ஐயா சம்பந்தன் தேர்ந்தெடுத்த ஆட்கள் இவர்கள்!. பியசேன என சிங்களப் பெயருடன், தமிழ் தாயின் பாலைக் குடித்து வளர்ந்த இவர் பெயரில் உள்ள சிங்களப் புத்தியைக் காண்பித்துவிட்டார் தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் முதல் முதல் போட்டியிட்ட சிங்களவர் பியசேன. நாடாளுமன்ற உறுப்பினராக இவர் தெரிவானார். மக்கள் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் மேல்வைத்திருந்த நம்பிக்கையால் இவருக்கு வாக்களித்தனர்.
பியசேன, மஹிந்த ராஜபக்சவைப் புகழ்ந்து தள்ளியதுடன், மீள்குடியேற்றம் உட்பட்ட பல நடவடிக்கைகளில் தான் திருப்பி அடைந்துள்ளதாகவும், இதனால் அரசினால் முன்வைக்கப்படுகின்ற 18ஆவது திருத்தச் சட்டத்திற்கு ஆதரவளிப்பதாகவும் மூச்சுவிடாமல் சொல்லி முடித்துள்ளார். இனியும் யார் யார் பணத்தாசை பிடித்து மஹிந்த பக்கம் தாவ உள்ளனரோ என்ற அச்சத்தில் மூழ்கியுள்ளார் சம்பந்தன்,
இப்புதிய உலக ஒழுங்கில் எமக்கான இலக்கை அடையும்வரை எமக்கென்று எதிரிகள் யாரும் இல்லை - கவர்ந்து கொள்வோம் இல்லையேல் கவிழ்த்து விடுவோம்!.... சூழ்ச்சியை சூழ்ச்சியால் வெல்வோம் - எந்த அஸ்திரத்தால் நாம் வீழ்ந்தோமோ அதே அஸ்திரத்தை எமைக்காக்கும் எதிரியை தாக்கும் ஆயுதமாய் ஏந்துவோம் - எழுந்து நிற்போம். காலம் இட்ட கட்டளைப்படி - அதிஉச்ச இராஜ தந்திரம் ஒன்றே லட்சியத்தை வென்றெடுப் பதற்கான ஒற்றைத் தெரிவு - வரலாறு காட்டியுள்ள பாதையும் அதுவே அப்பாதையில் தொடர்ந்தும் பயணிப்போம் - இலட்சியத்தை வென்றெடுப்போம்!....
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக