இப்புதிய உலக ஒழுங்கில் எமக்கான இலக்கை அடையும்வரை எமக்கென்று எதிரிகள் யாரும் இல்லை - கவர்ந்து கொள்வோம் இல்லையேல் கவிழ்த்து விடுவோம்!.... சூழ்ச்சியை சூழ்ச்சியால் வெல்வோம் - எந்த அஸ்திரத்தால் நாம் வீழ்ந்தோமோ அதே அஸ்திரத்தை எமைக்காக்கும் எதிரியை தாக்கும் ஆயுதமாய் ஏந்துவோம் - எழுந்து நிற்போம். காலம் இட்ட கட்டளைப்படி - அதிஉச்ச இராஜ தந்திரம் ஒன்றே லட்சியத்தை வென்றெடுப் பதற்கான ஒற்றைத் தெரிவு - வரலாறு காட்டியுள்ள பாதையும் அதுவே அப்பாதையில் தொடர்ந்தும் பயணிப்போம் - இலட்சியத்தை வென்றெடுப்போம்!....
ஞாயிறு, 18 ஜூலை, 2010
நம் தாய் மண் இன்று மாற்றார் கையில். கடந்த வருடம் மே மாதம் வரை, துரோகத்தனங்களினால் காட்டிக் கொடுக்கப்பட்டு ஈழ மண் அந்நியர்களினால் ஆங்காங்கே ஆக்கிரமிக்கப்பட்டு இருந்தாலும் கூட, என்றாவது ஒரு நாள் எமது மண் பூரணமாக மீட்கப்பட்டு விடும், விடுதலை பெறும் என்கிற நம்பிக்கை எம்மில் 80%மானோர்க்கு இருந்தது. ஆனால் அன்று தொட்டு இன்றைய நாளின் இந்த நிமிடம் வரை எமக்குள்ளேயே வாழ்ந்து கொண்டிருக்கும் எம்மின விடுதலை எதிர்ப்பாளர்களினால், எமது மண்ணிற்கு, எமது மக்களின் விடுதலை வரலாற்றிற்கு, இழைக்கப்பட்ட துரோகங்களினால் இன்று அனைத்தையும் இழந்து நிற்கிறோம். !!
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக