இப்புதிய உலக ஒழுங்கில் எமக்கான இலக்கை அடையும்வரை எமக்கென்று எதிரிகள் யாரும் இல்லை - கவர்ந்து கொள்வோம் இல்லையேல் கவிழ்த்து விடுவோம்!.... சூழ்ச்சியை சூழ்ச்சியால் வெல்வோம் - எந்த அஸ்திரத்தால் நாம் வீழ்ந்தோமோ அதே அஸ்திரத்தை எமைக்காக்கும் எதிரியை தாக்கும் ஆயுதமாய் ஏந்துவோம் - எழுந்து நிற்போம். காலம் இட்ட கட்டளைப்படி - அதிஉச்ச இராஜ தந்திரம் ஒன்றே லட்சியத்தை வென்றெடுப் பதற்கான ஒற்றைத் தெரிவு - வரலாறு காட்டியுள்ள பாதையும் அதுவே அப்பாதையில் தொடர்ந்தும் பயணிப்போம் - இலட்சியத்தை வென்றெடுப்போம்!....
வியாழன், 29 ஏப்ரல், 2010
யாழில் நகைகளை அபகரிக்க முயன்ற தென்னக யுவதி பிடிபட்டார்
யாழ்ப்பாணம் முத்திரைச் சந்திப் பகுதியில் நேற்று புதன்கிழமை காலை வேளை, வயோதிபப் பெண் ஒருவரிடம் தங்க நகைகள் அபகரிக்க முற்பட்ட தென்பகுதியைச் சேர்ந்த இளம்பெண், பாதுகாப்புப் படைப்பிரிவினரால் பிடிக்கப்பட்டார். யாழ்ப்பாண நகர் சென்றுவிட்டு பஸ்ஸில் முத்திரைச் சந்தியில் இறங்கி தனது வீடு நோக்கி 60 வயது மதிக்கத்தக்க மேற்படி வயோதிபப் பெண் நடந்து சென்று கொண்டிருந்த போது, அவரைப் பின் தொடர்ந்து வந்த நாகரீகமாக உடையணிந்த மூன்று யுவதிகள் அவரது நகைகளை அறுத்துக் கொண்டு ஓட முற்பட்டுள்ளனர். வயோதிப மாது கூக்குரல் எழுப்பவே, அப்பகுதியில் கடமையில் இருந்த பாதுகாப்புப் படையினர் ஒரு யுவதியைப் பிடித்தனர். ஏனைய இருவரும் தப்பி ஓடிவிட்டனர். பிடிக்கப்பட்ட யுவதியை படையினர் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையின் போது, குறிப்பிட்ட பெண் தென்பகுதியைச் சேர்ந்த பெரும்பான்மையினத்தவர் என்பது தெரியவந்தது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக