இப்புதிய உலக ஒழுங்கில் எமக்கான இலக்கை அடையும்வரை எமக்கென்று எதிரிகள் யாரும் இல்லை - கவர்ந்து கொள்வோம் இல்லையேல் கவிழ்த்து விடுவோம்!.... சூழ்ச்சியை சூழ்ச்சியால் வெல்வோம் - எந்த அஸ்திரத்தால் நாம் வீழ்ந்தோமோ அதே அஸ்திரத்தை எமைக்காக்கும் எதிரியை தாக்கும் ஆயுதமாய் ஏந்துவோம் - எழுந்து நிற்போம். காலம் இட்ட கட்டளைப்படி - அதிஉச்ச இராஜ தந்திரம் ஒன்றே லட்சியத்தை வென்றெடுப் பதற்கான ஒற்றைத் தெரிவு - வரலாறு காட்டியுள்ள பாதையும் அதுவே அப்பாதையில் தொடர்ந்தும் பயணிப்போம் - இலட்சியத்தை வென்றெடுப்போம்!....
திங்கள், 10 மே, 2010
சிவில் படையினர் இளைஞர் மீது தாக்குதல்:மன்னாரில் சம்பவம்
மன்னார் பஸ்தரிப்பு நிலையத்துக்கு அருகில் உள்ள உணவகம் ஒன்றுக்கு முன்னால் நின்று கொண்டிருந்த இளைஞர் ஒருவரை சிவிலில் வந்த காவற் படையினர் மூவர் இன்று இரவு 8.30 மணியளவில் தாக்கியுள்ளனர். மேற்படி 25 வயதான இளைஞர் உணவகத்தில் உணவு அருந்தி விட்டு வெளியில் நின்று கொண்டிருந்த போது, வாகனம் ஒன்றில் சிவிலில் வந்த படையினர் மூவருக்கும் இளைஞருக்கும் இடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து படையினரில் ஒருவர் தன்னிடம் இருந்த கண்ணாடி போத்தல் ஒன்றினால் இளைஞரின் முகத்தில் தாக்கியுள்ளார். இந்நிலையில் அவ்விடத்தில் பதற்றநிலை உருவானதுடன் பொலிஸாரும், இராணுவப் படையினரும் கூடி பதற்ற நிலையை வழமைக்குக் கொண்டு வந்துள்ளனர். இதன் பின் தாக்குதலுக்கு உள்ளான இளைஞரை அவர்கள் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். தாக்குதல் நடத்திய சிவில் படையினர் மூவரும் மதுபோதையில் இருந்துள்ளதாகத் தெரியவருகின்றது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக