
இப்புதிய உலக ஒழுங்கில் எமக்கான இலக்கை அடையும்வரை எமக்கென்று எதிரிகள் யாரும் இல்லை - கவர்ந்து கொள்வோம் இல்லையேல் கவிழ்த்து விடுவோம்!.... சூழ்ச்சியை சூழ்ச்சியால் வெல்வோம் - எந்த அஸ்திரத்தால் நாம் வீழ்ந்தோமோ அதே அஸ்திரத்தை எமைக்காக்கும் எதிரியை தாக்கும் ஆயுதமாய் ஏந்துவோம் - எழுந்து நிற்போம். காலம் இட்ட கட்டளைப்படி - அதிஉச்ச இராஜ தந்திரம் ஒன்றே லட்சியத்தை வென்றெடுப் பதற்கான ஒற்றைத் தெரிவு - வரலாறு காட்டியுள்ள பாதையும் அதுவே அப்பாதையில் தொடர்ந்தும் பயணிப்போம் - இலட்சியத்தை வென்றெடுப்போம்!....
திங்கள், 22 பிப்ரவரி, 2010
மீண்டும் உருவாக்கப்படும் மனிதப் புதைகுழிகள்......
வவுனியா புறநகர்ப்பகுதியில் கொத்துக் கொத்தாக தமிழர்களது உடல்கள் புதைக்கப்பட்டு வருகின்றது. வவுனியா செட்டிக்குளத்திற்கு அண்மையாக உள்ள பகுதியில் உள்ள சுடுகாட்டில் தினமும் 50,100 உடல்கள் கொண்டுவரப்பட்டு மண் அகழும் பாரிய இயந்திரங்கள்(பெக்கோ) மூலம் குழிகள் தோண்டப்பட்டு ஒன்றாகப் போட்டு புதைக்கப்படுவதாக நேர்கண்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக இராணுவத்தினரால் கொண்டுவரப்படும் உடல்கள் புதைக்கப்படுவதை அடுத்து வவுனியாவில் பணியாற்றிவரும் தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் மக்களிடம் விசாரணை நடாத்திவருவதாகவும் தெரியவருகின்றது.
முள்ளிவாய்க் கால் பகுதியில் கடந்த மே மாதம் தமிழரின் வாழ்வு, கலை, கலாச்சாராம், பண்பாடு, சிதைக்கப்பட்டு எதிர்காலம் சூனியமாக்கப்பட்டதை அடுத்து சிறிலங்கா இராணுவத்தினால் கைது செய்யப்பட்ட, சரணடைந்த பல இலட்சக்கணக்கிலான மக்கள் முட்கம்பி வதைமுகாமில் சிறை வைக்கப்பட்டும் சரணடைந்த போராளிகள், சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட சுமார் பதினோராயிரத்திற்கு மேற்பட்டோர்கள் சிறப்பு தடுப்பு முகாம்களில் தனிமைப்படுத்தப்பட்டும் உள்ள நிலையில் அண்மை நாட்களாக வவுனியா புறநகர் பகுதியில் கொத்து கொத்தாக உடல்கள் புதைக்கப்பட்டு வருவதை அடு மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.
எதுவித தொடர்புகள் ஏதுமற்ற நிலையில் சிறப்பு முகாம் என்ற போர்வையில் தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் பதினோராயிரத்திற்கு மேற்பட்ட இளைஞர் யுவதிகளது குடும்பத்தவர்கள், உறவினர்கள் இதனால் மிகவும் கவலையும் அதிர்ச்சியும் அடைந்துள்ளனர். தமது உறவுகளது நிலை தெரியாது இருக்கும் நிலையில் அவர்களுக்கு என்ன நடந்திருக்கும் என பரிதவித்துக் கொண்டுள்ளனர்.
என்ன கொடுமை உலகுக்கு தமிழர்களே சொல்ல போராடுங்கள் எப்படி தமிழர்கள் மறைமுகமாக் எந்தவித ஆரவராம் இன்றி கொள்ளபடுகிறான் தமிழ்நாட்டு உறவுகளே புலம்பெயர் தமிழர்களே ஈழ தமிழர்களை காப்பாற்றபோராடுங்கள்
ஈழமைந்தன்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக