முள்ளிவாய்க்கால் இன அழிப்பின் இரண்டாம் ஆண்டு நினைவும், ஆத்ம சாந்தி பூஜையும் 20.05.2011 அன்று Leicester முருகன் கோவிலில் மிகவும் அமைதியாகவும், உணர்வுபூர்வமாகவும் நடைபெற்றது. நிறைவில் நாடுகடந்த தமிழீழ அரசின் வெளிவிவகாரங்களுக்கான அமைச்சர் திரு.தயாபரன் ( ஜனகன் மாஸ்டர் ) அவர்கள் தேசத்தின் பாலம் ஈழ மண்ணில் ஆற்றும் பணிகள் பற்றி விளக்கமளித்தார். அதனை தொடர்ந்து, முள்ளிவாய்க்கால் வரை நின்று களமாடிய போராளி ஒருவர், அங்கு மக்கள் பட்ட துயரங்களை அங்கு வந்திருந்த மக்களுடன் பகிர்ந்து கொண்டார். இறுதியாக அன்னதானம் வழங்கப்பட்டது.
இப் பூசையினை தேசத்தின் பாலம் அமைப்பினரும், முன்னாள் போராளிகளும் சேர்ந்து நடத்தி வைத்தனர்.
இப் பூசையினை தேசத்தின் பாலம் அமைப்பினரும், முன்னாள் போராளிகளும் சேர்ந்து நடத்தி வைத்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக