செவ்வாய், 29 டிசம்பர், 2009


அலைகள் ஓயாது....!

இதயத்தில் இனத்தின் விடுதலை நெருப்பை சுமந்து தமிழ் ஈழத்திற்காய் கடைசி மூச்சு வரை போராடி மடிந்த மாவீரர்கள் உங்களுக்கு எங்கள் வீர வணக்கம்.... தேசத்தின் சுமையை தோள்களில் சுமந்து தமிழீழ தாயகத்திற்காய் உயிர் துறந்த மக்களே உங்களுக்கும் எங்கள் வீர வணக்கம்... தமிழினம் முடிந்து போன இனமல்ல எங்கெல்லாம் தமிழன் இருக்கின்றானோ அங்கெல்லாம் கனன்று கொண்டிருக்கும் விடுதலை நெருப்பு வாழும் போதும் தலைவன் வழித்தடத்தில் வாழ்ந்து வீழும் போதும் வெல்வோம் என்றபடி வீழ்ந்த ஆயிரம் ஆயிரம் மாவீரர்களின் மனங்களில் எறிந்த நெருப்பு நீதியை மறந்த உலகத்தின் கண்களுக்கு தமிழீழம் பொய்த்துப் போன கனவாகத் தெரியலாம் சற்று தாண்டவம் ஆடி தமிழ் இனத்தையே அழித்த கொடுங்கோலாட்சி சிங்களம் அழிந்து விட்டதாக நினைக்கும் ஆனாலும் நாங்கள் ஓயாத அலைகளாய் வீசிக் கொண்டிருப்போம் எங்களை உலகம் விரைவில் புரிந்து கொள்ளும் என்றுமில்லாதவாறு எழுகின்ற தமிழினத்தின் ஒன்ரினைவே இனியொரு விடுதலையை படைக்கும் என்பதை தமிழர்கள் மனங்களில் தெரிந்து கொள்ள வேண்டும் உலக வல்லரசுகளின் ஆசீர்வாதமும் சிங்கள அரக்க தாண்டவமும் உலகின் சுதந்திரக் காற்றை சுவாசிக்கத் துடித்த ஒரு குழந்தையின் குரல் வலையினை நசுக்கி விட்டிருக்கிறது உலக வல்லரசுகளின் மௌனம் கொடுத்த அங்கீகாரம் ஒரு இனத்தை கொடுமையாக அழித்து விட்டிருக்கிறது பிரசவிக்கப் போகின்ற தமிழீழ குழந்தையின் குருதி குடித்த கொடூரத்தை எப்படி மறக்க முடியும் எப்படி மன்னிக்க முடியும் விடுதலை நெருப்பைச் சுமக்கின்ற மனங்களே உங்கள் கரங்கள் எப்போதும் ஒன்றாய் இணையட்டும் விடுதலை சுமைகளை சுமக்கின்ற தோள்களே அவை எப்போதும் வலுவாய் இருக்கட்டும் அந்நிய தேசங்களில் அலைந்து திறந்தபடியே தாயகத்தை மறந்து அப்படியே காலம் கழிக்க முடியுமா? மீண்டும் நிமிர்வோம் என்ற நம்பிக்கை எங்கள் மனங்களில் நிறையவே இருக்கிறது நமக்கான வரலாற்றை படைக்க இனி அலையாய் எழுவோம் இன்று வரை நடந்து முடிந்த துயரங்களை எல்லாம் துடைத்து விடுதலை காற்றை சுவாசிக்கும் ஒரு காலம் நமக்கு கிடைப்பதற்காய் வீறுகொண்ட தாயக கனவை மனங்களில் நிறைப்போம்
உலக வரலாற்றில் தமிழீழம் படைப்போம்
"தமிழர்களின் தாகம் தமிழீழ தாயகம்"

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக