இப்புதிய உலக ஒழுங்கில் எமக்கான இலக்கை அடையும்வரை எமக்கென்று எதிரிகள் யாரும் இல்லை - கவர்ந்து கொள்வோம் இல்லையேல் கவிழ்த்து விடுவோம்!.... சூழ்ச்சியை சூழ்ச்சியால் வெல்வோம் - எந்த அஸ்திரத்தால் நாம் வீழ்ந்தோமோ அதே அஸ்திரத்தை எமைக்காக்கும் எதிரியை தாக்கும் ஆயுதமாய் ஏந்துவோம் - எழுந்து நிற்போம். காலம் இட்ட கட்டளைப்படி - அதிஉச்ச இராஜ தந்திரம் ஒன்றே லட்சியத்தை வென்றெடுப் பதற்கான ஒற்றைத் தெரிவு - வரலாறு காட்டியுள்ள பாதையும் அதுவே அப்பாதையில் தொடர்ந்தும் பயணிப்போம் - இலட்சியத்தை வென்றெடுப்போம்!....
திங்கள், 5 ஏப்ரல், 2010
வரதராஜா பெருமாளுக்கு வடமாகாண ஆளுநர் பதவி
நாடு திரும்பியுள்ள வரதராஜா பெருமாளுக்கு அரசாங்கத்தின் பொறுப்புள்ள பதவியொன்றை வழங்குவதற்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச திட்டமிட்டு வருவதாக தெரியவருகிறது. இதனடிப்படையில், வடக்கில் மாகாண சபையொன்றை நிறுவி, அதன் முதலமைச்சர் பதவியை வரதராஜ பெருமாளுக்கு வழங்க மகிந்த அதிகாரம் ஆலோசித்துள்ளதாக தெரியவருகிறது.
13 வது அரசியல் திருத்தத்தை அமுல்படுத்தி வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு அதிகாரத்தை வழங்குமாறு இந்தியா தற்போது அழுத்தம் கொடுத்து வருவதன் காரணமாகவே ஜனாதிபதி மஹிந்த இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளதாகத் தெரியவருகிறது.
ஆளுனர் பதவி அல்லது முதலமைச்சர் பதவியின் பின்னர் சிங்களக் குடியேற்றங்களைத் துரிதப்படுத்தி வட கிழக்கு பிரதேசங்களின் இனச்செறிவை சீர்குலைக்கும் முயற்சிகளை இதே அரச துணைக்குழுக்களுடன் இணைந்து மேற்கொள்ளவும் இந்தியா ஆலோசனை வழங்கியுள்ளதாக கொழும்பிலிருந்து அரசியல் ஆய்வாளர் ஒருவர் கருத்துத்தெரிவித்துள்ளார்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக