வியாழன், 25 நவம்பர், 2010

நீங்களெங்கள் நெஞ்சமதை வென்றீர்,வாழ்கின்றீர்..


தாய் நிலத்தின்மீது தளராத காதலுடன் நின்றீர்,நெருப்பானீர்
நீங்களெங்கள் நெஞ்சமதை வென்றீர்,வாழ்கின்றீர்
கருகற்பொழுதினிலே சென்று விடிவானம் தெரிவதற்குள்
உயிரைக்கருகாக்கி களத்திலே காவியமானீர்
உங்கள் கனவுகள் என்றுமே அழியாது,
எம் மக்களின் விடுதலைக்காய் என்றும் நீங்கள்
எங்களுடன் நிற்பீர்கள்!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக