வியாழன், 8 ஏப்ரல், 2010

பிரேசிலை உலுக்கும் பெருமழையும் நிலச்சரிவும்

வட அமெரிக்க கண்டத்தில் உள்ள பிரேசிலில் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது,இதனால் அங்குள்ள ஏரிகள் ,குளங்கள் அனைத்தும் பொங்கி வழிகின்றன. பலத்த மழையின் காரணமாக நிலச் சரிவும் ஏற்பட்டு ரோடுகள் அடித்துச் செல்லப்பட போக்குவரத்து வசதி துண்டிக்கப் பட்டது. மின்சார கம்பிகள் அறுந்து விழுந்ததால் மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டுள்ளது. 180 இடங்களில் ஏற்பட்ட நிலச்சரிவால் 10000 வீடுகள் மண்ணுக்குள் புதைந்தன.இந்த பெருமழையால் பிரேசிலின் கியோ டி ஜெனரியோ நகரம் தான் மிகுந்த பாதிப்புக்கு உள்ளானது. வெள்ளத்தால் 100 பேர் உயிரிழந்தனர்.50 ௦பேர் படுகாயமடைந்தனர்.ஏராளமானோர் காணாமல் போனார்கள்,காணாமல் போனவர்கள் என்ன ஆனார்கள் என்பதைக் குறித்த விவரங்கள் தெரியவில்லை.மீட்ப்புப்பணியில் காவல்துறையினரும் தீயணைப்புப் படையினரும் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர். கடந்த ஜனவரியிலும் இதே போன்றதொரு வெள்ளப்பெருக்கு பிரேசிலில் ஏற்பட்டது,அப்போது பிரேசிலின் ரியோ, சாபாலோ, மினாஸ் ஜெராய்ஸ் மாநிலங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. 76 பேர் பலியானார்கள் . கட்டிடங்கள் இடிந்து சேதமடைந்தன. ரியோவிலும் துறைமுக நகரமான சாந்தோசிலும் பலத்த பாதிப்பு ஏற்பட்டு அங்கு பலர் இறந்தனர். பிரேசிலில் வரும் 2014 ஆம் ஆண்டு உலக கால்பந்து போட்டியும் 2016 இல் ஒலிம்பிக் போட்டியும் நடைபெறப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த பலத்த மழையும் ,நிலச்சரிவும் மக்களின் இயல்பு வாழ்க்கையைப் பாதித்திருப்பதோடு வரும் ஆண்டுகளில் அறிவிக்கப் பட்டபடி சர்வதேசப் போட்டிகள் அங்கு நடத்தப்படுமா எனும் சந்தேகத்தையும் எழுப்பியுள்ளது.போட்டிகளை ரத்து செய்வதா அல்லது தாமதப்படுத்தலாமா எனும் ஆலோசனையில் பிரேசில் அரசு தற்போது மூழ்கியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக