ஊடகவியலாளர் ஜெ.எஸ்.திஸாநாயகம் அமெரிவிக்காவிற்கான பயணத்தை மேற்கொண்டிருப்பதாக ஊடகவியலாளர் பாதுகாப்புக் குழு தெரிவித்துள்ளது.
வொஷிங்டன் டுலஸ் சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்த ஜெ.எஸ்.திஸாநாயகத்திற்கு வரவேற்பளிக்கப்பட்டதாக ஊடகவியலாளர் பாதுகாப்புக் குழு குறிப்பிட்டது.
இந்நிலையில், தமது விடுதலைக்காக ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் ஜெ.எஸ்.திஸாநாயகம் நன்றி தெரிவித்துள்ளார். கடந்த 2006ஆம் ஆண்டு ஜுன் மாதம் முதலாம் திகதிக்கும், 2007ஆம் ஆண்டு ஜுன் மாதம் முதலாம் திகதிக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் மாதாந்த சஞ்சிகையொன்றின் ஊடாக இன வேறுபாட்டை தூண்டும் செய்திக் கட்டுரையை வெளியிட்டாரென்றும், இந்த சஞ்சிகைக்கு நிதி சேகரித்து அதன் மூலம் பயங்கரவாத செயல்பாட்டிற்கு உதவினாரென்றும் ஜெ.எஸ்.திஸாநாயகம் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தார்.
இந்த நிலையில், பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழும், அவசரகால சட்ட விதிகளின் கீழும் ஜெ.எஸ்.திஸாநாயகம் கைதுசெய்யப்பட்டு அவருக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டிருந்தது. கடந்த ஜனவரி மாதம் பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் ஜெ.எஸ்.திஸாநாயகத்திற்கு உலக ஊடக சுதந்திர தினத்தையொட்டி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ பொதுமன்னிப்பு வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது
இப்புதிய உலக ஒழுங்கில் எமக்கான இலக்கை அடையும்வரை எமக்கென்று எதிரிகள் யாரும் இல்லை - கவர்ந்து கொள்வோம் இல்லையேல் கவிழ்த்து விடுவோம்!.... சூழ்ச்சியை சூழ்ச்சியால் வெல்வோம் - எந்த அஸ்திரத்தால் நாம் வீழ்ந்தோமோ அதே அஸ்திரத்தை எமைக்காக்கும் எதிரியை தாக்கும் ஆயுதமாய் ஏந்துவோம் - எழுந்து நிற்போம். காலம் இட்ட கட்டளைப்படி - அதிஉச்ச இராஜ தந்திரம் ஒன்றே லட்சியத்தை வென்றெடுப் பதற்கான ஒற்றைத் தெரிவு - வரலாறு காட்டியுள்ள பாதையும் அதுவே அப்பாதையில் தொடர்ந்தும் பயணிப்போம் - இலட்சியத்தை வென்றெடுப்போம்!....
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக