வியாழன், 14 அக்டோபர், 2010

போராளிகளில் மேலும் 500 பேர் விடுவிப்பு

புனர்வாழ்வு அளிக்கப்பட்ட முன்னாள் உறுப்பினர்கள் 500 பேர்  பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட உள்ளனர். இதற்கான வைபவம் வவுனியா கலாசார மண்டபத்தில் 15/10/ 2010 காலை நடைபெற உள்ளது  இறுதிக்கட்ட யுத்தத்தின்போது சரணடைந்த புலிகள் இயக்கச் சந்தேக நபர்கள் நாட்டில் உள்ள புனர்வாழ்வு முகாம்களில் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு வருகின்றனர்?. புனர்வாழ்வுப் பயிற்சிகளை நிறைவு செய்த இவர்கள் கட்டம் கட்டமாக இவர்களது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டு வருகின்றனர் என்று தெரிவிக்கப்படுகின்றது. அதேவேளை, நாட்டில் உள்ள புனர்வாழ்வு முகாம்களில் புனர்வாழ்வு பயிற்சிகளை நிறைவு செய்த நாலாயிரத்து ஐந்நூறு பேர் அவர்களது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக