ஞாயிறு, 18 ஜூலை, 2010

நம் தாய் மண் இன்று மாற்றார் கையில். கடந்த வருடம் மே மாதம் வரை, துரோகத்தனங்களினால் காட்டிக் கொடுக்கப்பட்டு ஈழ மண் அந்நியர்களினால் ஆங்காங்கே ஆக்கிரமிக்கப்பட்டு இருந்தாலும் கூட, என்றாவது ஒரு நாள் எமது மண் பூரணமாக மீட்கப்பட்டு விடும், விடுதலை பெறும் என்கிற நம்பிக்கை எம்மில் 80%மானோர்க்கு இருந்தது. ஆனால் அன்று தொட்டு இன்றைய நாளின் இந்த நிமிடம் வரை எமக்குள்ளேயே வாழ்ந்து கொண்டிருக்கும் எம்மின விடுதலை எதிர்ப்பாளர்களினால், எமது மண்ணிற்கு, எமது மக்களின் விடுதலை வரலாற்றிற்கு, இழைக்கப்பட்ட துரோகங்களினால் இன்று அனைத்தையும் இழந்து நிற்கிறோம். !!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக