இப்புதிய உலக ஒழுங்கில் எமக்கான இலக்கை அடையும்வரை எமக்கென்று எதிரிகள் யாரும் இல்லை - கவர்ந்து கொள்வோம் இல்லையேல் கவிழ்த்து விடுவோம்!.... சூழ்ச்சியை சூழ்ச்சியால் வெல்வோம் - எந்த அஸ்திரத்தால் நாம் வீழ்ந்தோமோ அதே அஸ்திரத்தை எமைக்காக்கும் எதிரியை தாக்கும் ஆயுதமாய் ஏந்துவோம் - எழுந்து நிற்போம். காலம் இட்ட கட்டளைப்படி - அதிஉச்ச இராஜ தந்திரம் ஒன்றே லட்சியத்தை வென்றெடுப் பதற்கான ஒற்றைத் தெரிவு - வரலாறு காட்டியுள்ள பாதையும் அதுவே அப்பாதையில் தொடர்ந்தும் பயணிப்போம் - இலட்சியத்தை வென்றெடுப்போம்!....
செவ்வாய், 20 ஏப்ரல், 2010
இந்திய அரசின் ..................?
தமிழர்களைக் கொன்றுகுவித்த சிறீலங்கா படைகளுக்கான இந்திய அரசின் படைத்துறை உதவியின் ஒரு கட்டமாக, சிறீலங்கா காவல்துறையினருக்கு பயிற்சி வழங்கப்பட இருப்பதுடன், இவ்வாறு பயிற்சி பெறும் காவல்துறையினர் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இந்தியத் தலைநகர் டெல்லியைச் சென்றடைந்துள்ளனர்.
சிறீலங்கா காவல்துறை உயர் அத்தியட்சகர் எல்.ஆர்.விஜயசிங்க தலைமையில் சென்றுள்ள காவல்துறையினர் 50 பேருக்கு முக்கியஸ்தர்களைப் பாதுகாப்பது பற்றிய பயிற்சி 3 மாத காலத்திற்கு வழங்கப்படவுள்ளது.
ஹர்யானா மாநிலத்தில் வழங்கப்படவுள்ள இந்தப் பயிற்சியைப் பெறும் சிறீலங்கா காவல்துறையினர் நேற்று டெல்லி வானூர்தி நிலையத்தின் ஊடாகப் பயணித்துள்ளனர்..
தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களது அகவை முதிர்ந்த தாயாரால் தமக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாகத் தெரிவித்து, சிகிச்சைக்காக உள்நுழைய அனுமதி மறுத்துள்ள இந்திய அரசு, மறுபுறத்தில் தமிழர்களைக் கொன்று குவித்த சிறீலங்கா படைகளுக்கு படைத்துறை உதவிகளை வழங்கி வருகின்றது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக