திங்கள், 15 மார்ச், 2010

சிறீலங்கா அரசு 1,422 ஊனமுற்றவர்களையும், 397 சிறுவர்களையும் தடுத்து வைத்துள்ளது

சிறீலங்கா அரசின் தடுப்புக்காவலில் 11,000 இற்கு மேற்பட்ட விடுதலைப்புலிகள் உள்ளனர். அவர்களிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவர்களில் சிறப்பு பயிற்சி பெற்றவர்களும் உள்ளனர். பயிற்சி பெற்ற 19 தொடக்கம் 24 வயதுள்ள 4,580 பேரும், 25 தொடக்கம் 34 வயதுள்ள 4,220 பேரும் தடுப்பு முகாம்களில் உள்ளனர். தடுப்புக்காவலில் உள்ள 11,000 பேரில் 4,953 பேர் கடந்த இரு வருடங்களில் விடுதலைப்புலிகள் அமைப்பில் இணைந்து கொண்டவர்கள். அவர்களில் பெருமளவானவர்கள் வன்னி பகுதியை சேர்ந்தவர்கள். மேலும் அவர்களில் 1,422 பேர் ஊனமுற்றவர்கள். நான்கு பேர் முற்றாக கேட்கும் சக்தியை இழந்துள்ளனர். ஒருவர் பகுதியாக கேட்கும் சக்தியை இழந்துள்ளார். மூவர் முற்றாக பார்வையை இழந்துள்ளனர். 144 பேர் பகுதியாக பார்வையை இழந்துள்ளனர். ஐந்து பேர் இரு கால்களையும் இழந்துள்ளனர். 686 பேர் ஒரு காலை இழந்துள்ளனர். 17 பேர் இரு கைகளையும் இழந்துள்ளனர். 387 பேர் ஒரு கையை இழந்துள்ளனர். இந்த வருடத்தின் மார்ச் மாதம் 1 ஆம் நாளில் இருந்து 10,781 பேர் 17 தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 8,791 பேர் ஆண்களும், 1,990 பேர் பெண்களும், 397 சிறுவர்களும் உள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக