இப்புதிய உலக ஒழுங்கில் எமக்கான இலக்கை அடையும்வரை எமக்கென்று எதிரிகள் யாரும் இல்லை - கவர்ந்து கொள்வோம் இல்லையேல் கவிழ்த்து விடுவோம்!.... சூழ்ச்சியை சூழ்ச்சியால் வெல்வோம் - எந்த அஸ்திரத்தால் நாம் வீழ்ந்தோமோ அதே அஸ்திரத்தை எமைக்காக்கும் எதிரியை தாக்கும் ஆயுதமாய் ஏந்துவோம் - எழுந்து நிற்போம். காலம் இட்ட கட்டளைப்படி - அதிஉச்ச இராஜ தந்திரம் ஒன்றே லட்சியத்தை வென்றெடுப் பதற்கான ஒற்றைத் தெரிவு - வரலாறு காட்டியுள்ள பாதையும் அதுவே அப்பாதையில் தொடர்ந்தும் பயணிப்போம் - இலட்சியத்தை வென்றெடுப்போம்!....
சனி, 25 டிசம்பர், 2010
மானிப்பாயில் யாழ்.மாவட்ட பௌத்த தமிழ் சங்கம்
யாழ்.மாவட்ட பௌத்த தமிழ் சங்கம் என்ற பெயரிலான அமைப்பு ஒன்றினை முன்னெடுப்பதற்கான முனைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக யாழ்ப்பாணத்தை மேற்கோள் காட்டும் தகவல்கள் தெரிவிக்கின்றன.இது குறித்து அந்த அமைப்பிற்கான இணைப்பாளர் எனத் தன்னைக் கூறிக்கொள்ளும் அருள்நேசரத்தினம் ரவிக்குமார் என்பவர் தெரிவித்திருக்கின்றார். யுத்த சூழ்நிலையினால் இந்தச் சங்கத்தின் செயற்பாடுகள் முடங்கிப்போயிருந்தன. தற்போது ஏற்பட்டுள்ள சுமுகமான சூழ்நிலையினைக் கருத்திற்கொண்டு அதனை மீண்டும் யாழ்ப்பாணத்தில் இயக்குவதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவுள்ளோம்” என்று தெரிவித்துள்ள குறித்த நபர், சுமார் 100 இற்கு மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்டு ஆரம்பத்தில் இயங்கிய இந்தச் சங்கத்தின் ஊடாக பௌத்த தர்மத்தை போதிக்கும் பாடசாலையொன்றை மானிப்பாயில் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக