இப்புதிய உலக ஒழுங்கில் எமக்கான இலக்கை அடையும்வரை எமக்கென்று எதிரிகள் யாரும் இல்லை - கவர்ந்து கொள்வோம் இல்லையேல் கவிழ்த்து விடுவோம்!.... சூழ்ச்சியை சூழ்ச்சியால் வெல்வோம் - எந்த அஸ்திரத்தால் நாம் வீழ்ந்தோமோ அதே அஸ்திரத்தை எமைக்காக்கும் எதிரியை தாக்கும் ஆயுதமாய் ஏந்துவோம் - எழுந்து நிற்போம். காலம் இட்ட கட்டளைப்படி - அதிஉச்ச இராஜ தந்திரம் ஒன்றே லட்சியத்தை வென்றெடுப் பதற்கான ஒற்றைத் தெரிவு - வரலாறு காட்டியுள்ள பாதையும் அதுவே அப்பாதையில் தொடர்ந்தும் பயணிப்போம் - இலட்சியத்தை வென்றெடுப்போம்!....
வியாழன், 29 ஏப்ரல், 2010
ஒரே ஒரு நிமிடம் எனக்காக அழு! நானும் தொலைந்துபோன சுதந்திரம் போலவே! வன்னி போரின் போது பூத்த பிஞ்சு பூ நான் ! மொட்டு பூவாக மாறுமுன்னரே கசக்கப்படும் பூக்களின் நடுவிலே! வாட ''மல்லி''' போலே நானிருப்பதால் தவித்து பதறுகிறேன் துடிக்கிறேன்! தூரதேசம் வாழும் என் உறவுகளே! வாருங்கள் என் தேசத்திற்கு ..... என் போன்றவரை உரித்தாக்க உங்கள் உறவாக்க ஒரு முறை வாருங்கள்...... யுத்தம் தந்த பரிசை கையில் ஏந்திய படி காத்திருக்கிறேன்! என் உறவே வருவீர்களா? இல்லையேல் எனக்காக ஒரே ஒரு நிமிடம் அழுங்கள்!
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக