செவ்வாய், 27 ஏப்ரல், 2010

ஐ.நாவுக்கு தமிழர்கள் அனுப்பிய மின்னஞ்சல்கள் குப்பையில்.. ?


ஐ.நா. வானது ஐக்கிய நாடுகளாக இருப்பதாலேயே அதற்கு மக்கள் கடிதங்களை எழுதுகிறார்கள். நடவடிக்கையெடுக்குமாறு அவர்கள் கடிதங்கள் மூலம் கோரிக்கை விடுக்கின்றனர். ஆனால், அநேகமான கடிதங்கள் புறக்கணிக்கப்படுகின்றன என்று ஐ.நா.வைத் தளமாகக் கொண்ட இன்னர்சிற்றி பிரஸ் குறிப்பிட்டுள்ளது. இன்னர்சிற்றி பிரஸின் நிருபர் மத்தியூ ரஸல்லீ இது தொடர்பாக கடந்த சனிக்கிழமை தெரிவித்திருப்பதாவது; தற்போதைய உதவிச் செயலாளர் நாயகம் வெளிப்படையாகப் பேசுகிறார். பின்னணியை மட்டும் அவர் பேசவில்லை. இலங்கையின் புலம்பெயர்ந்த தமிழர்கள் அனுப்பிய மின்னஞ்சல் பற்றி அவர் குறிப்பிட்டார். "அவற்றை நான் நீக்கி விட்டேன்" என்று அவர் தெரிவித்தார். ஆனால், இன்னர்சிற்றி பிரஸ் இதனை அறிக்கையிட்டபோது அவர் ஆத்திரமடைந்தார். ஆனால், இந்த ஆட்களின் நேரம் ஏன் விரயமாக்கப்படுகிறது? ஐ.நா. விருப்பமின்மையை வெளிப்படுத்துகிறது. அண்மையில் பத்திரிகைச் சுதந்திரத்திற்கான அமைப்பான இன்ரர் அமெரிக்கன் பிரஸ் அசோசியேசன் பான் கீ மூனுக்கு கடிதமொன்றை எழுதியிருந்தது. வெனிசூலாவில் ஊடகங்கள் மற்றும் நிருபர்கள் மீதான அடக்குமுறை குறித்து எழுதியிருந்தது. அந்தக் கடிதத்தைப் பற்றிதான் ஒருபோதும் கேள்விப்பட்டிருக்கவில்லையென்று பான் கீ மூனின் பேச்சாளர் மார்ட்டின் நீசேர்கி கூறினார். பின்னர் அந்தக் கடிதம் கிடைத்திருப்பதாக அவர் நிருபர்களிடம் கூறியுள்ளார். இப்போது இக்கடிதம் கிடைத்திருக்கிறது. பான் கீ மூன் ஏதாவது பிரதிபலிப்பை வெளிப்படுத்துவாரா? என்று அவரிடம் கேட்கப்பட்டது. இல்லை என்று கூறிய நீசேர்க்கி, யுனெஸ்கோவிடம் நீங்கள் கேட்க வேண்டும் என்று தெரிவித்தார். சுதந்திரப் பத்திரிகைக் குழுவின் உப தலைவர் கொன்சலோ மரோகுயின் ஐ.நா.வுக்கு வருகைதந்தபோது இந்த விடயம் குறித்து யுனெஸ்கோ அறிந்திராமல் இருந்தது வெளிவந்தது. பான் கீ மூனிடம் இந்தக் குழுவினர் ஏதாவது உதவியைக்கூட எதிர்பார்க்க முடியாமல் இருந்தது என்பது வெளிப்படையான விடயமாகும். டி.சி.யைத் தளமாகக் கொண்ட சட்டத்துறை மாணவர்களின் அண்மைய நிகழ்வொன்றில் அரேபிய தொலைக்காட்சி நிருபர் ஒருவர் இன்னர்சிற்றி பிரஸைக் கடிந்துகொண்டார். ஐ.நா.வின் ஊழலை வெளிக்கொணர்ந்ததற்காக அவர் கடிந்தார். கதைகள் எல்லாம் உண்மை என்றும் உண்மையில் அவை யாவும் பிரத்தியேகமானவை எனவும் அவர் கூறினார். ஆனால், தனது பிராந்தியத்தில் அவர் எகிப்தைச் சேர்ந்தவர் மக்கள் ஐ.நா. மீது தமது எதிர்பார்ப்புகளை வைத்துள்ளனர் என்று அவர் தெரிவித்தார். பாலஸ்தீனம் மற்றும் தெற்கு லெபனான் தொடர்பாக அவர்கள் உதவி கோரி வருகிறார்கள். ஊழல்களை வெளிப்படுத்துவதானது அவர்களுக்கான வாய்ப்புகள் எதிர்பார்ப்புகளை பாதிக்கச் செய்கிறது என்று இன்னர்சிற்றி பிரஸ் கூறுகிறது. ஆனால், சிலசமயம் அவர்களின் எதிர்பார்ப்புகள் தொடர்பாக விசனம் ஏற்படலாம். சிலசமயம் அவர்கள் தமது நேரத்தை வீணாக்கியிருக்கலாம். ஐ.நா. உண்மையில் செயற்படும் என்று சிந்தித்திருக்கலாம். ஆனால், ஐ.நா.வின் தூரவிலகியிருக்கும் தன்மை வருடாந்தம் விரிவுபட்டு வருவதை பார்க்க முடியும். அமைதி காக்கும் குழுவின் சடுதியான வெளியேற்றம் (ஆபிரிக்காவில் கூட) மற்றும் கடிதங்கள்,மின்னஞ்சல்கள் என்பன புறக்கணிக்கப்பட்டு நீக்கப்படுவதைப் பார்த்தால் ஐ.நா. வின் தூரவிலகி நிற்கும் தன்மையை அவதானிக்க முடியும் என்று இன்னர்சிற்றி பிரஸ் குறிப்பிட்டுள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக