இப்புதிய உலக ஒழுங்கில் எமக்கான இலக்கை அடையும்வரை எமக்கென்று எதிரிகள் யாரும் இல்லை - கவர்ந்து கொள்வோம் இல்லையேல் கவிழ்த்து விடுவோம்!.... சூழ்ச்சியை சூழ்ச்சியால் வெல்வோம் - எந்த அஸ்திரத்தால் நாம் வீழ்ந்தோமோ அதே அஸ்திரத்தை எமைக்காக்கும் எதிரியை தாக்கும் ஆயுதமாய் ஏந்துவோம் - எழுந்து நிற்போம். காலம் இட்ட கட்டளைப்படி - அதிஉச்ச இராஜ தந்திரம் ஒன்றே லட்சியத்தை வென்றெடுப் பதற்கான ஒற்றைத் தெரிவு - வரலாறு காட்டியுள்ள பாதையும் அதுவே அப்பாதையில் தொடர்ந்தும் பயணிப்போம் - இலட்சியத்தை வென்றெடுப்போம்!....
திங்கள், 1 மார்ச், 2010
தமிழர் தாயக கரையோரப்பகுதிகளில் காவலரண்களை நிர்மாணிக்கும் சிறீலங்கா
கிழக்கு கரையோரப்பகுதிகளில் புதியகாவலரண்கள் அமைக்கும் பணியில் சிறீலங்காப்படையினர் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் சிறீலங்காப்படையினரால் வல்வளைப்பிற்கு உட்படுத்தப்பட்ட வன்னிப்பிரதேசங்களில் புதிய பல காவலரணங்கள் சிறீலங்காப்படையினரால் அமைக்கப்படுவதுடன் வீதிசோதனையினை மேற்கொள்ளும் நோக்கிலான சேதனை சாவடிகளும் எல்லை பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் முல்லைத்தீவில் சிறீலங்கா கடற்படையினர் பாரிய காவலரண்கள் அமைத்து கனரக ஆயுதங்களை நிலைநிறுத்தியிருக்கின்றனர்.தற்போது கிழக்கின் மட்டக்களப்பு அம்பாறை வரையான கரையோரப்பகுதிகளில் புதிய காவலரண்கள் அமைக்கும் பணியில் சிறீலங்காப்படையினர் ஈடுபட்டுள்ளனர்.
குறிப்பாக அம்பாறை மாவட்டத்தின் கரையோரப்பகுதிகளில் புதியபல காவலரண்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதேவேளை கிழக்கின் கடற்கண்காணிப்பும் சிறீலங்காப்படையினரால் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கபடப்டுள்ளது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக