புதன், 24 மார்ச், 2010

திபெத்தில் அடுத்தடுத்து நிலநடுக்கம்

திபெத்தில் இன்று காலை அடுத்தடுத்து இரண்டு முறை ஏற்பட்ட மிதமான நிலநடுக்கம் காரணமாக, மக்கள் பீதியடைந்து தங்கள் வீடுகளைவிட்டு வெளியே ஓடிவந்தனர்.திபெத்தின் வடக்குப் பகுதியில் உள்ள நயின்ராங் என்ற இடத்தில் இன்று காலை 10.06 மணியளவில் அடுத்தடுத்து இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டது. முதல் நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.7 ஆக பதிவான நிலையில், இரண்டாவது நிலநடுக்கம் 5.5 ஆக பதிவானது. அடுத்தடுத்து ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தினால் மக்கள் பீதியடைந்து தங்களது வீடுகளைவிட்டு வெளியே ஓடிவந்தனர். அதே சமயம் இந்த நிலநடுக்கத்தினால் உயிர்களுக்கோ அல்லது உடமைகளுக்கு சேதம் ஏதும் ஏற்பட்டதாக தகவல் இல்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக