முதல் கண்ட களப்பலியில் நிற்கும் நிதி, அன்சார் ஆகிய மாவீரர்களின் தியாகம் இன்று எம்மை பலப்படுத்தி வளரச் செய்துள்ளது. அன்சார்( நிக்கலஸ் மைக்கல் குருஸ் ) எனும் போராளி தெல்லிப்பளையில் நடந்த முற்றுகையின் போது போராடி வீரச்சாவடைந்தான். நிதி, அன்சார், எம் மாவீரர்கள் எம் மண்ணுக்கு ஒளிவிளக்காக நின்று மெழுகுவர்த்தியாக உருகியவர்கள்.


எமது இயக்கத்தில் முதல் முதல் வீரமரணமடைந்த சங்கர் அண்ணன்: அதே ஞாபகத்தில் என மன்னார் மண் இழந்த மாவீரர்கள் தமக்கு சுதந்திரம் கிடைக்க வேண்டும் என்று போராடியவர்கள் அல்ல. தம் மண், இனம் விடுதலை பெறவேண்டும் என எண்ணி சாவுக்கு மத்தியில் நின்று போராடி, எம்மையும் எம் மண்ணையும் பாதுகாத்து தங்கள் உடல்களை எமக்காப் புதைத்தவர்கள். அவர்கள் காட்டிய வழியில் நாமும் விடுதலை பெறும் வரை தொடர வேண்டும். அவர்களின் இலட்சியமும் கனவும் நிறைவேறி எம் மண் விடுதலை பெற நாமும் எமக்காக களத்தில் விழுந்த மாவீரர்களின் ஆயுதத்தை எடுத்து களத்துக்குப் புறப்படுவோம். வா நன்பனே ! இன்று புதை குழியில் இருக்கும் மாவீரன் நிதியின் வரலாற்றைப் படிப்போம். நாளாந்தம் போராடிக் கொண்டிருக்கும் போராளிகளைப் பற்றிச் சிந்திப்போம். எங்களுக்காக எம் மண்ணைப் பாதுகாக்கும் புனிதப் போரில் நாளாந்தம் வீரமரணமடையும் மாவீரனின் பாதையில் சேர்வோம் என உறுதி எடுப்போம். விடுதலை பெற ஒவ்வொருவரும் போராட வேண்டும். போர்களம் வா தமிழா !


எஙகள் நிதி எமக்காக மடிந்தான். எங்கள் நிதி தன்னை விட மண்ணை அதிகம் நேசித்தவன். எங்கள் நிதி தன் குடும்பத்தை விட தமிழ் மக்களை நேசிததவன். நிதியின் பாதையில் நானும் செல்வேன் என உறுதி எடுப்பேன். ஐயம் இல்லை எனக்கு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக