புதன், 26 மே, 2010

ஓராண்டு முடிந்தது – எங்கள்
உறவுகள் மடிந்து ,


ஓராண்டு முடிந்தது
எங்கள் உறவுகள் சிதைந்து ,


ஓராண்டு முடிந்தது – எங்கள்....
உறவுகளின் இரத்தம்,
தசைகளை
உலகம் ஒன்றாய் சுவைத்து
ஓராண்டு முடிந்தது –
இன்றோடு....
ஓராண்டு முடிந்தது...


மரண ஓலம் எங்கும்...


மண் மீது இரத்த ஆறு...
காப்பாற்று... காப்பாற்று... என்று
கதறிய உறவுகளின் கலங்கிய
நெஞ்சம்......கண்ணுக்குள் இன்றும்...



முத்துக்குமரனும் முருகதாசனும்
மூட்டிய தீ
முடிவு காணமல் மாண்டு
இன்றோடு ஓராண்டு...



முடிந்தவரை போராடி
உறுப்பிழந்தும்
உறவுகள் பிரிந்தும்
உறுதியோடே
கடைசிவரை
விடுதலைகாய்
மண்காத்து மாவீர காவியம்
எழுதிய ஓராண்டு
இன்றோடு ஓராண்டு….
மனமொடிந்த உறவுகளை
முள்வேலிக்குள்
முடக்கி போட்டு ஓராண்டு

பதினேழாயிரம் இளைஞர்களை
இருட்டிலிட்டு ஓராண்டு.....
தொடரும்
எத்தனை எத்தனையோ
மனித உரிமை மீறல்.....
இன்னும் உலகம்
கண்களை திறக்க எத்தனை ஆண்டோ...?
எங்கள் கைகளை
உடைத்த காந்தி தேசமே...
விடுதலை பறித்த வெற்றி களிப்போ...?.
உறக்கம் இல்லை இனி உனக்கு
உன் கால்கள் உடையும் சீனக்காரனால்...
காண்பாய்…!..நீ காண்பாய்..!
முள்ளிவாய்கால் எங்கள் முடிவோ...
இல்லை இல்லை ...எட்டுதிக்கும் தமிழர் படை இனிதான் பிறக்கும்...
சிங்களனே கேள்..
எட்டுதிக்கும் தமிழர் படை இனிதான் பிறக்கும்...
சீறி வரும் இளைஞர் கூட்டம்-உன்
இறுமாப்பை உடைக்கும்-நீ
சிதறி ஓடும் காலம் ஒன்று
இனியும் பிறக்கும்....


உன் கம்பிவேலியும்
கந்தக கருவியும் தாண்டி
எங்கள் கனவுகள் ஈடேறும்
காலம் இனிதான் பிறக்கும்.....


உணர்விழந்த தமிழகமே...
உணர்விழந்த தமிழகமே...
ஒன்றாய் வருங்கள் உறுதியேடுப்போம்....


உங்களுக்கும் தேசம் வேண்டும்..
எங்களுக்கும் தேசம் வேண்டும்..
உழுத்துப்போன ஒன்றியத்தில்
உரிமை இழந்து வாழ்வானேன்....
ஒன்றாய் எழுவோம் வாருங்கள்
உலக வரைபடத்தில் தமிழ்தேசம் இரண்டு.
இனி எமக்கு தேசம் இரண்டு..!


அமைதிவேண்டாம்...
இனியும் அமைதிவேண்டாம்
அடிமைவிலங்கை உடைத்தெரிய
அங்குலம் அங்குலமாய் அடிவைப்போம்...
ஓர்மை என்ற இனக்குடைக்குள்
ஒன்றாய் எழுந்து ஒன்றாய் மடிவோம்...
வாருங்கள்…….


அரசியலோ ஆயுதமோ....
பொதுவுடைமையோ....
புரட்சி படையோ....
புதிய புதிய சிந்தனையோ...
எங்கும் எங்கும் இடம்பிடிப்போம்...
இனம், இனம்,
எங்கள் இன விடுதலை
என்றே முழங்கிவருவொம்.....
கனவுகள் தகர்ந்திட வில்லை
எங்கள் தாயக
கனவுகள் தகர்ந்திடவில்லை
என்று முழங்கி வருவொம்
தலைவன் வரும் காலம்வரை....
உறவுகளே...
உள்ளக்கிடக்கை ஒன்றே எமக்குள்..
தாகம் தனிக்கும் எம்தலைவன்
மீளும் காலம் விரைவில் வரட்டும்.....
அடிமையில்லா வாழ்வு தரட்டும்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக