செவ்வாய், 20 ஏப்ரல், 2010

புலனாய்வு பிரிவு உயர்பதவிகளில் மாற்றம்..

காவல்துறை புலனாய்வுபிரிவு உயர்பதவிகளில் மாற்றம் ஏற்படுத்தப் பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் காவல்துறை உயர்பதவிகளில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது நான்கு பிரதிக் காவல்துறை மா அதிபர்கள் மற்றும் நான்கு சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர்கள் உள்ளிட்ட 64 சிரேஷ்ட காவல்துறை அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதுவரை காலமும் புலனாய்வு பிரிவின் பொறுப்பதிகாரியாக செயற்பட்டு வந்த பிரதிக் காவல்துறை மா அதிபர் நந்தன முணசிங்க கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவிற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார் வடமேல் மாகாண பிரதிக் காவல்துறை மா அதிபராக கடமையாற்றிய தயா சமரவீர புலனாய்வு பிரிவின் பொறுப்பதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார் புலனாய்வு பிரிவில் கடமையாற்றிய பல முக்கிய அதிகாரிகள் வேறும் பிரிவுகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக