புதன், 17 மார்ச், 2010

எல்லோரும் களைத்து விட்டீர்களா ?

கடந்த வருடம் இதே நேரம் எம்மவர்களால் நடாத்தப்பட்ட ஊர்வலங்கள் எல்லாம் ஏன் இவ்வருடம் நடாத்த முடிய வில்லை எம்மால் ? தமிழர் என்ற இனம் இலங்கை தீவில் வாழ்ந்தார்கள் என்ற சுவடு அழிந்து விட்டதா?எமக்கு என்று ஒரு பிடி நிலமாவது வேண்டும் என்று ஏன் நாம் இப்போ கேட்கமுடியவில்லை சுயநலமா அல்லது சோரம் போய் விட்டீர்களா?அல்லது ........? கொடி தூக்கிய கைகளில் கோடிகளா?எம்மவர்களின் பணம் தானே யார் எப்படி போனால் என்ன நாம் இன்னும் விடுதலைப்புலிகள் தான் யார் என்ன செய்ய முடியும் என்ற எண்ணமா? விடுதலைபுலிகளுக்கும் அவர்களின் நிதிகளுக்கும் கொள்கைக்கும் உரிமை கோர விரும்புபவர்கள் கவனத்திற்கு .................. விடுதலைப்புலிகள் இயக்கம் உரிமையை வென்று எடுக்க புறப்பட்ட ஒரு அமைப்பு.அதனை வழிநடத்தியவர்கள் தலைவரின் கீழ் அவரை ஏற்று செயல்ப்பட்ட ஒட்டு மொத்த தமிழர்கள்.இதற்கு புது வியக்கியானம் கற்பிக்கும் நடவடிக்கையை உடனடியாக நிறுத்தும்படி கற்பிக்க நினைக்கும் ஆசான்களை கேட்டுக்கொள்கிறோம் . எல்லோரும் ஓன்று சேர்ந்து மீண்டும் ஒரு முறை சர்வதேசத்தின் தெருக்களில் இறங்கி ஆர்ப்பாட்டம் செய்வோம் வாருங்கள் உணர்வு சாகவில்லைதானே ..........................?இடித்து உரைப்போம் எழும்புங்கள் அண்ணன் வழி தமிழீழம் கிடைப்பது உறுதி ,விடியலுக்காக மரணித்த மாவீரர்களும்,மக்களும் எம்மை ஆசீர்வதிப்பார்கள்.தமிழீழம் கனவு அல்ல ஒவ்வொரு தமிழனின் தாகம் என்பதை இடித்து உரைப்போம் நடவுங்கள் தெருவை நோக்கி .......................

1 கருத்து:

  1. ugkaluukkai vedi sumaththa vetatai ninaiyugkal 30.000 mavitarkalin kanavukalin ninaivukal sumaththu velejil watugkal. en enamei,en sanamai mullivaikkaleil mudiththu ponatha em enaththin valalaru ellaije etu thodakkamai anri mudivalla, puthiya atampam putijugkal em makkalai kakka ugkalal than mudijum thodarththu potadu vetti vakai sudu em shaththathikku thajakaththai patisali.

    பதிலளிநீக்கு