வெள்ளி, 17 டிசம்பர், 2010

யாழ். பல்கலைக்கழக துணைவேந்தராக பேராசிரியர் கூல்!

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் புதிய உபவேந்தராக பேராசிரியர் ரட்ணஜீவன் கூல் நியமிக்கப்பட்டுள்ளார்.முன்னர் துணைவேந்தராக இருந்த சண்முகலிங்கத்தின் பதவிக்காலம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து பேராசிரியர் கூலை அந்த பதவிக்கு நியமிக்க பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.ஜனாதிபதியினால் கடந்த புதன்கிழமை பரிந்துரை செய்யப்பட்டதைத் தொடர்ந்து பதவிக்கான அறிவித்தல் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.இந்தநிலையில்  தமது நியமனக் கடிதத்தைப் பெற்றுக்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது ஏற்கனவே ஒருமுறை முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா அவர்களால் ரட்ணஜீவன் கூல் யாழ் பல்கலைகழக துணைவேந்தராக நியமிக்கப்பட்ட போதும், அப்போதைய மணவர்களின் எதிர்ப்பு காரணமாக அவர் அப்பதவியை ஏற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக