புலிகள் அமைப்பிற்கான ஆயுதக்கொளவனவாளரும் பிரபாகரனின் மரணத்தின் பின்னர் அவ்வியக்கத்தின் தலைவர் என தன்னை உலகிற்கு அறிமுகப்படுத்தி கொண்டவருமான கே.பி க்கு பொது மன்னிப்பு வழங்குவது தொடர்பாக தற்போதைக்கு எதுவும் திடமாக கூறமுடியாது என ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வல தெரிவித்துள்ளார்.
கே.பி க்கு எதிரான சில விசாரணைகள் தொடர்ந்தும் இடம்பெறுவதாக கூறியுள்ள அவர், அவ்விசாரணைகள் முடிவதற்கு முன்னர் கே.பி க்கு பொது மன்னிப்பு வழங்கக்கூடிய சாத்தியக்கூறுகள் தொடர்பாக எதுவும் கூறமுடியாதுள்ளதாகவும் கூறியுள்ளார்.
குமரன் பத்மநாதன் அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட்டு வருவதுடன் அரசாங்கத்தின் வேலைத்திட்டங்களுடன் புலம்பெயர் தமிழ் பிரமுகர்களை இணைத்துக்கொள்வதற்கு கே.பி மிகவும் தீவிரமாக செயற்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கே.பி – மஹிந்த அரசின் கூட்டு மக்களிடையே பெரும் அச்சத்தை தோற்றுவித்துள்ளதுடன் பல அரசியல் கட்சிகளிடமிருந்தும் எதிர்பலைகள் கிளம்பியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்
இப்புதிய உலக ஒழுங்கில் எமக்கான இலக்கை அடையும்வரை எமக்கென்று எதிரிகள் யாரும் இல்லை - கவர்ந்து கொள்வோம் இல்லையேல் கவிழ்த்து விடுவோம்!.... சூழ்ச்சியை சூழ்ச்சியால் வெல்வோம் - எந்த அஸ்திரத்தால் நாம் வீழ்ந்தோமோ அதே அஸ்திரத்தை எமைக்காக்கும் எதிரியை தாக்கும் ஆயுதமாய் ஏந்துவோம் - எழுந்து நிற்போம். காலம் இட்ட கட்டளைப்படி - அதிஉச்ச இராஜ தந்திரம் ஒன்றே லட்சியத்தை வென்றெடுப் பதற்கான ஒற்றைத் தெரிவு - வரலாறு காட்டியுள்ள பாதையும் அதுவே அப்பாதையில் தொடர்ந்தும் பயணிப்போம் - இலட்சியத்தை வென்றெடுப்போம்!....
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக