வெள்ளி, 26 மார்ச், 2010

துணை ஆளுநராக தமிழ்மகன்.

அமெரிக்க இலினொய்ஸ் மாநிலத் துணை ஆளுநராக தமிழர் ஒருவர் நியமிக்கப்படவுள்ளார். ஜனாதிபதி பரக் ஒபாமா இதற்கான தீர்மானித்தை எடுத்துள்ளார்.அமெரிக்காவில் வாழும் தமிழரான ராஜா கிருஷ்ணமூர்த்தி என்பவரையே ஜனாதிபதி ஒபாமா துணை ஆளுனராக நியமிக்கத் தீர்மானித்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. இவர் ஒபாமாவின் அரசாங்கத்தில் கொள்கை திட்டமிடல் ஆலோசகராக கடமையாற்றியவராவார்.இலினொய்ஸ் மாநிலத்துக்கான ஆளுநர், துணை ஆளுநர் பதவிகளுக்கான தேர்தல் எதிர்வரும் நவம்பர் மாதம் இடம்பெறவுள்ளது. துணை ஆளுநராக ராஜா கிருஷ்ணமூர்த்தி தெரிவு செய்யப்பட்டால், அமெரிக்க மாநிலமொன்றில் இந்தப் பதவியை வகிக்கும் முதலாவது தமிழர் என்ற பெருமை இவரைச் சார்ந்திருக்கும். ஜனாதிபதி ஒபாமாவின் நீண்டகால நண்பர் ராஜா கிருஷ்ணமூர்த்தி. கடந்த காலங்களில், ஒபாமாவின் தேர்தல் பிரசாரங்களில் ராஜா கிருஷ்ணமூர்த்தி முக்கிய பங்கெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக