செவ்வாய், 30 மார்ச், 2010

பிரித்தானியா வருத்தம் தெரிவிப்பு

இலங்கையின் போர் நிறுத்த காலத்தின் போது இலங்கைக்கு ஆயுத ஏற்றுமதியை மேற்கொண்டமைக்காக பிரித்தானிய, பொதுச்சபை தமது வருத்தத்தை வெளியிட்டுள்ளது. அதேநேரம், ஆயுத ஏற்றுமதி தொடர்பிலான 9 அனுமதிப்பத்திரங்களை பிரித்தானிய ரத்துச்செய்தமை தொடர்பிலும் பொதுச்சபை தமது வரவேற்பை வெளியிட்டுள்ளது. பொதுச்சபையில் உரையாற்றிய, பிரித்தானியாவின் பொதுநலவாய வெளியுறவுத்துறை அமைச்சர், தமது நாடு இலங்கையின் நிலைமையை கவனமாக ஆராய்ந்து வருவதாக தெரிவித்தார். இதேவேளை தமது கருத்தை வெளியிட்டுள்ள, ஆயுத பரிகரண திணைக்களத்தின் உதவி தலைவர் டேவிட் ஹோல், இலங்கையின் கடந்த கால நடைமுறைகளை கொண்டு எதிர்க்காலத்தில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனக்குறிப்பிட்டார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக