இப்புதிய உலக ஒழுங்கில் எமக்கான இலக்கை அடையும்வரை எமக்கென்று எதிரிகள் யாரும் இல்லை - கவர்ந்து கொள்வோம் இல்லையேல் கவிழ்த்து விடுவோம்!.... சூழ்ச்சியை சூழ்ச்சியால் வெல்வோம் - எந்த அஸ்திரத்தால் நாம் வீழ்ந்தோமோ அதே அஸ்திரத்தை எமைக்காக்கும் எதிரியை தாக்கும் ஆயுதமாய் ஏந்துவோம் - எழுந்து நிற்போம். காலம் இட்ட கட்டளைப்படி - அதிஉச்ச இராஜ தந்திரம் ஒன்றே லட்சியத்தை வென்றெடுப் பதற்கான ஒற்றைத் தெரிவு - வரலாறு காட்டியுள்ள பாதையும் அதுவே அப்பாதையில் தொடர்ந்தும் பயணிப்போம் - இலட்சியத்தை வென்றெடுப்போம்!....
சனி, 25 செப்டம்பர், 2010
களியாட்டத்தால் காவு கொள்ளப்பட்ட உயிர்
தமிழ் வானொலி ஒன்றின் அனுசரனையுடன் துரையப்பா விளையாட்டு அரங்கில் நடந்த களியாட்ட நிகழ்வில் இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். துரையப்பா விளையாட்டரங்கில் உள்ள கால்ப் பந்து தடுப்பு காப்பு கம்பி மீது ஒன்றின் அருகில் நின்று களியாட்டத்தை பார்த்துக் கொண்டிருருந்த வேளை சன நெரிசல் காரணமாக கம்பி வளைந்து குறிப்பிட் இளைஞனின் தலை மற்றும் நெஞ்சுப் பகுதியை தாக்கியதாக தெரியவருகின்றது. இதனால் படுகாயமடைந்து யாழ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று முந்தினம் இளைஞன் உயிரிழந்தார். மல்லாகம் நீதிமன்றவீதியை சேர்த 18 வயதுடைய சி.ஜஸ்ரின் என்பவரே உயிரிழந்தவர் ஆவார்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக