வியாழன், 18 மார்ச், 2010

பொட்டம்மானைப் பார்த்தீர்களா ?

தேசிய இளைஞர் இயக்கம் என்ற போர்வையில் கடந்த சில மாதங்களாக தமிழ் இளைஞர்கள் அம்பாறை மாவட்டத்தில் சேர்க்கப்பட்டு வருவதாக அறிகிறது. இலங்கை புலனாய்வுப் பிரிவினருடம் இயங்கி வரும் சிலரால் ஒரு அமைப்பு உருவாக்கப்பட்டு வருவதாகவும், அதில் இளைஞர்கள் சேர்க்கப்பட்டு வருவதாகவும் கிராமவாசி ஒருவர் தெரிவித்துள்ளார். இதில் இணையும் இளைஞர்கள் மாலையில் வீடுசெல்ல அனுமதிக்கப்படுவதால், அவர்கள் பெற்றோருக்கு என்ன நடக்கிறது என்பது சரிவரத் தெரிவதில்லை எனவும் கூறப்படுகிறது. சேர்க்கப்படும் இளைஞர்களுக்கு, பெரும் தொகைப் பணமும் வழங்கப்படுவதோடு மட்டுமால்லாது, இவ்வாறு சேர்க்கப்பட்ட இளைஞர்களைக் கொண்டு நடமாடும் போராளிகளை அடையாளம் காணும் முயற்சியில் இவர்கள் ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இவ் இளைஞர்களைக் கொண்டு அப்பிரதேசக்தில் நடைபெறும் நிகழ்வுகள், விபரங்கள் மற்றும் சம்பவங்களையும் இலங்கை புலனாய்வுப் பிரிவினர் திரட்டிவருவதாகவும் கூறப்படுகிறது. புலிகள் நடமாட்டம் இருக்கிறதா என்று அடிக்கடி விசாரித்துவரும் இராணுவத்தினர் பொட்டம்மான் குறித்தும் விபரங்களை கேட்டுவருவதாகவும் கூறப்படுகிறது. சமீபகாலமாக பொட்டம்மான் குறித்து இலங்கை புலனாய்வுத்துறையினர் நேரடியாகவே பல விசாரணைகளை நடத்திவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இலங்கை அரசியல் வாதிகள் இவர் இறந்துவிட்டார் எனத் தொடர்ச்சியாகத் தெரிவித்துவருகின்ற போதிலும், இலங்கை புலனாய்வுத்துறையினரும், இந்தியாவும் இதனை நம்ப மறுக்கின்றது என்பதே ஜதார்த்தமாகும்.

1 கருத்து: