ஐயா எனப்படும் சங்கானையினை பிறப்பிடமாக கொண்ட பொன்னையா அனந்தராஜா அல்லது இராஜா எனப்படும் ஐயா இவர் அமெரிக்கன் பாஸ்போட் வைத்துள்ளாராம். இவர்
விடுதலைப்புலிகளுக்கு ஆயுத கொள்வனவிற்கு பொறுப்பாக 2003 ஆம் ஆண்டில் இருந்து நியமிக்கப்பட்டவர் என கூறப்பட்டுள்ளது.
அடுத்ததாக அச்சுதன் எனப்படும் சிவராஜா பிருந்தாபன் இவர் யாழ்ப்பாணத்தினை சேர்ந்தவர் 1972 ஆம் ஆண்டு பிறந்தவர் பிரான்ஸ் பாஸ்போட்டினை வைத்துள்ளாராம். இவரும் தென் ஆசிய நாடுகளில் கொள்வனவு நடவடிக்கை மற்றும் விடுதலைப்புலிகளின் குறிப்பிட்ட வியாபார முயற்சிகளுக்கும் பொறுப்பாக செயற்பட்டு வருகின்றாராம்.
கூடவே நரேந்திரன், பவிந்திரன்,ரூபன் எனப்படும் மூவர் பெயரையும் இலக்கு வைத்து சிறிலங்கா புலனாய்வுத்துறையின் வேட்டை தொடர்கின்றது.
அண்மையில் வன்னியில் கண்டெடுக்கப்பட்டுள்ள விடுதலைப்புலிகளின் ஆவணங்களில் இருந்தும், வீடியோக்களில் இருந்தும் இவர்களின் செயற்பாடுகள் விபரங்கள் ஆகியன அடங்கி இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
இப்புதிய உலக ஒழுங்கில் எமக்கான இலக்கை அடையும்வரை எமக்கென்று எதிரிகள் யாரும் இல்லை - கவர்ந்து கொள்வோம் இல்லையேல் கவிழ்த்து விடுவோம்!.... சூழ்ச்சியை சூழ்ச்சியால் வெல்வோம் - எந்த அஸ்திரத்தால் நாம் வீழ்ந்தோமோ அதே அஸ்திரத்தை எமைக்காக்கும் எதிரியை தாக்கும் ஆயுதமாய் ஏந்துவோம் - எழுந்து நிற்போம். காலம் இட்ட கட்டளைப்படி - அதிஉச்ச இராஜ தந்திரம் ஒன்றே லட்சியத்தை வென்றெடுப் பதற்கான ஒற்றைத் தெரிவு - வரலாறு காட்டியுள்ள பாதையும் அதுவே அப்பாதையில் தொடர்ந்தும் பயணிப்போம் - இலட்சியத்தை வென்றெடுப்போம்!....
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக