புதன், 24 மார்ச், 2010

தலைவன் வழிகாட்டுதலில் தொடர்ந்து போராட வேண்டியதன் அவசியம்.

ஈழ விடுதலைப்பயனத்தில் மீண்டும் உறுதியான, தெளிவான முடிவினை அறுதியிட்டு பதிவுசெய்து அந்நிய ஆக்கிரமிப்பிற்குள் சிறைவைக்கப் பட்டிருந்தாலும் தலைவன் வழிநிற்கும் புலிகள் சேனை என தலைநிமிர்ந்து நிற்கின்றனர் எம்தேச மக்கள். சிறிலங்காவின் ஆறாவது சனாதிபதியை தெரிவுசெய்வதற்கான தேர்தல்களமானது எமக்கான உண்மையான உறுதியான ஒரே தலைமை தமிழீழ விடுதலைப்புலிகள்தான் என்பதனை ஏற்கமறுத்தவர்களையும் மறுப்பவர்களையும் தலைகுனியவைத்து தமிழ்தேசம் தலைநிமிர வைத்துள்ளது. இவ்வாறான தீர்ப்பினை நிச்சயமாக எதிர்வரும் பொதுத் தேர்தலிலும் எமது மக்கள் பதிவு செய்து தேசத்தை விலைபேச முற்பட்டவர்களை நிராகரிப்பது உறுதி. இந்த நூற்றாண்டு கண்டிராத வரலாற்றுத் துயரத்தை முள்ளிவாய்காலில் அரங்கேற்றி எமது சொந்தங்களை வேட்டையாடி எமது தேசத்தை சுடுகாடாக்கி எஞ்சியவர்களை ஒருவேளை சோற்றிற்கும் ஒருவாய் தண்ணீருக்கும் கையேந்துபவர்களாக முற்கம்பி வதைமுகாமில் சிறைவைத்தும் தமிழீழ மீட்புப் பணியில் தலைவன் வழிநின்று சமராடிய வீரப் புதல்வர்களை கொடும்சிறை வைத்து வரும் வேளை அதற்கு காரணகர்த்தா யார் என்பதனை மக்கள் தீர்ப்பின் மூலம் உறுதிசெய்து கொள்வதற்காக கடந்த சனவரி 26ம் நாள் சிறிலங்காவே அமர்களப்பட்டு ஓய்ந்து போய் தற்போது தலைகீழ் மாற்றம் கண்டுள்ளது. தமிழின அழிப்பினையும் தமிழீழ விடுதலைப்புலிகளது பலத்தினை முற்றுமுழுதாக அழித்தொழித்து விட்டதனையும் மூலதனமாகக் கொண்டு மகிந்த ராசபக்ச இக்களத்தில் முதன்மையானவராக குதித்த வேளை யாவற்றிலும் உடனிருந்த முன்னால் இராணுவத்தளபதியும் கட்டளை அதிகாரியுமான சரத்பொன்சேகா எதிர்பாராத வகையில் எதிர்க்களம் புகுந்து சிங்களம் இரண்டுபட்டு நிற்பதை உறுதிப்படுத்தியிருந்தார். இவ்வேளை அடையாளம் இழந்துபோயிருந்தவர்களை ஒருங்கினைத்து தமிழர் தரப்பின் அரசியல் தலைமையாக்கி அவர்களுக்கு தேர்தல் மூலம் அங்கீகாரம் கிடைக்க தமிழீழ தேசியத் தலைமை வாய்ப்பளித்திருந்தமையால் இம்முறை அதிக முக்கியத்துவம் வாய்ந்தவர்களாக விளங்கிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தடுமாற்றமான போக்கினை வெளிப்படுத்தி மீண்டு;ம் ஒருதடவை தமிழர்களால் புறக்கணிக்கப்பட்டுள்ளனர். கடந்த 2005இல் சனாதிபதித் தேர்தலை புறக்கணிப்பது என தமிழீழ தேசியத்தலைமை எடுத்த முடிவு தவறானது எனவும் அதனாலேயே இன்றைய அழிவு, அவல நிலை ஏற்பட்டது என்றும் அவற்றை நிவர்த்தி செய்யப்போவதாகவும் தனியாவர்த்தனம் செய்ய முற்பட்ட சம்பந்தனின் முகத்தில் கரியை அள்ளிப் பூசியுள்ளனர் தமிழ் மக்கள். எதிர்பார்ப்புக்கள், நம்பிக்கைகள், எதிர்வு கூறல்களைக்கடந்து சிறிலங்காவின் ஆறாவது சனாதிபதியாக சிங்கள மக்கள் தமக்கான தலைவராக மகிந்த ராசபக்சவினை தேர்ந்தெருத்திருந்தனர். மகிந்தவின் இந்த வெற்றிக்கு பல காரணங்கள் இருந்தாலும் சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுத்த நிலைப்பாடும் ஒரு காரணமாக அமைந்துவிட்டது. கடந்த 2005 இல் நடைபெற்ற சனாதிபதித் தேர்தலில் 48இலட்சத்து87ஆயிரத்து162 வாக்குகளையும், போர் வெற்றியையும் தமிழின அழிப்பினையும் முக்கிய சாதனையாக காண்பித்து சமகாலத்தில் நடாத்தப்பட்ட மாகாணசபைத் தேர்தல்களில் சுமார் 50இலட்சம் வாக்குகளையும் பெற்றிருந்த மகிந்த ராசபக்ச இம்முறை 60இலட்சத்து15ஆயிரத்து934 வாக்குள் பெற்றதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் நிலைப்பாடே காரணமாக அமைந்திருந்தது என்றால் மிகையாகாது. சிங்கள மக்கள் தெளிவானவர்கள். தமக்கான தலைவனாக மகிந்த ராசபக்சவை தேர்ந்தெடுத்திருந்தமையால் பொன்சேகா ஒன்றும் குறைந்தவர் அல்ல. தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு பொன்சேகாவை ஆதரிப்பது என்று முடிவானபின்னர் அதுவரைகாலமும் சிங்கள மக்களது கதாநாயகனாக விளங்கிய பொன்சேகா துரோகியாக மாறிவிட்டார். இதுவே மகிந்தவை வெற்றிபெற இலகுவாக்கியது. பிரதான இனவாதக் கட்சிகள் புடை சூழ போட்டிக்களத்தில் எதிர்நின்ற பொன்சேகாவை கண்டு ஒருகணம் மகிந்த ராசபக்சவே மிரண்டுதான் போயிருந்தமை தேர்தல் முடிவு வெளியாகும் நாளுக்கு முன்புவரை அவரது தோல்விப்பயம் கவ்விய முகமும் பதட்டமான நடவடிக்கையுமே வெளிப்படுத்தியிருந்தது. 2002ல் போர்நிறுத்த ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டதை காரணம்காட்டி நாட்டை இரண்டாகப்பிரித்து புலிகளிடம் தாரைவார்த்துவிட்டதாக ரணிலை துரோகியாகக் காட்டி 2005ல் வெற்றி பெற்ற மகிந்தவிற்கு இம்முறை கூட்டமைப்பினருடனான மறைமுக உடன்படிக்கை பேருதவி புரிந்துள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் சேர்ந்து நாட்டை காட்டிக்கொடுத்துவிட்டதாக மேற்கொண்ட பரப்புரை காரணமாக சிங்கள மக்கள் சரத்பொன்சேகாவை நிராகரித்து மகிந்த ராசபக்சவே தமக்கான சரியான தலைவனாக தெரிவுசெய்துள்ளனர். சுருங்கக் கூறின் சிங்களத்தின் கதாநாயகனை துரோகியாக மாற்றி தோல்வியடையச் செய்த பெருமை சம்பந்தன் தலைமையிலான கூட்டமைப்பையே சாரும். இந்தப் பெருமைக்குரிய சம்மந்தனின் செயற்பாட்டின் எதிர்வினையாக தமிழ்மக்கள் எதிர்கொள்ளப் பேகும் நிலை மிகவும் ஆபத்தானதாகும். எதிரியின் கொடிய வதைகளிற்குள்ளாகிய நிலையிலும் எதிரியின் முற்றுகைக்குள் இருக்கின்ற போதும் தமிழ்த் தேசியத்தின்பால் தாம் வைத்திருக்கும் உறுதியை வாக்களிக்கச் செல்லாது வெளிப்படுத்தியிருக்கும் எமது மக்கள் தற்போதும் எதிர் நோக்கிவரும் கடத்தல் கைதுகள் மூலம் காணாமல்போகும் சம்பவங்களும் மர்மக் கொலைகளுக்கும் எதிர்வரும் நாடகளில் எதிர்கொள்ளப்போகும் யாவற்றிற்கும் சம்மந்தனே பொறுப்பாளியாவார். பொதுவான ஒரு களத்தில் மக்களை வழிநடத்தாது தோல்வியைத் தழுவி தன்னையே காத்துக்கொள்ள முடியாது தற்போது சிறைக்கம்பிகளை எண்ணிக்கொண்டு இருக்கும் சரத்பொன்சேகாவினை ஆதரிப்பது என்ற நிலைப்பாட்டினை எடுத்து குறிப்பிட்ட மக்களையும் அதற்கேற்றவாறு வழிநடத்தி மகிந்தவின் கொலைவெறிப் பார்வைக்கு உள்ளாக்கியுள்னதன் விளைவுகள் என்னவாக இருக்குமோ என்பதை சிந்திக்கும் போது கலக்கமேற்படுகின்றது. முட்கம்பி வதைமுகாமில் சிறைவைக்கப்பட்டுள்ள ஒரு இலட்சத்து ஐம்பதாயிரத்திற்கு மேற்பட்ட மக்களும் சிறப்பு தடுப்பு முகாம்கள் என்ற போர்வையில் தனித்தனியாகவும் குழுவாகவும் அடைத்து வைக்கப்பட்டு எதிர்காலமே சூன்யமாக்கப்பட்டுள்ள பதின் மூவாயிரத்திற்கு மேற்பட்ட போராளிகளதும் நிலை இனி என்னவாகுமோ என்பதற்கு சம்மந்தனால் பதில் கூறமுடியுமா……? அல்லது அவர்களை விடுவிக்கத்தான் முடியுமா…..? சிறிலங்காவின் ஆட்சிபீடத்திற்கு நடாத்தப்படும் தேர்தல்கள் மூலம் தமிழ்மக்கள் எதனையும் பெற்றுவிட முடியாது அவ்வாறு தெரிவு செய்யப்படுபவர்களும் தமிழ்மக்களிற்கு உரித்தான சுயநிர்ணய உரிமைகளை வழங்கி தனித்துவமாக வாழ வழியேற்படுத்தப் போவதில்லை என்ற நிலையை மெய்ப்பிப்பது போன்றே கடந்த 33வருடங்களாக சிறிலங்காவின் தேர்தல்களை புறக்கணித்து வந்துள்ளனர் எமது மக்கள். இதனை முற்றிலும் உணர்ந்து கொண்டதனால்தான் கடந்தமுறை 2005இல் சனாதிபதித் தேர்தலை புறக்கணிப்பது என்ற முடிவை தமிழீழ தேசியத் தலைமை எடுத்திருந்த தமிழர்களதும் சிங்களவர்களதும் எண்ணங்கள், செயற்பாடுகள் முரண்நிலை கொண்டவை என்பதனையும் அவற்றிற்கான தலைமையும் வேறு வேறுவானவை என்பதனையும் அனைத்துலகத்திற்கு புரியவைப்பதற்கு முற்பட்டிருந்தனர். இம்முடிவுதான் தவறானது எனக்கூறி சரத்பொன்சேகா என்ற சிங்களனை ஆதரிப்பதே சரியானது என மக்களை தவறாக வழிநடாத்த முற்பட்ட சம்மந்தனுக்கு சரியான பாடம் புகட்டியுள்ளனர் தமிழத் தேசியத்தில் வழிநடாத்தப்பட்டுள்ள எம் மக்கள். முள்ளிவாய்காலின் பின்னரான காலப்பகுதியில் ஏற்பட்ட துன்ப துயரங்கள் களையப்பட்டு தத்தமது சொந்த இடங்களில் யாருடைய தலையீடும் இல்லாது சுதந்திரமான நடமாட்ட உரிமையுடன் வாழக்கூடிவாறான சூழல், முட்கம்பி வதைமுகாம்களில் அடைபட்டுள்ள இலட்சத்திற்கு மேற்பட்ட மக்களிற்கு கிடைக்காது விடினும் ஓரளவிற்கேனும் தமது வாழ்வினை மீள அமைத்துக் கொள்வதற்கான வாய்ப்பாக ஒரு ஆட்சிமாற்றத்தினை எதிர்பார்த்திருந்தது என்னவோ உண்மதான். ஆனால் அதற்குமப்பால் தமிழர்கள் ஒன்றுபட்டு ஓரணியில் உள்ளோம் என்பதனை சனநாயக முறைப்படி வெளிப்படுத்த கிடைத்த ஓர் அரிய சந்தர்ப்பத்தினை தவறவிட்டு விட்டோமே என்ற வருத்தம்தான் மேலிடுகிறது. தமிழர் பகுதியல் மிகவும் குறைந்தளவே வாக்குப் பதிவு நடைபெற்றிருந்த போதும் அவற்றில் 70சதவிகிதமான வாக்குகள் சரத்பொன்சேகாவிற்கு கிடைத்துள்ளமையானது தமிழர்கள் பொன்சேகாவை மன்னித்து ஏற்றுக்கொள்ள தயாராக உள்ளனர் என அர்த்தப்படுத்திவிட முடியாது. பிரதான எதிரி மகிந்த ராசபக்சவினை தோற்கடிக்க வேண்டும் என்ற எண்ணமும் தமிழின அழிப்பினை மேற்கொண்டதற்கு எக்காலத்திலும் மன்னிப்பே கிடையாது என்பதனை வெளிப்படுத்துவதற்கான சந்தர்ப்பமாக இந்த சனாதிபதித் தேர்தல்களம் கிடைத்த போது அதனை சரியாக பயண்படுத்திக் கொண்டிருந்தனர் வாக்களித்திருந்த தமிழ்மக்கள். எமக்கான தலைமை வேறு இந்த தேர்தல் சிங்களத்தின் தலைமையினை தேர்வுசெய்யும் களம் என்பதனை பட்டவர்த்தனமாக வெளிப்படுத்தும் முகமாக பெரும்பாலான தமிழ்மக்கள் தேர்தலை புறக்கணித்தும், கிடைத்த சந்தர்ப்பத்தினை பயன்படுத்தி கொலைவெறியன் மகிந்த ராசபக்சவிற்கு எதிரான பழிவாங்கும் உணர்வு அணையாத் தீபமாக எம்மனங்களில் கணன்று கொண்டிருக்கின்றது என்பதனை வெளிப்படுத்தும் விதமாக வாக்களித்திவர்களில் பெரும்பாலானவர்கள் சரத்பொன்சேகாவை ஆதரித்து வாக்களித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. மக்களது இந்த மன உணர்வினை சரியான முறையில் இனம் கண்டு தமிழர் தரப்பு பொதுவேட்பாளராக சிவாசிலிங்கத்தை முன்னிறுத்தி இந்தத் தேர்தல்களத்தை எதிர் கொண்டிருந்தால் இன்னும் அதிகமானவர்கள் முன்வந்து வாக்களித்து எமது மக்களின் மனவெளிப்பாட்டினை சனநாயக முறைப்படி பதிவுசெய்ய வாய்ப்பு ஏற்பட்டிருக்கும். அவ்வாறு நடைபெற்றிருந்தால் தமிழ்மக்கள் இன்று எதிர் நோக்கியருக்கும் அச்சுறுத்தல் நிலையினை தவிர்த்திருக்கராம் அல்லவா….? இந்த அரியவாய்பினை தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு சரியானமுறையில் கையாளாது விட்டதனால் மகிந்த ராசபக்சவின் கொலைவெறிப் பார்வை இன்னும் வீரியம் பெற்று எமது மக்களை நோக்கித் திரும்பியுள்ளது. அது எப்போது எவ்வாறு உருவம்பெற்று மீண்டும் தமிழர்களை தாக்கும் என்ற அச்சத்துடன் வாழவேண்டிய நிலைக்கு சம்மந்தன் தலைமையிலான கூட்டமைப்பின் தவறான நிலைப்பாடே காரணமாகும். சனநாயக முறைப்படி தேர்தல்கள்த்தில் குதித்த எதிரணி வேட்பாளரையும் அவர்சார்ந்தவர்களையும் பரம எதிரியாகக் கருதி உயிரச்சத்தை விளைவிதிருக்கும் போதும் எதிர் வேட்பாளரை கைது செய்து சகல வழிகளிலும் முடக்கப்பட்டு கொடுஞ்சிறை வைத்திருக்கும் போது தமிழர்கள் எம்மாத்திரம். சிங்களத்தின் கதாநாயகனாக விளங்கிய சரத்பொன்சேகாவுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட சிறுபான்மை கட்சிகள் அணிசேர்ந்து கொண்டபின்னர் சிங்களவர்களது தனிப்பெரும் தலைவன் மகிந்தராசபக்ச தான் என்ற நிலை ஏற்பட்டுள்ளமை மறுக்கமுடியாத உண்மையாகும். ஆட்சி அதிகார வெறியில் ஊறிப்போயுள்ள மகிந்த ராசபக்ச சகோதரர்களது கையில் சிறிலங்காவின் அதியுச்ச அதிகார பீடங்கள் சிக்கிக் கொண்டிருந்தமையும் இந்த அசாத்தியமான வெற்றிக்கு வாய்ப்பாக அமைந்துள்ளது. எந்தெந்த வகைகளில் சட்டமீறல்களை, அதிகார முறைகேடுகளை, வன்முறைகளை கட்டவிழ்த்து தமக்கு சாதகமான முடிவினை நோக்கி மக்களது தீர்ப்பினை வளைத்துக் கொள்ள முடியுமோ அந்தந்த வழிகளில் எல்லாம் முயற்சி செய்தே இந்த வெற்றியை தமதாக்கிக் கொண்டுள்ளனர் ராசபக்ச சகோதரர்கள். கடந்த இருபது ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மிகவும் மோசமன வன்முறை வெறியாட்டங்களிற்கு இடையே இம்முறை சனாதிபதித் தேர்தல் நடைபெற்றுள்ளது. இம்முறை சனாதிபதித் தேர்தலை கண்காணித்த “ட்ரன்ஸ் பரன்ஸி இன்டர் நேசனல்” என்ற தன்னார்வ கண்காணிப்பு அமைப்பின் அதிகாரியான வெலியமூன் இது தொடர்பாக சிங்களப்பத்திரிகையாளர்களிடம் கூறியபோது: ராசபக்சே தேர்தல் நடைமுறைகள் ஆரம்பித்ததில் இருந்து வாக்கு எண்ணிக்கை நடக்கும்வரை அரச இயந்திரத்தை தனது விருப்பப்படி பயன்படுத்தியதாக 427 புகார்கள் எங்களிற்கு வந்துள்ளன, அவரது ஆதரவாளர்கள் தேர்தல்பணியாற்றுவதற்காகவும் வாக்காளர்களை கட்டாயப்படுத்தி வாக்குச்சாவடிகளுக்கு கூட்டிவருவதற்காகாவும் 1024 சிறிலங்கா அரசுப் பேரூந்துகளை பயன்படுத்தியிருக்கின்றார்கள். அதிபர் மாளிகை உள்பட அனைத்து அரச அலுவலகங்களும் ராசபச்சவிற்காக தேர்தல் வேலை பார்த்துள்ளன. இம்முறை நடந்து முடிந்த தேர்தல், வரலாற்றில் மிக மோசமாக நடைபெற்ற தேர்தலாக பதிவு செய்யப்படும் என வெலியமூன் தெரிவித்திருந்தார். இவைதவிர தேர்தலிற்கு முன்கூட்டியே வெற்றிலை சின்னத்திற்கு புள்ளடி போடப்பட்ட நிலையில் உள்ள வாக்குச் சீட்டுக்கள் நிரப்பிய பெட்டிகளை ஏற்றிக் கொண்டு யாழ்ப்பாணம் சென்றது சிறிலங்கா இராணுவவாகனங்கள். எதிர்பாராத விதமான விபத்து சம்பவத்தினை அடுத்து இந்த திருட்டுத்தனம் அம்பலமாகியிருந்தது. தமிழர் பகுதியிலையே இவ்வாறு சித்து வேலைகளை காட்டமுற்பட்ட ராசபக்சே கும்பலுக்கு சிங்களப்பகுதியில் மேற்கொள்வது என்பது கடினமானதாக இருந்திருக்காது, இருக்காது. தீவிர இனவாதவெறியில் ஊறித்திழைத்திருக்கும் சிங்கள மக்களின் வாக்குகள் இருவருக்கும் இடையே பிரிக்கப்பட தமிழர்களது வாக்கே வெற்றியைத் தீர்மாணிக்கும் என்ற நிலை நடந்து முடிந்த சனாதிபதித் தேர்தல் களத்தில் ஏற்பட்டிருந்தது யாவரும் அறிந்ததே. இன்று பலர் இந்த கூற்றை மறுதலிக்க முற்பட்டு தமது புலமையினை காட்டமுற்பட்டுள்ளமை வேடிக்கையாக உள்ளது. மேற் கூறப்பட்ட நிலையே உண்மையாகும். ஏறத்தாள 35இலட்சத்திற்கு மேற்பட்டதாக இருந்த சிறுபான்மை இனமக்களான தமிழர், இசுலாமியர்களது வாக்குள் முழுவதுமாக பதிவாகியிருக்குமாயின் நிலைமையே தலைகீழாக மாறியிருக்கும் என்பதே உண்மையாகும். இதனை உணர்ந்து கொண்டதனால்தான் தமிழர் பகுதிகளில் அச்ச கூழ்நிலையினை தோற்றுவித்து முழுமையாக வாக்குப்பதிவு நடைபெறாது பார்த்துக் கொண்டதுடன் தமது வெற்றியையும் உறுதி செய்து கொண்டுள்ளனர் கொலைவெறி பிடித்த மகிந்த சகோதரர்கள். இதற்கு எலும்பு பொறுக்கிகளாக அவர்களது காலை சுற்றிவரும் துரோகிகள் குழுக்களும் உடந்தையாக இருந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இதனை உறுதிப்படுத்துவது போலவே தமிழர் பகுதி வாக்குப்பதிவு முடிவுகள் அமைந்துள்ளன. யாழ்ப்பாணத்தில் வாக்களிப்பு தினத்தன்று அதிகாலைவேளை 13இடங்களில் குண்டுவெடிப்பு சம்பவங்கள் இடம்பெற்றதும் பேரூந்து சேவைகள் முற்றாக நிறுத்தப்பட்டு ஒருவித அச்சுறுத்தலான சூழ்நிலை ஏற்படுத்தப்பட்டிருந்த போதும் அளிக்கப்பட்ட வாக்குகளில் ராசபக்சவினை விட கிட்டத்தட்ட மூன்று மடங்கு வாக்குகள்(ஒரு இலட்சத்து ஏழாயிரம் வாக்குகள்) பொன்சேகாவிற்கு ஆதரவாக பதிவு செய்யப்பட்டிருந்தது. கள்ளவாக்கு போடுவதற்காக இருபதிற்கு மேற்பட்ட சிங்களக் காடையர்கள் கிளிநொச்சியில் கொண்டுவந்து இறக்கப்பட்டிருந்தமை பண்டாரிக்குளம் கிராமத்தில் பத்தாயிரத்திற்கு மேற்பட்ட மக்களை வாக்களிக்கச் செல்லவிடாது சிறிலங்கா இராணுவத்தினரால் தடுத்து நிறுத்தப்பட்டிருந்தமை ஒட்டுக் குழுக்களின் அடாவடி என வன்னி மாவட்டத்தில் சனநாயகம் காற்றில் பறக்கவிடப்பட்ட நிலையிலும் கொலைபாதகன் மகிந்தவை விட(24ஆயிரம்) சுமார் மூன்று மடங்கு (61ஆயிரம்) வாக்குகள் சரத்பொன்சேகாவிற்கு ஆதரவாக பதிவு செய்யப்பட்டிருந்தது. இதேபோன்று சரத்பொன்சேகாவை ஆதரித்த முசுலீம் காங்கிரசு செல்வாக்கு மிக்க பகுதிகளில் அதிகாலைமுதல் இராணுவ கவசவாகனங்களையும் இராணுவத்தினரையும் நிறுத்தி போர்ச் சூழலை ஏற்படுத்தியிருந்த நிலையிலும் அளிக்கப்பட்ட வாக்குகளில் மூன்றில் இரண்டு மடங்கு வாக்குள் சரத்பொன்சேகாவிற்கு ஆதரவாக பதிவு வெய்யப்பட்டிருந்தது. மலையகப்பகுதி உள்ளிட்ட இதர தமிழர் பகுதிகளிலும் இதே நிலைதான் வெளிப்படுத்தப்பட்டிருந்தது. மொத்தமாக 35இலட்சம் வாக்குப்பலத்தினை கொண்டிருந்த சிறுபான்மை இன தமிழர், இசுலாமியர்களில் ஆறு இலட்சம் பேரே இம்முறை சனாதிபதித் தேர்தலில் வாக்க்ளித்திருந்தனர். அதிலும் 70சதவிகித வாக்குள் சரத்பொன்சேகாவிற்கு ஆதரவாகவே அளிக்கப்பட்டிருந்தது. சரத்பொன்சேகா பெரும்பான்மை வாக்குகள் பெற்ற ஆறு மாவட்டங்களில் தமிழர்கள் அதிகமாக வாழும் யாழ்ப்பாணம், வன்னி, திருகோணமலை, மட்டக்களப்பு உள்ளிட்ட தமிழர்களின் தாயக பூமியான வடகிழக்கு பகுதியில் உள்ள ஐந்து மாவட்டங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. சரத்பொன்சேகாவை தமிழர்கள் ஏற்றுக்கொண்டதனாலோ….. அதிகப்பிரசங்கி சம்பந்தன் தலைமையிலான கூட்டமைப்பினரின் வழிகாட்டுதலை ஏற்றுக் கொண்டதனாலோ தாயக மக்கள் இந்த முடிவை வெளிப்படுத்தவில்லை என்பதனையும் மாறாக தலைவணங்கா தேசமாக விளங்கிய வன்னியை சுடுகாடு ஆக்கி எமது இனத்தையே கொன்று குவித்த கொலைபாதகன் மகிந்தராசபக்சவையும் அவனது சகோதரர்களையும் பழிவாங்கவதற்காகவும் தமது எதிர்ப்புக்களை தெரிவிப்பதற்காகவுமே இந்த முடிவை வெளிப்படுத்தியுள்ளனர் என்பதனை இந்த அதிமேதாவிகள் புரிந்து கொள்ள வேண்டும். மேற் சொன்னவை வெறும் வாதத்திற்காக முன்வைக்கவில்லை. தேர்தல் வாக்களிப்பு சூன்யமாக்கப்பட்டால் உடனடியாக மறுதேர்தல் நடாத்தப்படும் என மிகக்கடுமையாக கருத்துத் தெரிவித்த தேர்தல் ஆணையாளர் தயானந்த திசநாயக்க தேர்தல் நிறைவடைந்த பின்னர் துண்டைக்காணோம் துணியைக் காணோம் என கதறித்துடித்து புலம்பியது மேற்சொன்னவற்றின் அடிப்படையிலே ஆகும். கடந்த சில தினங்களாக எனக்குத் தரப்பட்ட அழுத்துங்களும் நெருக்கடிகளும் மிரட்டல்களும் தாங்கமுடியாதவை எனது வரலாற்றில் இத்தகைய அழுத்தங்களை முன்னெப்போதும் நான் சந்திக்கவில்லை. நான் தேர்தல் ஆணையாளராக எட்டுவருடங்கள் கடமையாற்றியிருக்கின்றேன். இப்போது எனது பதவியில் இருந்து என்னை விடுவிக்குமாறு நான் வேண்டுகிறேன். வாக்குகள் எண்ணப்படும் வேளை பலர் மிரட்டப்பட்டனர். புத்தளம் அனுராதபுரம் மாத்தளை ஆகிய பகுதிகளில் தேர்தல் நடைமுறைகளை அமுல்படுத்த விடாமல் தேர்தல் பணியாளர்களும் அதிகாரிகளும் தடுக்கப்பட்டனர். இனியும் இந்தப்பதவியில் நீடிப்பது பொருத்தமாக இருக்காது என்றே கருதுகின்றேன். இனியும் என்னால் நெருக்கடிகளை சமாளிக்க முடியாது. இந்த அறிக்கைக்குபின்னர் எனக்கு என்ன நடக்கும் என்பது தெரியவில்லை. எவ்வளவு விரைவாக இந்தப் பொறுப்பில் இருந்து எ;னனை விடுவிக்க முடியுமோ அவ்வளவு விரைவாக விடுவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றேன். நடந்து முடிந்த சனாதிபதித் தேர்தல் எவ்வளவு மோசமான சூழலில் நடந்து முடிந்துள்ளது என்பதற்கு இதைவிட என்ன சாட்சியம் வேண்டும். இவ்வாறு கதறிய தேர்தல் ஆணையாளரிற்கு என்ன நிர்ப்பந்தம் ஏற்படுத்தப்பட்டதோ… அடுத்து நடைபெற இருக்கும் பொதுத் தேர்தல் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளார்…. எல்லாம் மகிந்தவின் திருவிளையாடல்களே….! உலகில் எங்குமே நடந்திராதவாறு எதிரணி வேட்பாளரையும் அவரது ஆதரவாளர்களையும் தேர்தல் தலைமை ஆணையாளரையும் உயிர்ப்பயம் கொள்ளச் செய்யும் அளவிற்கு மகிந்தவின் ஆட்சி சிறிலங்காவில் அமைந்துள்ளது என்றால் ஏற்கனவே கேட்பாரற்று தமது விருப்பப்படி கொன்று குவிக்கப்பட்டுவந்த தமிழர்களது நிலை என்னவாக இருக்கும் என்பதே உலகத்தமிழர்களது தீராத கவலையாகவும் முடிவு காணமுடியாத அச்சமாகவும் உள்ளது. சிங்களத்திற்கு சேகவம் செய்து தமது எஞ்சிய காலத்தை விரையமாக்கிவரும் டக்ளசுகளையும், கருணாக்களையும், பிள்ளையானகளையும் இந்தத் தேர்தல் மூலம் தூக்கியெறிந்துள்ள எங்கள் மக்கள் கூத்தடிக்கும் சம்பந்தன் தலைமையிலான கூட்டமைப்பினையும் நிராகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. அமைச்சுப்பதவிகளை வைத்துப் பல சலுகைகளை காண்பித்து தமது ராசவிசுவாசத்தை காட்டமுற்பட்ட டக்ளசை யாழ்மக்கள் எவ்வாறு நிராகரித்தார்களோ அவ்வாறே தலைவன் நம்பிய தளபதிகளில் ஒருவனாக இருந்து தமிழினத் துரோகியாக மாறி சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் உபதலைவர் என்ற பதவியை அலங்கரித்த கருணாவும் கழிப்பறை கட்டுவதற்கே பசில்ராசபக்சவிடம் அனுமதி வேண்டி தவம் இருக்கும் கிழக்குமாகாண முதலமைச்சர் பதவியை அலங்காரம் செய்யும் பிள்ளையானும் அரும்பணியாற்றிய நிலையிலும் கூட மட்டக்களப்பு மாவட்டத்தில் வாக்கிளத்தவர்களில் 69சதவிகிதமான மக்கள் இவர்களை பொருட்டாக கருதாது பொன்சேகாவிற்கு ஆதரவாக வாக்களித்து துரோகத்திற்குரிய தண்டனையினை வழங்கியிருந்தனர். முழுமையாக தமிழர்கள் வாழும் வடக்கு மாவட்டங்களில் 15-20 சதவிகித வாக்குகளே அளிக்கப்பட்டிருந்மை தமிழ்த் தேசியத்தின்பால் வழிநடாத்தப்பட்ட மக்கள் தெளிவாக உள்ளதை அறிந்து கொள்ள முடிகின்றது. கடந்த முறை 2005இல் சனாதிபதித் தேர்தலை புறக்கணிப்பது என தமிழீழ தேசியத்தலைவர் முடிவெடுத்தது தவறானது என வியாக்கியானம் கூறும் சம்பந்தன் இன்று மக்கள் தன்னிச்சையாக வழங்கியிருக்கும் தீர்ப்பிற்கு என்ன பதில் சொல்லப் போகின்றார். தமிழீழ தனியரசே தமிழர்களுக்கு தீர்வாக அமையும் என்பதில் எனக்கு உடன்பாடில்லை. அதனை நான் எப்போதும் ஆதரித்தது கிடையாது என இன்று பிதற்றும் சம்பந்தன் இதனை தேர்தலுக்கு முன்பு தெளிவாக கூறியிருந்தால் துரோகிகளுக்கு வழங்கியதைவிட மிக அருமையான தீர்ப்பினை பதிவு செய்திருப்பார்கள் தன்மானம் காக்கும் தலைவனின் வழிநிற்கும் தாயகமக்கள். புலத்திலே உருப்பெற்றுவரும் அரசியல் தலைமைத்துவத்தின் வளர்ச்சியே சம்மந்தனை இவ்வாறு தடுமாறவைக்கின்றதோ தெரியவில்ல. வட்டுக் கோட்டை தீர்மாணத்தை மீள்வலியுறுத்தி புலம்பெயர் தேசமெங்கும் நடாத்தப்பட்டுவரும் வாக்கெடுப்பில் வரலாறுகாணாத தீர்ப்பினை புலம்பெயர்வாழ் ஈழத்தமிழர்கள் பதிவு செய்து தமிழீழ தனியரசே எமது விருப்பு என உலக அரங்கில் பறைசாற்றி வரும் நிலையில் சம்பந்தன் எடுத்துவரும் முரண்நிலை பற்றி வேறுஎன்ன சொல்ல. நாடுகடந்த தமிழீழ அரசை நிறுவி அரசியில் ரீதியாக எமது தாயக மீட்பு போராட்டத்தை அனைத்துலக மன்றங்களில் முன்னெடுத்துச் செல்வதற்கு தயாராகிவரும் வேளை தாயகத்தில் இருக்கும் மக்களும் தாமும் போராட்ட உணர்வு குன்றிப்போகாது விடுதலைவேட்கையுடன இருப்ப்தனை கடந்த சனாதிபதித் தேர்தல் மூலம் வெளிப்படுத்தியிருப்பது எம்மை பன்மடங்கு பலம் மிக்கவர்களாக மாற்றியுள்ளதுடன் வீறுகொண்டு களமாடும் உற்சாகத்தினையும் தந்துள்ளது என்றால் மிகையாகாது. நாம் விரும்பியது போன்றே மேற்குலகமும் சிறிலங்காவில் ஆட்சிமாற்றத்தினை விரும்பியதை நடந்து முடிந்த நடைபெற்றுவரும் ராசதந்திர நகர்வுகள் உறுதிப்படுத்துகின்றன. நான்காம் கட்ட ஈழப்போரின் இறுதிநாட்களில் சிறிலங்கா இராணுவத்தால் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் மனித உரிமை மீறல்கள் போன்றவற்றை காரணம் காட்டி தைத்த ஆடைகளுக்கான ஏற்றுமதி வரிச்சலுகையினை இடைநிறுத்துவது என போக்கு காட்டிவந்த ஐரோப்பிய ஒன்றியம் தேர்தல் திகதி நெருங்கிவந்தபோது ஆடை ஏற்றுமதிக்கான வரிச்சலுகை நிறுத்தப்படுவதை உறுதி செய்து கொண்டது. அத்துடன் சிறிலங்கா சனாதிபதி மகிந்த ராசபக்ச மற்றும் அவரது சகோதரரும் பாதுகாப்புத்துறை செயலாளருமான கோத்தபாய ராசபக்ச மீதும் போர்க் குற்றவழக்கு போடுவதற்கான முன்நடவடிக்கைகளில் அமெரிக்க தனது பினாமிகளான உலகமன்றங்கள் சபைகளின் ஊடாக ஈடுபட்டது. அவ்வாறு ஒரு ஆட்சி மாற்றத்தினை விரும்பியதற்கு பிரதானமாக இரண்டு விடயங்கள் நோக்கப்படுகின்றது. அமெரிக்h மற்றும் மேற்குலக நாடுகளிற்கு எதிரான களத்தில் அணிவகுத்துள்ள சீனா, ரசியா, கியூபா, வெனிசுலா, ஈரான், சவுதிஅரேபியா, வியட்னாம் போன்ற பல்வேறு நாடுகளுடன் பகிரங்கமான உறவினை மகிந்தராசபக்ச ஏற்படுத்திவருவதுடன் பல்வேறு ஒப்பந்தங்களை ஏற்படுத்தி உறவினை வலுப்படுத்தி வருகின்றமை முதன்மைக் காரணமாகும். அடுத்து: தெற்காசியப் பிராந்தியத்தில் கால்பதித்து தமது மேலாதிக்கத்தினை நிலைநிறுத்துவதற்கான வாய்ப்பினை, தமிழீழ தேசியத்தலைவர் வே.பிரபாகரன் தலைமையிலான தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் ஆளுகையில் அமையும் தமிழீழ தனியரசு பாதிக்கும் எனக்கருதியதால் முள்ளிவாய்கால் வரை விரட்டி விரட்டி தமிழ் மக்களிற்கு அரணாக விளங்கிய எமது விடுதலைப் போராட்டமும் அதன் கட்டமைப்புகளும் சிதைக்கப்பட்டதற்கும் பல்லாயிரக்கணக்கிலான எமதருமை மக்கள் கொன்றொழிக்கப்பட்டதற்கும் ஒத்தாசை வழங்கியிருந்தன இந்த அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகள். ஆண்டாண்டுகளாக எமது மக்கள் ஆண்டு அனுபவித்து வந்த அரசு உலக, பிராந்திய வல்லரசுகளின் விருப்பத்திற்கேற்ப முள்ளிவாய்காலில் சிதைக்கப்பட்டு விட்டாலும் புலத்தில் இருக்கும் தலைமைகளும் மக்களும் புது வேகம் பெற்று புதிய பாதையில் பயணிக்க முற்பட்டுள்ளமை இந்த சக்திகளை மீண்டும் அச்சம் கொள்ளவைத்துள்ளது. அதனால்தான் தமது கைப்பாவையாக செயற்படும் பொன்சேகாவை சிறிலங்காவில் சனாதிபதி பதவியில் இருத்தி தமிழர்களிற்கு தற்காலிக தீர்வை திணித்து தனிநாடு, சுயநிர்ணய உரிமை, வலுவான தலைமை போன்றவற்றின் தேவையை இல்லாது செய்து தமது அச்சுறுத்தலை போக்கிக் கொள்வதற்கு இந்த அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகள் விரும்பியிருந்தன. அவ்வாறு நடைபெற்றிருந்தால் 2002இல் ஏற்படுத்தப்பட்ட போர்நிறுத்த ஒப்பந்த காலப்பகுதியில் எவ்வாறு எமது மக்கள் (வன்னி தவிர்ந்த பிரதேசங்களில் வாழ்ந்த பெரும்பாலான மக்கள்) தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் இருந்து அன்நியப்பட்டு கிடைத்த வாழ்க்கையினை ஏற்றுக் கொண்டு வாழப்பழகிக் கொண்டார்களே… அதுபோன்றே தற்போதும் வெளிப்படையாக சில பல வசதிவாய்ப்புக்களை வழங்கி எம்மமை மந்தைகளாக்கியிருப்பார்கள். தற்போது யாழ்ப்பாணத்தில் வீதிச் சோதனைச்சாவடிகள் பெரும்பாலும் அகற்றப்பட்டும் ஆள் அடையாள அட்டை கொண்டுதிரிய வேண்டியதில்லை நினைத்த உடன் சிறிலங்காவின் எப்பகுதிக்கும் சென்று திரும்பலாம் கொழும்பு கடைகளில் கிடைக்கும் அத்தனை பொருட்களும் யாழ்ப்பாணத்தில் ஒவ்வொரு ஊரிலும் தெருக்களிலும் நடைபாதை கடைகளில் கிடைக்கின்றது இவைதவிர இன்னபிற வசதிவாய்ப்புக்ள் எமது மக்களிற்கு கிட்டியுள்ளன. இவையே போதும் என்னற மனநிலைக்கு எமது மக்கள் இப்போதே வந்துவிட்டனர். புலத்திலிருந்து தொடர்பு கொள்ளும் உறவுகளுடனான உரையாடலில் இதனை வெளிப்படுத்தி வருகின்றனர். இப்போது இங்கு ஒரு பிரச்சினையும் இல்லை…. நீங்கள் ஏன் இன்னும் அங்கை இருந்து கஸ்ரப்படுகிறியள்…. ஊருக்கு வரலாம் தானே… இது போன்ற சில வினாக்களை எழுப்பி தமது நிலையினை வெளிப்படுத்திவருகின்றனர். இவை மேற்சொன்னவற்றை உறுதிப்படுத்துகின்றன. உண்மையில் சொல்லப்போனால் எமது மக்கள் பட்டுவந்த துன்பங்கள் ஏற்படுத்திய தாக்கம்தான் தற்போது ஓரளவு தற்காலிக சுகம் கிடைத்தவுடன் குதூகலிக்க வைக்கின்றது. வீட்டுப் படலையை தாண்டும் போது ஒன்றுக்கு பலமுறை அடையாள அட்டையினை எடுத்துவிட்டோமா என உறுதி செய்து கொண்டு புறப்படும் நிலையும் வீதிக்கு வீதி தெருவுக்கு தெரு இராணுவச் சோதனை சாவடிகளில் குந்தியிருந்து எமது அவசரம் தெரியாது சோதனை என்ற பெயரில் அவதிக்குள்ளாக்கும் சிங்கள இராணுவ வீரர்களது ஆக்கினையினை அனுபவித்தவர்களுக்குத் தெரியும் அதன் தாக்கம். அப்போது மீண்டும் ஒரு போராட்டம் தனி நாடு எனக்கூறிக்கொண்டு அடுத்த கட்டத்தை முன்னகர்த முற்பட்டால் எதுக்கு இவ்களுக்கு தேவையில்hத வேலை நாங்கள் சந்தோசமாக இருப்பது இவர்களுக்கு பிடிக்கவில்லை போல…. என்ற கேள்வியே வரவேற்கும். இதுவே இன்றைய நிலையும் கூட. எழுபதுகளின் ஆரம்பத்தில் அடக்கியாண்ட சிங்களனுக்கு எதிராக போரட களம்புகுந்து தமிழீழ விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் போதும் இவ்வாறான கேள்விகளே எமது வீரர்களை வரவேற்pருந்தமை குறிப்பிடத்தக்கது. அத்துடன் புலம்பெயர் தேசங்களில் முன்னெடுக்கப்பட்டு வரும் அரசியல் ரிதியிலான போராட்டங்களும் வரவேற்பில்லாது போய் முக்கியத்துவம் இல்லாது போயிருக்கும். இதனை கருத்தில் கொண்டுதான் சிறிலங்காவில் தமக்கு சார்பான ஒருதலைமையினை கொண்ட ஆட்சியாக சரத்பொன்சேகாவின் ஆட்சியை அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகள் விரும்பியிருந்தன. எப்படியோ அது சாத்தியமற்றதாய் போனபிற்பாடு முதற்காரணமான மகிந்தவின் எதிரணி உறவுகளால் சினமடைந்திருந்த அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகள் புலத்தில் உள்ள ஈழத்தமிழர்களது அரசியல் தலைமையினை ஏற்று அங்கீகரிப்பது போன்று ஒரு தோற்றப்பாட்டினை ஏற்படுத்தி மகிந்தவிற்கு தூக்கத்தை கலைத்துள்ளன. தமக்கு எதிரான அணியுடன் கரம்கோர்க்கும் மகிந்தவை தட்டிவைப்பதற்காகவே எம்மை நெருங்கி வந்து கொஞ்சிக்குலாவும் நாடுகள் எவ்விதத்திலும் எமக்கான நிரந்தர தீர்வினை பெற்றுத்தரப்போவதில்லை என்பதனை நாம் நினைவில் கொள்ள வேண்டும். சிங்களத்திற்கு எதிரான நிலைப்பாடு காரணமாக இருந்தாலும் இவ்வளவு நாட்களாக புலம் பெயர்வாழ் ஈழத்தமிழர்கள் மேற்கொண்ட போராட்டத்தின் காரணமாகவே இன்று அனைத்துலக நாடுகள் ஒப்பிற்காகவேனும் ஏற்றுக்கொள்ள முன்வந்தமைக்கான காரணமாக அமைந்துள்ளது. முன்னர் இந்த புலத்தில் இயங்கிவரும் அரசியல் தலைமைகளை செயலிழக்கச் செய்வதற்கு முன்வந்த இந்த நாடுகள் ஏன் இன்று அரவணைக்கின்றன….? இங்கும் இவர்களது சூழ்ச்சிகள் உள்ளது. முட்கம்பி வதைமுகாம்களில் சிங்களத்தால் கொடும் சிறைவைக்கப்பட்டிருக்கும் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட எமது மக்களை மீட்n;டடுத்து அவர்களது பூர்விக மண்ணில் மீண்டும் குடியேற்றுவதும், அனைத்துலக போர் நியமங்களிற்கு புறம்பாக தனிமைச்சிறையில் வைத்து எதிர்காலமே சூனியமாக்கப்பட்டுள்ள பதின்மூவாயிரத்திற்கு மேற்பட்ட போராளிகளை விடுவித்து மறுவாழ்வு ஏற்படுத்திக் கொடுப்பதும் உடனடித்தேவையாக இருக்கும் போது இந்த நாடுகள், மன்றங்கள், சபைகள், அமைப்புகள் எதுவுமே இதுதொடர்பாக சிங்களத்தை வலியுறுத்தவில்லையே… குறைந்தபட்சம் கோரிக்கையோ வேண்டுதலோ வைக்கவில்லையே. செய்யவேண்டியவற்றை தமது வல்லமையினை பயண்படுத்தி செய்யாது எமக்கான நியாயமான உரிமைகளை பெற்றுத்தராது நாடகமாடி எம்முடன் ஒட்டவரும் இவர்களை அவதானத்துடன் கையாளவேண்டியது அவசியமாகும். எமக்கான விடுதலையை யாரும் தங்கத் தாம்பாளத்தில் வைத்து துக்கித்தரப் போவதில்லை. அது எமது உரிமை. அதனை நாம் போராடித்தான் பெறமுடியும். அதுவே இன்றைய யதார்த்த நிலையும் கூட. அதனால்தான் எமது தேசியத்தலைவர் எவ்வித சமரசங்களிற்கு உட்படாது தனது பாதையில் உறுதியுடன் சுதந்திர சோசலிச தமிழீழம் என்ற இலக்கு நோக்கி போராடிக் கொண்டிருக்கின்றார். முள்ளிவாய்க்காலில் முழுவதுமாக முடிந்துவிட்து என்றநிலையில் கூட சில வல்லாதிக்க நாடுகள் தேசியத்தலைவரிடம் சமரசங்கள் பேசியிருந்த போதும் அவற்றை எமது தேசமக்களின் விடுதலையினை முதன்மைப்படுத்தி புறக்கிணத்திருந்ததுடன் பாதுகாப்பான இடத்திற்கு முக்கிய தளபதிகளுடன் நகர்ந்து சென்று தமது இருப்பினை உறுதிப்படுத்திக்கொண்டுள்ளார். இவ்வாறு பாதுகாப்பான இடத்தில் தமது இருப்பினை வெளிப்படுத்தாது உலக பிராந்திய வல்லரசுகளுடன் மௌணப் போர் புரிந்துவரும் எமது தேசியத் தலைவர் புலம்பெயர்ந்திருக்கும் தமிழர்களாகிய எம்மிடம் எதிர்பார்ப்பது தொடர்ச்சியான பங்களிப்பினையே. “இந்த வரலாற்றுச் சூழமைவில், தமிழர் உலகில் எந்த மூலையில் வாழ்ந்தாலும், எந்த இடத்தில் வளர்ந்தாலும் எமது தேசவிடுதலைக்கு உறுதியாகக் குரல் எழுப்பி, எமது சுதந்திர இயக்கத்தின் கரங்களை பலப்படுத்துமாறு அன்போடு வேண்டுகிறேன். அத்துடன் தங்களது தாராள உதவிகளை வழங்கித் தொடர்ந்தும் பங்களிக்குமாறும் உரிமையோடு கேட்டுக் கொள்கின்றேன்…..” இவ்வாறு கடந்த 2008 மாவீரர் நாள் உரையில் உலகத்தமிழர்களை நோக்கி வேண்டுகோள் விட்டிருந்தார் தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள். எனவே அவ்வளியில் தொடர்ந்து போராடுவதே எமது கடரைமயாகும். சத்திய இலட்சியத் தீயில் தம்மையே அழித்துச் சரித்திரமாகிவிட்ட எமது மாவீரர்கள் வழியில் சென்று நாம் எமது இலட்சியத்தினை அடைவோமென தாயக மீட்புப் போரில் களப்பலியாகிய முப்பதாயிரத்திற்கு மேற்பட்ட மாவீரர்களதும் அந்த போரில் தோளோடு தோள்நின்று சாவடைந்த இரண்டு இலட்சத்திற்கு மேற்பட்ட மக்களதும் கல்லறைகள் மீது கரம்பதித்து உறுதிஎடுத்துக்கொண்டு தற்போது ஏற்பட்டுள்ள அனைத்துலக சூழ்சிகள், தடைகள், நெருக்கடிகள் போன்றவற்றை தகர்த்தெறிந்து தலைவன் வழிகாட்டுதலில் தொடர்ந்து போராடுவோம். தமிழீழம் காண்போம். “தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக