வியாழன், 18 மார்ச், 2010

வவுனியா வீரபுரத்தில் றிசாத் பதியுதீனின் அராஜகம்

வவுனியாவில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சுவரொட்டிகளை ஒட்டிக் கொண்டிருந்தவர்களுக்கு றிசாட் பதியுதீனால் கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. வவுனியா வீரபுரம் பகுதியில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. தமிழர் பெரும்பான்மையாக வாழும் பகுதியில் அரசாங்கத்தை அண்டிப் பிழைக்கும் இந்த அராஜக அமைச்சரின் செயல் குறித்து மக்கள் ஆத்திரமடைந்துள்ளதாக வன்னிச் செய்திகள் தெரிவிக்கின்றன. நேற்றைய தினம் குறித்த பகுதியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவாளர்களால் ஒட்டப்பட்டிருந்த தேர்தல் சுவரொட்டிகளுக்கு மேல் றிசாத் பதியுதீனின் சுவரொட்டிகளை ஒட்டியிருக்கின்றனர். அப்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் இந்தச் செயலுக்கு தமது எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர். இதையடுத்து அங்கு நின்ற பதியுதீனின் ஆதரவாளர்கள் இது குறித்து தொலைபேசி மூலம் பதியுதீனுக்கு அறிவித்துள்ளனர். இதனைச் தொடர்ந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வாகனத்தை பின்தொடர்ந்து சென்ற அதிரடிப் படையினர் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவாளர் ஒருவரை தனியே அழைத்துச் சென்று தடுத்து வைத்துள்ளனர். சிறிது நேரத்தில் அவ்விடத்திற்கு வந்த பதியுதீன் அந்த ஆதரவாளருக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்துள்ளார். நான் கொலை செய்தால் என்னைக் கேள்வி கேட்பதற்கு யாரும் இல்லை என்று அதிகாரத்துடன் பேசிய றிசாத் பதியுதீனின் செயல் தமிழ் மக்களைக் கொதிப்படையச் செய்துள்ளது. தமிழரின் ஆயுத பலம் அழிக்கப்பட்டதன் காரணமாகவே இந்த அராஜகவாதிகளின் அட்டகாசம் தலைவிரித்தாடுவதாக மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக