வியாழன், 29 ஏப்ரல், 2010


ஒரே ஒரு நிமிடம் எனக்காக அழு! நானும் தொலைந்துபோன சுதந்திரம் போலவே! வன்னி போரின் போது பூத்த பிஞ்சு பூ நான் ! மொட்டு பூவாக மாறுமுன்னரே கசக்கப்படும் பூக்களின் நடுவிலே! வாட ''மல்லி''' போலே நானிருப்பதால் தவித்து பதறுகிறேன் துடிக்கிறேன்! தூரதேசம் வாழும் என் உறவுகளே! வாருங்கள் என் தேசத்திற்கு ..... என் போன்றவரை உரித்தாக்க உங்கள் உறவாக்க ஒரு முறை வாருங்கள்...... யுத்தம் தந்த பரிசை கையில் ஏந்திய படி காத்திருக்கிறேன்! என் உறவே வருவீர்களா? இல்லையேல் எனக்காக ஒரே ஒரு நிமிடம் அழுங்கள்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக