இப்புதிய உலக ஒழுங்கில் எமக்கான இலக்கை அடையும்வரை எமக்கென்று எதிரிகள் யாரும் இல்லை - கவர்ந்து கொள்வோம் இல்லையேல் கவிழ்த்து விடுவோம்!.... சூழ்ச்சியை சூழ்ச்சியால் வெல்வோம் - எந்த அஸ்திரத்தால் நாம் வீழ்ந்தோமோ அதே அஸ்திரத்தை எமைக்காக்கும் எதிரியை தாக்கும் ஆயுதமாய் ஏந்துவோம் - எழுந்து நிற்போம். காலம் இட்ட கட்டளைப்படி - அதிஉச்ச இராஜ தந்திரம் ஒன்றே லட்சியத்தை வென்றெடுப் பதற்கான ஒற்றைத் தெரிவு - வரலாறு காட்டியுள்ள பாதையும் அதுவே அப்பாதையில் தொடர்ந்தும் பயணிப்போம் - இலட்சியத்தை வென்றெடுப்போம்!....
ஞாயிறு, 27 ஜூன், 2010
உமக்கென தலையெழுத்தோ,
யாருக்கும் இலா உணர்ச்சி
உமக்கு ஏன்?எங்கே உம் உடமைகள்?
எங்கே உம் இருப்பிடம்?
எங்கே உம் உறவுகள்?
எங்கே உம் செல்வங்கள்?
முற்றும் துறந்தவனே மேல்..
உண்ண, உறங்க மடமுண்டு...
உமக்கோ?யாருக்காக?.
அடுத்திங்கு மண்ணில் பிறக்கும்
ஒவ்வொரு சிசுவிலும் உமதுணர்ச்சி
குருதியோடு கலந்திட வேண்டும்..
வாழ்க தமிழ், வாழ்க தமிழினம்,
வாழ்க தமிழினத் தலைவன் நீர்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக