எங்களுக்காகத் தங்களைக் களப்பலியாக்கிய மாவீரர் தினத்தைக் கேள்விக்குள்ளாக்கும் எவரும் நிச்சயம் எம்மவர்களாக இருக்க முடியாது. மாவீரர்களது தியாகத்தைத் தமக்கான அடையாளப்படுத்தலுக்கும், தமது சுய லாபத்திற்கும் பயன்படுத்த நினைக்கும் எவரும் தமிழனாகப் பிறந்திருக்க முடியாது..காலம் உங்களுக்கு வழங்கிய கடமைகளை நேர்மையான பாதையில் நின்ற...ு நிறைவேற்றுங்கள். மாவீரர்கள் தங்களது உயிரை அர்ப்பணித்து உயர்த்திப் பிடித்த தமிழீழ இலட்சிய நெருப்பை நீங்களும் கைகளில் ஏந்துங்கள். அவர்கள் கல்லறைகளில் உங்கள் கண்ணீரையும் காணிக்கையாக்குங்கள். மாவீரர் நாளில் ஆயிரம் ஆயிரமாகத் திரளும் தமிழ் மக்களுடன் நீங்களும் விளக்கேற்றி சத்தியம் செய்யுங்கள். ‘தமிழீழ இலட்சியம் நோக்கிய பாதையில் நாங்கள் எல்லோரும் ஒன்றாகஎழுவோம்’
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக