திங்கள், 10 மே, 2010

முள்ளிவாய்க்கால்1-18


முள்ளிவாய்க்கால் முடிவல்ல.. 1. சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம் என்று சொன்ன மகாகவியே எப்படி? கற்களினாலா? கபால ஓடுகளாலா? 2. டாங்கிகள் கிளறிப் போட்ட சேற்றில் கண்களைத் திறந்தபடி செத்துக் கிடந்த குழந்தையின் விழியில் நீலவானம் சிறுத்துச் சிறுத்து போர் விமானமாய்... இரத...்தம் உறைந்த உதடுகளின் நெளிவில் ஏளனம் 3. சிட்னியில் சிறுவர் பள்ளியில் ‘இலங்கையின் தலை நகரம் எது?’ வினாவுக்கு விடை எழுதியது புலம் பெயர் தமிழ்க்குழந்தை ‘கொழுப்பு’ 4. முகம் சிவந்தார் ஹிட்லர் மகிந்த ராஜபக்ஷேவைப் பார்த்து “ஆஸ்ட்விட்ஸ் புக்கன் வால்டு என ஆங்காங்கே கொலைக்களம் வைத்திருந்தேன் யூதர்களுக்கு... நீங்கள் என்னை வென்று விட்டீர்கள் மூன்றில் ஒரு பங்கு நாட்டையே அல்லவா படு கொலைக் கூடமாக்கிவிட்டீர்கள் விட்டுத் தருகிறேன் “பிரபஞ்சக் கொலைகாரர்” பட்டம் உங்களவர்களுக்கே” 5. டொரான்டோவில் புலம் பெயர் மக்கள் ஊர்வலம் சிறுவன் கையில் தட்டி “உயிர்த்தெழுவோம் உயிர்த்தெழுவோம்” பக்கத்தில் சென்று கேட்டேன் “தலைவர் உயிரோடிருக்கிறாரா”? சுட்டும் விழிச் சுடரோடு சுடச் சுட வந்தது பதில்: “தெரியாது உயிரோடு இருக்கிறார்கள் துரோகிகள்”. 6. பசப்பு வார்த்தைகள் பயனற்ற வார்த்தைகள் பச்சோந்தி வார்த்தைகள் கசப்பு வார்த்தைகள் கண்ணீர் வார்த்தைகள் கர்ஜனை வார்த்தைகள் சுனாமியாய்த் தாக்க ஈழத்துக் கடற்கரையில் மேலும் ஒதுங்கின தமிழர் பிணங்கள்! 7. குண்டுபட்ட தழும்பு கிளிநொச்சிச் பனை உச்சியில் தாய்க்கிளி குஞ்சுக்கிளிக்குச் சொல்லிற்று : “சிறகு முளைத்ததும் பறக்கலாம் கண்ணே எல்லாத் திசையிலும்... வேண்டாம் வடக்குத் திசை அது நமக்கு எமன் திசை”. 8. கதவு தட்டிப் பாற்சோறு காட்டி வெற்றியைக் கொண்டாடச் சாப்பிடச் சொன்னான் சிங்கள இளைஞன் கதவு திறந்த தமிழர் பார்வையில் தெரிந்தது பாற்சோறு அல்ல இரத்தம் கசியும் பலிச்சோறு. 9. யாரோ பத்திரிக்கை ஆசிரியராம் தமிழ் நாட்டிலிருந்தாம் அகதிகள் முகாமில் ஆர்வத்தோடு கேட்டாராம் “இனி யார் உங்களைப் பாத்துப்பா”? கிழிந்த லுங்கியை இறுக்கிய பெரியவர் சொன்னார் “எங்கள் உழைப்பு”. 10. முள்ளி வாய்க்காலில் பாதி கரையிலும் பாதி நீரிலுமாகக் கிடந்தது விடுதலைப்போர் வீரனின் உடல் முகம் மண்ணை முத்தமிட்டபடி கால் பிடிவாதமாக வடக்குத் திசையை எற்றியபடி. 11. பெய்ஜிங்கிலிருந்து கொழும்புக்கு வந்தது வாழ்த்துச் செய்தி! “திட்டமிட்டு வெற்றிபெற்றுவிட்டீர்கள் நாங்கள் திபேத்தில் செய்தது போல” 12. கண்டியில் படுத்திருந்தார் புத்தர் கோரைப் பற்களுடன் சிங்கள பிக்குகள் ஊதுவத்தி கொளுத்தி வழிபடலாயினர் “புத்தம் சரணம் கச்சாமி தமிழர் மரணம் கச்சாமி” 13. இன்று துரோகிகள் ஓடி ஒளிக்கின்றனர் முப்பது நாடும் ஒன்றாய் செய்த தவறை மறைக்க தமிழனுக்கு தீர்வு கொடுப்பதுபோல் நடிக்கிறன நாட்களை நகர்த்தியபடி.. 14. தமிழகத்திலும், புலத்திலும் தலைவன் வருகைக்காக பாதை அமைக்கின்றன தாயக வடக்கிலும் கிழக்கிலும் புலியில்லா வாழ்வை தமிழ் உறவுகள் ஏற்க மறுக்க தொடங்கி விட்டனர் 15. உலக வல்லரசும், சிங்கள தேசமும் தமிழர்களை முட்டாளாக்க எடுத்த முயற்சியும் படுதோல்வியிலே தன் மானமுள்ள ஒவ்வொரு தமிழனும் தலைவனுடன் இணந்து தமிழீழம் நோக்கி நடக்க புறப்பட்டு விட்டான்!!! 16. ஏற்றுக் கொள்ள முடியாத கோத்தபாய கொக்கரிக்கிறார் பசீலும் பச்சையாக பேசுகிறான் ராஜபக்சாவும் சோனியாவும் கருணாநிதியை அழைத்து கற்ப்பூரம் காட்டுகிறான் இதில் சிங்கள சொறி நாய்களும் எலும்புக்காக அலையும் துரோகிகளும் தமிழர் அடையாளங்களை அழிக்கிறான்கள்... 17. முள்ளிவாய்க்காலோடு முடக்கி கிடந்த தமிழினம் முழு மூச்சோடு நிமிர்ந்து நிற்கிறது இனிமேலும் எவனும் கிட்ட நெருங்கி எம்மை அடக்க நினைப்பான என்ன?? 18. முள்ளிவாய்க்கால் ஆன்மாவொன்று .. சின்னத் தூக்கம் கொண்டோம் அன்றி எங்கள் தேகம் வாடியது இல்லை உங்கள் அண்ணன் தங்கை பிள்ளைகள் யாரும் கண்கள் முடியது இல்லை உள்ளே உயிராய் உள்ளோம் உள்ளோம் உங்கள் நினைவுடனே.. இங்கு வெல்லும்வரையும் வீசும் காற்றை உள்ளோம் உங்கள் அருகினிலே.. ஏறக் குறைய முப்பத்தி எண்ணாயிரம் மாவீரர்களையும், இரண்டு லட்சம் மக்களையும் எம் மண் சுமந்து கொண்டுதான் எமது விடுதலைப் போர் பெரும் விருட்சமாக விழுது விட்டு இன்று உலகம் முழுவதும் விரிந்து நிற்கிறது. உலகில் எந்த ஒரு விடுதலை இயக்கமும் காணத இழப்பை சந்திச்சு மீண்டும் நிமிந்து நிற்கிறது இதற்கு காரணம் முழுமையான அற்ப்பணிப்பும், கடின உழைப்பும்தான். ஆகவே உறவுகளே, உங்களுடைய தலைவர் உங்களுடதான் இருக்கிறார் அவரை முழுமையாக நம்புங்கள் அவர் நிச்சயம் எங்கள் எல்லாருடைய கனவு மெய்ப்பட வைப்பார். அந்தக் காலம் மிகவும் எமக்கு அருகாமையிலே உள்ளது. அது எங்களுடைய தலைவர் காலத்தில் அது அமையும். தமிழீழம் என்பது வெறும் எங்களுடைய உயிர் அல்ல, ஒவ்வொரு தமிழர்களதும் உயிராயுதம் நிச்சயம் எந்த ஒரு ஆக்கிரமிப்பு சக்திகளுக்கும் உயிராயுதம் அடிபணியாது அதுவைரை மாவீரர் வழி தொடர்ந்து எம் பணி முடிப்போம் என் உறுதி எடுத்துக் கொண்டு அடுத்த எமது விடுதலைப் போருக்கு எம்மை தயார் படுத்துத்திக் கொள்வோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக