சூரிய ஒளி சக்தியில் இயங்கும், மொபைல் போன் ஒன்றை இந்தியாவில் " வோடபோன் " நிறுவனம், விற்பனைக்குக் கொண்டு வருகிறது. VF 247 என அழைக்கப்படும் இந்த போன், கிராமங்களில் வாழும் மக்களுக்கு, எப்போதாவது ஒருமுறை மின்சாரம் பெறும் கிராமங்களுக்கு ஒரு பெரிய வரப்பிரசாதமாக இருக்கும். இந்த போனை சார்ஜ் செய்வதற்கு மின் இணைப்பே தேவையில்லை. ஏற்கனவே, ஓர் ஆண்டுக்கு முன் "சாம்சங் "நிறுவனம், இதே போன்றதொரு மொபைல் போனை Guru 1107 என்ற பெயரில் இந்தியாவில் அறிமுகம் செய்திருந்தது. "வோடபோன் '"தரும் இந்த போனை நல்ல ஒளியில் வைத்திருந்தாலே போதும். தானாகவே சார்ஜ் செய்து கொள்கிறது.
Sun Boost என்ற பெயரில் போனின் உள்ளே உள்ள ஹார்ட்வேர் மற்றும் சாப்ட்வேர் இந்த பணியினை மேற்கொள்கிறது. சாதாரண அறை ஒளி இருந்தாலே போதும். சூரிய ஒளிக்கு நேராகத்தான் வைத்து சார்ஜ் செய்திட வேண்டியது என்பது இல்லை. முழுமையாக சார்ஜ் செய்திட, சூரிய ஒளியில் 8 மணி நேரம் வைத்திருந்தால் போதும். நான்கு மணி நேரம் பேசும் சக்தியை அளிக்கும். இந்த போனில், டார்ச் லைட், எப்.எம். ரேடியோ, வண்ணத்திரை ஆகியவையும் உள்ளன.
இப்புதிய உலக ஒழுங்கில் எமக்கான இலக்கை அடையும்வரை எமக்கென்று எதிரிகள் யாரும் இல்லை - கவர்ந்து கொள்வோம் இல்லையேல் கவிழ்த்து விடுவோம்!.... சூழ்ச்சியை சூழ்ச்சியால் வெல்வோம் - எந்த அஸ்திரத்தால் நாம் வீழ்ந்தோமோ அதே அஸ்திரத்தை எமைக்காக்கும் எதிரியை தாக்கும் ஆயுதமாய் ஏந்துவோம் - எழுந்து நிற்போம். காலம் இட்ட கட்டளைப்படி - அதிஉச்ச இராஜ தந்திரம் ஒன்றே லட்சியத்தை வென்றெடுப் பதற்கான ஒற்றைத் தெரிவு - வரலாறு காட்டியுள்ள பாதையும் அதுவே அப்பாதையில் தொடர்ந்தும் பயணிப்போம் - இலட்சியத்தை வென்றெடுப்போம்!....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக