இப்புதிய உலக ஒழுங்கில் எமக்கான இலக்கை அடையும்வரை எமக்கென்று எதிரிகள் யாரும் இல்லை - கவர்ந்து கொள்வோம் இல்லையேல் கவிழ்த்து விடுவோம்!.... சூழ்ச்சியை சூழ்ச்சியால் வெல்வோம் - எந்த அஸ்திரத்தால் நாம் வீழ்ந்தோமோ அதே அஸ்திரத்தை எமைக்காக்கும் எதிரியை தாக்கும் ஆயுதமாய் ஏந்துவோம் - எழுந்து நிற்போம். காலம் இட்ட கட்டளைப்படி - அதிஉச்ச இராஜ தந்திரம் ஒன்றே லட்சியத்தை வென்றெடுப் பதற்கான ஒற்றைத் தெரிவு - வரலாறு காட்டியுள்ள பாதையும் அதுவே அப்பாதையில் தொடர்ந்தும் பயணிப்போம் - இலட்சியத்தை வென்றெடுப்போம்!....
வியாழன், 18 மார்ச், 2010
யூரோ நாணயத்தின் ஸ்திரத்தன்மை பாதுகாக்கப்பட வேண்டும்
ஐரோப்பிய ஒற்றை நாணயமான யூரோவின் ஸ்திரத்தன்மையை பாதுகாக்கும் பொருட்டு கடுமையான நடவடிக்கைகளைக் கைகொள்வது பற்றியும் யூரோ நாணயத்தைப் புழங்கும் 16 நாடுகள் பரிசீலிக்க வேண்டும் என ஜெர்மனி வலியுறுத்துகிறது.
யூரோ நாணயத்தைப் புழங்கும் ஒரு நாடு தொடர்ந்து விதிகளை மீறிவந்தால், அந்த நாட்டின் உறுப்புரிமையை ரத்து செய்வதையும் கடைசி வழியாக யூரோ நாடுகள் பரிசீலிக்க வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் உரையாற்றுகையில் ஜெர்மன் சான்செல்லர் அங்கேலா மெர்க்கெல் கூறியுள்ளார்.
கிரேக்கம் தற்பொது எதிர்கொண்டுவரும் நிதி நெருக்கடிதான் யூரோ நாணயம் இதுவரை சந்தித்ததிலேயே மிகப் பெரிய சவால் என மெர்க்கெல் வருணித்துள்ளார்.
யூரோ நாணயத்தின் ஸ்திரத்தன்மையைப் பாதுகாப்பதற்காக நினைத்துப்பார்த்திராத ஒரு விஷயத்தைப் பரிசீலிக்கவும் ஜெர்மனி தயார் என்பதை மெர்க்கெலின் பேச்சு காட்டுவதாக பெர்லினில் உள்ள பிபிசி செய்தியாளர் கூறுகிறார்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக