தமிழர்கள் எதிராக நடந்த போர்க் குற்றங்கள் குறித்து உலக நாடுகளும், ஐ.நா.வுன் என்ன கூறுகின்றன என்பது குறித்து தனக்கு கவலையேதும் இல்லை என்று கூறியுள்ள சிறிலங்க அதிபர் மகிந்த ராஜபக்ச, இந்தியாவும், அண்டை நாடுகளும் தங்களோடு இருந்தால் போதுமானது என்று கூறியுள்ளார்.
தி டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளேட்டிற்கு அளித்த பேட்டியில் இவ்வாறு கூறியுள்ள மகிந்த ராஜபக்ச, போர்க் குற்றங்கள் குறித்து உரிய வகையில் விசாரணை நடத்தாவிட்டால் தாங்கள் அளிக்கும் வரிச் சலுகைகளை இரத்து செய்யப்போவதாக ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளதே என்று கேட்டதற்கும், “எனக்கு அதைப்பற்றிக் கவலையில்லை” என்றே பதிலளித்துள்ளார்.
“ஐரோப்பிய ஒன்றியம் வரிச் சலுகையை அளிக்க விரும்பாவிட்டால், அவர்களே வைத்துக் கொள்ளட்டும். நாங்கள் என்ன செய்தோம் என்பதை அவர்களுக்கு விளக்கியுள்ளோம், அவ்வளவுதான்” என்று ராஜபக்ச கூறியுள்ளார்.
இலங்கைப் போரில் நடந்த மனித உரிமை மீறல்கள், போர்க குற்றங்கள் குறித்து ஐரோப்பிய நாடுகளும், ஐ.நா.வும் வலியுறுத்தி வருகின்றனவே என்று கேட்டதற்கு, “நான் ஏன் அவர்களைப் பற்றிக் கவலைப்பட வேண்டும். இந்தியாவும் மற்ற அண்டை நாடுகளும் எங்களோடு நட்புறவுடன் இருந்தால், அது எனக்குப் போதும்” என்று கூறியுள்ளார்
இப்புதிய உலக ஒழுங்கில் எமக்கான இலக்கை அடையும்வரை எமக்கென்று எதிரிகள் யாரும் இல்லை - கவர்ந்து கொள்வோம் இல்லையேல் கவிழ்த்து விடுவோம்!.... சூழ்ச்சியை சூழ்ச்சியால் வெல்வோம் - எந்த அஸ்திரத்தால் நாம் வீழ்ந்தோமோ அதே அஸ்திரத்தை எமைக்காக்கும் எதிரியை தாக்கும் ஆயுதமாய் ஏந்துவோம் - எழுந்து நிற்போம். காலம் இட்ட கட்டளைப்படி - அதிஉச்ச இராஜ தந்திரம் ஒன்றே லட்சியத்தை வென்றெடுப் பதற்கான ஒற்றைத் தெரிவு - வரலாறு காட்டியுள்ள பாதையும் அதுவே அப்பாதையில் தொடர்ந்தும் பயணிப்போம் - இலட்சியத்தை வென்றெடுப்போம்!....
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக