வெள்ளி, 26 மார்ச், 2010

துப்பாக்கிப் பிரயோகங்களின் எண்ணிக்கையில் உயர்வு

தென் ஆபிரிக்க காவல்துறையினரால் மக்கள் மீது நடத்தப்படும் துப்பாக்கிப் பிரயோகத் தாக்குதல்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. முன்னைய வருடத்துடன் ஒப்பீடு செய்யும் போது கடந்த வருடத்தில் தென் ஆபிரிக்க காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிப் பிரயோகங்களின் எண்ணிக்கை 25 வீதத்தினால் உயர்வடைந்துள்ளது. 2008ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் 2009ம் ஆண்டு மார்ச் மாதம் வரையில் தென் ஆபிரிக்க காவல்துறையினர் நடத்திய தாக்குதல்களில் 556 பேர் கொல்லப்பட்டுள்ளனர். குற்றவியல் சட்டத் திருத்தங்களை மேற்கொள்வது தொடர்பில் நடைபெற்ற விவாதமொன்றின் போது இந்தத் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்தும் குற்றவாளிகளை சுட்டுக் கொல்வதில் தவறில்லை என ஆளும் கட்சி அமைச்சர் ஒருவர் கருத்து வெளியிட்டுள்ளார். உலகில் அதிகளவு குற்றச் செயல்கள் இடம்பெறும் நாடுகளின் வரிசையில் தென் ஆபிரிக்காவும் முக்கிய இடம் வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது. எவ்வாறெனினும், மக்களை படுகொலை செய்வதற்கான அனுமதிப் பத்திரமாக காவல்துறையினர் சட்டத்தை பயன்படுத்தக் கூடாது என தென் ஆபிரிக்க ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக